கிரிக்கெட்

குஜராத் அணிக்கு எதிராக ராஜஸ்தான் தோல்வி- சஞ்சு சாம்சனுக்கு அபராதம்

Published On 2024-04-11 06:40 GMT   |   Update On 2024-04-11 06:40 GMT
  • ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் குஜராத்- ராஜஸ்தான் அணிகள் மோதின.
  • இந்த போட்டியில் கடைசி பந்தில் குஜராத் அணி வெற்றி பெற்றது.

ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் குஜராத்- ராஜஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன் படி முதலில் ஆடிய ராஜஸ்தான் அணி, பராக் மற்றும் சாம்சனின் அதிரடியால் 20 ஓவரில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 196 ரன்கள் எடுத்தது.

இதனையடுத்து களமிறங்கிய குஜராத் அணி, தொடக்கம் சிறப்பாக அமையவில்லை என்றாலும் ஃபினிஷிங் அற்புதமாக அமைந்தது. கடைசி ஓவரில் குஜராத் அணிக்கு 15 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் களத்தில் இருந்த ரஷித்கான் அதிரடியாக விளையாடி வெற்றி பெற வைத்தார். இதன் மூலம் நடப்பு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணி தனது முதல் தோல்வியை பதிவு செய்தது.

இந்த போட்டியில் மெதுவாக பந்து வீசியதற்காக ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News