கிரிக்கெட் (Cricket)

பீல்டிங்கின்போது காயம்... வேதனையுடன் வெளியேறிய கே.எல்.ராகுல்

Published On 2023-05-01 21:03 IST   |   Update On 2023-05-01 21:03:00 IST
  • பவுண்டரி சென்ற பந்தை தடுக்கும் முயற்சியில் வேகமாக ஓடியபோது காயமடைந்தார்
  • காயத்தின் தன்மை குறித்து பரிசோதனைக்குப் பிறகே தெரியவரும்.

லக்னோ:

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று லக்னோவில் நடைபெறும் ஆட்டத்தில் கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடுகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

போட்டியின் இரண்டாவது ஓவரில் கே.எல்.ராகுல் காயமடைந்தார். அந்த ஓவரின் கடைசி பந்தை டு பிளசிஸ் அடிக்க, பந்து பவுண்டரியை நோக்கி பாய்ந்தது. அதை தடுக்கும் முயற்சியில் வேகமாக ஓடியபோது கே.எல்.ராகுலின் வலது தொடையில் தசைப்பிடிப்பு ஏற்பட்டு  தரையில் சரிந்தார். வலியால் துடித்த அவரால் எழுந்து நடக்க முடியவில்லை. பின்னர், அணியின் பிசியோ மற்றும் ரிசர்வில் இருந்த சக வீரரின் உதவியுடன் மைதானத்தை விட்டு வெளியேறினார்.

காயத்தின் தன்மை குறித்து பரிசோதனைக்குப் பிறகே தெரியவரும். அதன்பிறகே, இப்போட்டியில் அவர் தொடர்ந்து ஆடுவாரா? என்பது தெரியவரும். தசை கிழிந்திருந்தால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் அவர் பங்கேற்பது கடினம்.

Tags:    

Similar News