கிரிக்கெட்

3-இலக்க மைல்கல்லை சிக்சரால் தொட்டவர்கள் பட்டியலில் இணைந்த ஜெய்ஸ்வால்

Published On 2024-02-03 09:54 GMT   |   Update On 2024-02-03 10:46 GMT
  • டெஸ்ட் மேச்களில் 15 இந்திய வீரர்கள் சிக்சர் அடித்து 100-ஐ கடந்துள்ளார்கள்
  • ஜெய்ஸ்வால், டாம் ஹார்ட்லியின் பந்தில் சிக்சர் அடித்து 100 ரன்களை கடந்தார்

டெஸ்ட் மற்றும் ஒரு நாள் சர்வதேச போட்டிகளில் ஒரு பேட்ஸ்மேன் 100 ரன்கள் குவிப்பது அவருக்கும் அவரது நாட்டிற்கும், கிரிக்கெட் ரசிகர்களுக்கும் மிகவும் பெருமையை தரும் நிகழ்வு.

90 ரன்களை தாண்டிய நிலையில், பேட்ஸ்மேன்கள், 100 ரன்களை குறி வைத்து நிதானமாக விளையாட முற்படுவது இயற்கை.

தவறாக ஆடி விக்கெட்டை பறிகொடுக்காமல் இருக்கவும், 4 அல்லது 6 அடிக்க முற்பட்டு விக்கெட்டை இழக்காமல் இருக்கவும் அதிக கவனம் எடுத்து கொள்வார்கள்.

அபூர்வமாக ஒரு சில பேட்ஸ்மேன்கள், 90களை கடந்தாலும், பதட்டமின்றி, துணிச்சலுடன் சிக்சர் அடித்து முக்கிய 3 இலக்க மைல்கல்லான 100-ஐ கடப்பதுண்டு.

டெஸ்ட் போட்டிகளில் 90களை தாண்டி விளையாடும் போது, சிக்ச்ர் அடித்து 100-ஐ கடந்த இந்திய வீரர்கள், 15 பேர் உள்ளனர்.

சச்சின் டெண்டுல்கர் (6 முறை), ரோகித் சர்மா (3 முறை), கவுதம் கம்பீர் (2 முறை) கே எல் ராகுல் (2 முறை), ரிஷப் பண்ட் (2 முறை) ஆகியோருடன் பாலி உம்ரிகர், கபில் தேவ், முகமது அசாருதீன், ராகுல் டிராவிட், வீரேந்தர் சேவாக், இர்ஃபான் பத்தான், மகேந்திர சிங் டோனி, ஹர்பஜன் சிங், ஆர் அஸ்வின் மற்றும் சேத்தேஸ்வர் புஜாரா ஆகியோர் தலா 1 முறை நேரடியாக சிக்சர் அடித்து 100-ஐ தொட்ட இந்திய வீரர்கள்.

பிப்ரவரி 2 அன்று விசாகப்பட்டினம் ராஜசேகர ரெட்டி மைதானத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்திற்கான 2-வது டெஸ்ட் மேட்சில், இந்திய இடது கை பேட்ஸ்மேன் யஷஸ்வி ஜெய்ஸ்வால் (Yashaswi Jaiswal), டாம் ஹார்ட்லியின் பந்தில் சிக்சர் அடித்து நூறு ரன்களை குவித்தார்.

இப்போட்டியில், ஜெய்ஸ்வால், 151 பந்துகளில் சென்சுரி அடித்தது குறிப்பிடத்தக்கது.

இதன் மூலம் சிக்சர் அடித்து 100-ஐ கடந்த இந்திய வீரர்களின் பட்டியலில் 16-வது இடத்தை பிடித்தார், ஜெய்ஸ்வால்.

Tags:    

Similar News