கிரிக்கெட்
null

ஏமாற்று வேலையா? நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பாண்டிங்- கங்குலி: வைரலாகும் வீடியோ

Published On 2024-03-29 07:29 GMT   |   Update On 2024-03-29 08:31 GMT
  • ஜோஸ் பட்லர், ட்ரெண்ட் போல்ட், சிம்raன் ஹெட்மயர் ஆகிய 3 வெளிநாட்டு வீரர்களை மட்டுமே ராஜஸ்தான் தங்களுடைய பிளேயிங் லெவனில் தேர்ந்தெடுத்தது.
  • சிம்ரன் ஹெட்மயருக்கு பதிலாக தென் ஆப்பிரிக்காவின் நன்ரே பர்கரை இம்பேக்ட் வீரராக ராஜஸ்தான் பயன்படுத்தியது.

ஐபிஎல் தொடரின் 9-வது லீக் போட்டியில் டெல்லி- ராஜஸ்தான் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் 185 ரன்கள் குவித்தது. அதனை தொடர்ந்து விளையாடிய டெல்லி அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்கள் எடுத்தது. இதனால் ராஜஸ்தான் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

முன்னதாக இந்த போட்டியில் ஜோஸ் பட்லர், ட்ரெண்ட் போல்ட், சிம்ரோன் ஹெட்மயர் ஆகிய 3 வெளிநாட்டு வீரர்களை மட்டுமே ராஜஸ்தான் தங்களுடைய பிளேயிங் லெவனில் தேர்ந்தெடுத்தது. அதைத் தொடர்ந்து பேட்டிங் இன்னிங்ஸ் முடித்ததும் வெஸ்ட் இண்டீஸின் சிம்ரன் ஹெட்மயருக்கு பதிலாக தென் ஆப்பிரிக்காவின் நன்ரே பர்கரை இம்பேக்ட் வீரராக ராஜஸ்தான் பயன்படுத்தியது.

ஆனால் முதல் ஓவரின் 5-வது பந்தில் முடிவில் களத்தில் இருந்த இந்திய வீரர் சுபம் துபேவுக்கு பதிலாக வெஸ்ட் இண்டீஸ் வீரர் ரோவ்மன் போவலை சப்ஸ்டிடியூட் வீரராக ஃபீல்டிங் செய்ய வருமாறு ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் அழைத்தார். அதனால் அதிருப்தியடைந்த டெல்லி அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் இது குறித்து 4-வது நடுவரிடம் கேள்வி எழுப்பினார்.

குறிப்பாக பிளேயிங் லெவனில் 3 வெளிநாட்டு வீரர்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட்ட நிலையில் இப்போது மட்டும் எப்படி 4 வெளிநாட்டு வீரர்கள் ஃபீல்டிங் செய்ய முடியும்? என்று பாண்டிங் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளிப்பதற்காக 4-வது அம்பையர் வேகமாக ஓடி வந்தார். அவரிடம் டெல்லி அணியின் இயக்குனர் சௌரவ் கங்குலியும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதற்கு சஞ்சு சாம்சன் விதிமுறைக்கு உட்பட்டு தான் ரோவ்மன் போவலை ஃபீல்டிங் செய்ய வைத்தார் என்பதை அவர்களிடம் 4-வது நடுவர் விதிமுறை தாளை காண்பித்து விளக்கினார்.

அதாவது 1.2.6 விதிமுறைப்படி பிளேயிங் லெவனில் நான்குக்கும் குறைவான வெளிநாட்டு வீரர்கள் தேர்வு செய்யப்பட்டிருக்கும் பட்சத்தில் வேறொரு வெளிநாட்டு வீரர் மற்றொரு எந்த வீரருக்கு பதிலாகவும் சப்ஸ்டியூட் வீரராக செயல்பட முடியும். எனவே அந்த விதிமுறைப்படி ராஜஸ்தான் அணி எந்த தவறும் செய்யவில்லை என்று 4-வது நடுவர் விளக்கி விளக்கம் கொடுத்ததால் பாண்டிங் மற்றும் கங்குலி ஆகியோர் அமைதியானார்கள்.  

Tags:    

Similar News