கிரிக்கெட்

ராஞ்சி டெஸ்ட்: இங்கிலாந்து டாஸ் வென்று பேட்டிங் தேர்வு

Published On 2024-02-23 03:41 GMT   |   Update On 2024-02-23 03:41 GMT
  • இங்கிலாந்து அணியில் இரண்டு மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
  • வுட், ரேஹன் ஆகியோருக்குப் பதிலாக ராபின்சன், பஷிர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் ராஞ்சியில் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.

முதல் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. அதன்பின் நடைபெற்ற இரண்டு போட்டிகளையும் இந்தியா அடுத்தடுத்து வென்று தொடரில் 2-1 முன்னிலை வகிக்கிறது.

இந்திய அணியில் பும்ரா இடம் பெறவில்லை. அவருக்குப் பதிலாக ஆகாஷ் தீப் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

Tags:    

Similar News