கிரிக்கெட்

இலங்கை - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2-வது ஒருநாள் போட்டி மழையால் ரத்து

Published On 2023-03-28 05:17 GMT   |   Update On 2023-03-28 05:17 GMT
  • முதல் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அபார வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது.
  • இவ்விரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி வரும் 31-ம் தேதி நடைபெறுகிறது.

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இலங்கை கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அபார வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது.

இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் போட்டி இன்று கிறிஸ்ட்சர்ச் நகரில் நடைபெறுவதாக இருந்தது. ஆனால், டாஸ் போடுவதற்கு முன்னரே அங்கு மழை பெய்ததால் டாஸ் போடாமல் ஆட்டம் கைவிடப்பட்டது.


இவ்விரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி வரும் 31-ம் தேதி ஹாமில்டன் நகரில் நடைபெறுகிறது. தொடரை இழக்காமல் இருக்க அந்த போட்டியில் கட்டாயம் வெற்றி பெற வேண்டும் என்ற நெருக்கடியில் இலங்கை அணி உள்ளது.

Tags:    

Similar News