கிரிக்கெட்

டோனிக்காக காத்திருந்த ரசிகர்கள்: பிராங்க் செய்த ஜடேஜா-வைரலாகும் வீடியோ

Published On 2024-04-09 05:46 GMT   |   Update On 2024-04-09 05:46 GMT
  • சேப்பாக்கத்தில் சிஎஸ்கே, கேகேஆர் அணிகளுக்கு இடையிலான போட்டி நேற்று நடந்தது.
  • இதில் சிஎஸ்கே அணி அபார வெற்றி பெற்றது.

சென்னை:

சென்னை சேப்பாக்கத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி நேற்று நடந்தது.

முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 20 ஓவரில் 137 ரன்கள் எடுத்தது. கேப்டன் ஷ்ரேயஸ் அய்யர் 34 ரன்கள் எடுத்தார்.

சென்னை அணி சார்பில் ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.

இதையடுத்து, 138 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி களமிறங்கியது.

அணியின் வெற்றிக்கு 3 ரன்கள் தேவை என்ற நிலையில் இருந்தபோது ஷிவம் துபே ஆட்டம் இழந்தார். அதன்பின், டோனி களம் இறங்குவார் என அனைத்து ரசிகர்களும் எதிர்பார்த்த வேளையில், ட்ரெஸ்சிங் ரூமில் இருந்து ரவீந்திர ஜடேஜா சிரித்தபடியே பேட்டினை எடுத்துக்கொண்டு மைதானத்திற்குள் நுழைய முயலுவதுபோல சென்று பின் திரும்பவும் ட்ரெஸ்சிங் ரூமிற்கு உள்ளே சென்றார்.

இதனைப் பார்த்த சக சி.எஸ்.கே. வீரர்கள் மற்றும் ரசிகர்களின் சிரிப்பலையில் அரங்கம் அதிர்ந்தது.

சிறிது நேரத்தில் வெளியே வந்த மகேந்திர சிங் டோனிக்கு அரங்கமே அதிரும் அளவுக்கு ரசிகர்கள் கரகோஷங்களை எழுப்பி தங்களது உற்சாக வரவேற்பினை அளித்தனர்.

இதுதொடர்பான காட்சிகளை டிரெஸ்சிங் ரூமில் இருந்து மேலே இருக்கையில் அமர்ந்திருந்த ரசிகர் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட, அது வைரலாகி வருகிறது.

Tags:    

Similar News