கிரிக்கெட்

கே.எல்.ராகுல், ஜடேஜா வருகையால் இந்திய அணி வலிமை பெறும்- சேப்பல் சொல்கிறார்

Published On 2024-02-12 05:21 GMT   |   Update On 2024-02-12 05:21 GMT
  • இந்தியா ஒரு வலிமையான அணியாகும்.
  • மோசமான பேட்டிங் காரணமாகவே ஷ்ரேயாஸ் அய்யர் எஞ்சிய டெஸ்ட் தொடரில் இருந்து நீக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

புதுடெல்லி:

இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் கே.எல்.ராகுல், ஜடேஜா ஆகியோர் காயத்தால் விளையாடவில்லை. இருவரும் 3-வது டெஸ்ட் போட்டிக்கான அணியில் இடம்பெற்றுள்ளனர். அதே நேரத்தில் ஷ்ரேயாஸ் அய்யர் எஞ்சிய 3 டெஸ்டில் ஆட வில்லை.

இந்த நிலையில் கே.எல்.ராகுல், ஜடேஜா வருகையால் இந்திய அணி வலிமை பெறும் என்று ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் இயன் சேப்பல் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

இந்தியா ஒரு வலிமையான அணியாகும். அவர்களுக்கு திறமையான கேப்டன் ரோகித் சர்மா இருக்கிறார். காயத்தில் இருந்து குணமடைந்த ஜடேஜா மற்றும் கே.எல்.ராகுல் அணிக்கு திரும்பி இருக்கிறார்கள். இருவரும் இந்திய அணியை வலிமைப்படுத்துவார்கள்.

ஆனால் விராட்கோலி எஞ்சிய 3 டெஸ்டிலும் விளையாடமாட்டார் என்பது இந்திய அணிக்கு இழப்பே. தேர்வு குழுவினர் ஷ்ரேயாஸ் அய்யரின் பேட்டிங் திறமையை மிகைப்படுத்தி மதிப்பிடுவதை நிறுத்திவிட்டு, குல்தீப் யாதவின் பந்துவீச்சு திறனை அதிகமாக மதிப்பிட கற்றுக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு இயன் சேப்பல் கூறியுள்ளார்.

மோசமான பேட்டிங் காரணமாகவே ஷ்ரேயாஸ் அய்யர் எஞ்சிய டெஸ்ட் தொடரில் இருந்து நீக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

Tags:    

Similar News