நடுவரை விமர்சித்ததற்காக நிகோலஸ் பூரனுக்கு அபராதம்- ஐசிசி நடவடிக்கை
- வெஸ்ட் இண்டீஸ் அணி 18.5 ஓவரில் 155 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
- போட்டிக் கட்டணத்தில் இருந்து 15 சதவீதம் அபராதம் விதிப்பு.
இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 2-வது டி20 போட்டி கயானாவில் நேற்று நடந்தது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் ஆடிய இந்திய அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 152 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து, வெஸ்ட் இண்டீஸ் அணி 153 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது. இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் அணி 18.5 ஓவரில் 155 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அத்துடன் டி20 தொடரில் 2-0 என முன்னிலை பெற்றது.
இந்நிலையில், இந்த போட்டியின்போது நடுவரை விமர்சித்த குற்றத்திற்காக வெஸ்ட் இண்டீஸ் அணியில் நட்சத்திர ஆட்டக்காரரும், விக்கெட் கீப்பருமான நிகோலஸ் பூரனுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் போட்டிக் கட்டணத்தில் இருந்து 15 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது.
போட்டியின்போது, ஐசிசி விதிகளை மீறியதால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளத குறிப்பிடத்தக்கது.