கிரிக்கெட்

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் கேப்டனாக ஷிகர் தவான் நியமனம்?

Published On 2022-09-12 05:52 GMT   |   Update On 2022-09-12 05:52 GMT
  • தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக இந்திய அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது.
  • இந்த ஒருநாள் தொடரில் விவிஎஸ் லட்சுமன் இடைக்கால பயிற்சியாளராக செயல்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி ஆசிய கோப்பை போட்டியில் சூப்பர் 4 சுற்றில் தோல்வி அடைந்து வெளியேறியது. இறுதி போட்டியில் இலங்கை-பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் இலங்கை அணி 6-வது முறையாக கோப்பையை கைப்பற்றியது.

இந்திய அணி அடுத்ததாக ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான தொடரில் மோத உள்ளது. முதலில் இந்தியா 3 டி20 போட்டிகளில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக விளையாடுகிறது. இதனை தொடர்ந்து தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் விளையாடுகிறது.

தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக இந்திய அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் கேப்டனாக ஷிகர் தவான் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. உலகக்கோப்பையை கருத்தில் கொண்டு ரோகித் சர்மா உள்பட டி20 போட்டிகளில் விளையாடும் முக்கிய வீரர்களுக்கு ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிய வந்துள்ளது.

இந்த ஒருநாள் தொடரில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டிற்கு ஓய்வு அளிக்கப்பட்டு விவிஎஸ் லட்சுமன் இடைக்கால பயிற்சியாளராக செயல்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Tags:    

Similar News