கிரிக்கெட் (Cricket)
கொரோனாவில் இருந்து மீண்ட ராகுல் டிராவிட்- இந்திய அணியுடன் இணைந்தார்
- கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் வந்ததை அடுத்து அவர் துபாய்க்கு சென்றுள்ளார்.
- இடைக்கால பயிற்சியாளராக இருந்த லட்சுமணன் பெங்களூருக்கு திரும்பினார்.
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதனால் ஆசிய கோப்பையில் விளையாடவுள்ள சென்ற இந்திய அணியுடன் ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு செல்லவில்லை. இதையடுத்து இடைக்கால பயிற்சியாளராக லட்சுமணன் செயல்பட்டார்.
இந்த நிலையில் ராகுல் ராவிட் கொரோனா பாதிப்பில் இருந்து தற்போது குணம் அடைந்துள்ளாார். அவரது கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் வந்ததை அடுத்து அவர் துபாய்க்கு சென்று இந்திய அணியுடன் இணைந்துள்ளார். இடைக்கால பயிற்சியாளராக இருந்த லட்சுமணன் பெங்களூருக்கு திரும்பினார்.