கிரிக்கெட் (Cricket)
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை தொட்ட வருண் சக்கரவர்த்தி
- 3வது டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றது
- இப்போட்டியில் சிறப்பாக பந்துவீசிய வருண் சக்கரவர்த்தி 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இந்தியா, தென் ஆப்பிரிக்கா இடையிலான டி20 தொடரின் 3-வது போட்டி தர்மசாலாவில் நேற்று நடைபெற்றது.
இப்போட்டியில் முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்கா 20 ஓவரில் 117 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இதை அடுத்து ஆடிய இந்தியா 15.5 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 120 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
இப்போட்டியில் சிறப்பாக பந்துவீசிய வருண் சக்கரவர்த்தி 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டியில் வருண் சக்கரவர்த்தி 50 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.
32 போட்டிகளில் விளையாடியுள்ள வருண் சக்கரவர்த்தி இந்த மைல்கல்லை அதிவேகமாக தொட்ட 2 ஆவது வீரர் என்ற சாதனையை படைத்தார்.
குல்தீப் யாதவ் 30 போட்டிகளில் 50 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.