கிரிக்கெட்
null

முதல் டி20 போட்டி.. இந்திய அணிக்கு 140 ரன்களை இலக்காக நிர்ணயித்தது அயர்லாந்து

Published On 2023-08-18 15:56 GMT   |   Update On 2023-08-18 16:33 GMT
  • அயர்லாந்து அணிக்கு பேரி மெக்கார்தி 33 பந்துகளில் 51 ரன்களை விளாசினார்.
  • இந்திய அணி சார்பில் ஜஸ்பிரித் பும்ரா இரண்டு விக்கெட்களை கைப்பற்றினார்.

இந்திய கிரிக்கெட் அணி அயர்லாந்தில் பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. கேப்டன் ஹர்திக் பாண்ட்யா, சுப்மன் கில், சூர்யகுமார் யாதவ், குல்தீப் யாதவ், சஹல் உள்ளிட்ட முன்னணி வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

ஜஸ்பிரித் பும்ரா தலைமையிலான இந்திய அணியில் ருதுராஜ் கெய்க்வாட், ஜெய்ஸ்வால், திலக் வர்மா, ரிங்கு சிங், வாஷிங்டன் சுந்தர், ஷிவம் துபே, ஷபாஸ் அகமது, சஞ்சு சாம்சன், ஜிதேஷ் ஷர்மா, ரவி பிஷ்னோய், பிரசித் கிருஷ்ணா, அர்ஷ்தீப்சிங், முகேஷ்குமார், அவேஷ்கான் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். இவர்கள் தவிர ரிங்கு சிங் மற்றும் ப்ரஷித் கிருஷ்ணா அறிமுகமாகி உள்ளனர்.

 

முதல் டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் ஆடிய அயர்லாந்து அணிக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் துவக்க வீரர்கள் ஆன்டி பால்பிர்னி மற்றும் பால் ஸ்டிர்லிங் முறையே 4 மற்றும் 11 ரன்களில் ஆட்டமிழந்தனர்.

இவர்களை தொடர்ந்து களமிறங்கிய லோர்கன் டக்கர் ரன் ஏதும் எடுக்காமல் பெவிலியன் திரும்பினார். அடுத்து வந்த ஹாரி டெக்டர் 9 ரன்களில் அவுட் ஆக, கர்டிஸ் கேம்ஃபர் மட்டும் 33 பந்துகளில் 39 ரன்களை விளாசினார். இதன் மூலம் அந்த அணியின் ஸ்கோர் வேகமாக அதிகரித்தது. அடுத்து வந்த வீரர்கள் வந்த வேகத்தில் அவுட் ஆக, பேரி மெக்கார்தி 33 பந்துகளில் 51 ரன்களை விளாசினார். இவரது அதிரடி காரணமாக அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் ஏழு விக்கெட்களை இழந்து 139 ரன்களை சேர்த்தது.

இந்திய சார்பில் நீண்ட இடைவெளிக்கு பிறகு களமிறங்கிய ஜஸ்பிரித் பும்ரா 4 ஓவர்களில் 24 ரன்களை கொடுத்து 2 விக்கெட்களை கைப்பற்றினார். இதே போன்று ப்ரஷித் கிருஷ்ணா மற்றும் ரவி பிஷ்னோய் தலா இரண்டு விக்கெட்களை வீழ்த்தினர். அர்தீப் சிங் ஒரு விக்கெட் வீழ்த்தினார்.

Tags:    

Similar News