search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "India vs Ireland"

    • முதலாவது ஆட்டத்தை போல் இந்த ஆட்டத்திலும் ஆதிக்கம் செலுத்தி தொடரை வெல்ல இந்திய அணி தீவிர முனைப்பு காட்டும்.
    • இதுவரை இந்தியாவுக்கு எதிராக மோதிய 6 இருபது ஓவர் போட்டியிலும் தோல்வியை சந்தித்து இருக்கும் அயர்லாந்து அணி முதல் வெற்றியை பெற கடுமையாக போராடும்.

    டப்ளின்:

    ஜஸ்பிரித் பும்ரா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடி வருகிறது. இதில் டப்ளினில் நேற்று முன்தினம் இரவு நடந்த மழையால் பாதிக்கப்பட்ட முதலாவது போட்டியில் டக்வொர்த் லீவிஸ் விதிமுறைப்படி இந்திய அணி 2 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

    இந்த நிலையில் இந்தியா-அயர்லாந்து அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி டப்ளினில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.

    முந்தைய ஆட்டத்தில் இந்திய அணியினர் மேகமூட்டமான சூழ்நிலையில் அருமையாக பந்து வீசி 139 ரன்னுக்குள் அயர்லாந்தை கட்டுப்படுத்தினர். முதுகில் ஏற்பட்ட காயத்துக்கு ஆபரேஷன் செய்ததால் 11 மாத இடைவெளிக்கு பிறகு களம் திரும்பிய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா முதல் ஓவரிலேயே 2 விக்கெட்டுகளை வீழ்த்தி தனது திறமையை மீண்டும் நிரூபித்தார். இதேபோல் காயத்தில் இருந்து மீண்டு வந்த வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணாவும் 2 விக்கெட்டை கைப்பற்றி அசத்தினார். சுழற்பந்து வீச்சாளர் ரவி பிஷ்னோய், வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் ஆகியோரும் விக்கெட்டை சாய்த்தனர். சுழற்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் மட்டும் விக்கெட் வீழ்த்தவில்லை.

    இலக்கை நோக்கி பேட்டிங் செய்கையில் இந்திய அணி 6.5 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 47 ரன்கள் எடுத்து இருந்த போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் அத்துடன் முடித்து கொள்ளப்பட்டது. டக்வொர்த் லீவிஸ் விதிமுறைப்படி இந்திய அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் (24 ரன்) நல்ல தொடக்கம் அளித்து ஆட்டமிழந்தார். ஆனால் திலக் வர்மா முதல் பந்திலேயே விக்கெட்டை பறிகொடுத்து ஏமாற்றம் அளித்தார். மழை காரணமாக இந்திய அணியின் மற்ற பேட்ஸ்மேன்களுக்கு பேட்டிங் செய்யும் வாய்ப்பு கிட்டவில்லை.

    அயர்லாந்து அணியின் பேட்ஸ்மேன்கள் இந்திய பவுலர்களின் துல்லிய தாக்குதலை சமாளிக்க முடியாமல் திணறினர். 31 ரன்னுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்த அந்த அணியை பாரி மெக்கர்த்தி (ஆட்டமிழக்காமல் 51 ரன்), கர்டிஸ் கேம்ப்பெர் (39 ரன்) அகியோர் சிறப்பாக செயல்பட்டு சரிவில் இருந்து மீட்டு கவுரவமான ஸ்கோரை எட்ட வழிவகுத்தனர். அவர்கள் இருவரை தவிர மற்றவர்கள் பேட்டிங்கில் சோபிக்கவில்லை. வேகப்பந்து வீச்சாளர் கிரேக் யங் ஒரே ஓவரில் அடுத்தடுத்த பந்துகளில் 2 விக்கெட்டுகளை கபளீகரம் செய்து கலக்கினார்.

    முதலாவது ஆட்டத்தை போல் இந்த ஆட்டத்திலும் ஆதிக்கம் செலுத்தி தொடரை வெல்ல இந்திய அணி தீவிர முனைப்பு காட்டும். அதேநேரத்தில் இதுவரை இந்தியாவுக்கு எதிராக மோதிய 6 இருபது ஓவர் போட்டியிலும் தோல்வியை சந்தித்து இருக்கும் அயர்லாந்து அணி முதல் வெற்றியை பெற கடுமையாக போராடும். எனவே இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது.

    போட்டிக்கான இரு அணிகள் வீரர்கள் வருமாறு:-

    இந்தியா: ருதுராஜ் கெய்க்வாட், ஜெய்ஸ்வால், திலக் வர்மா, சஞ்சு சாம்சன், ரிங்கு சிங், ஷிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், அர்ஷ்தீப் சிங், ஜஸ்பிரித் பும்ரா (கேப்டன்), ரவி பிஷ்னோய், பிரசித் கிருஷ்ணா.

    அயர்லாந்து: பால் ஸ்டிர்லிங் (கேப்டன்), ஆன்ட்ரூ பால்பிர்னி, லோர்கன் டக்கர், ஹாரி டெக்டர், கர்டிஸ் கேம்ப்பெர், ஜார்ஜ் டாக்ரெல், மார்க் அடைர், பாரி மெக்கர்த்தி, கிரேக் யங், ஜோஷ் லிட்டில், பென் ஒயிட்.

    இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்போர்ட்ஸ் 18 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. ஜியோ சினிமா செயலியிலும் பார்க்கலாம்.

    • அயர்லாந்து அணிக்கு பேரி மெக்கார்தி 33 பந்துகளில் 51 ரன்களை விளாசினார்.
    • இந்திய அணி சார்பில் ஜஸ்பிரித் பும்ரா இரண்டு விக்கெட்களை கைப்பற்றினார்.

    இந்திய கிரிக்கெட் அணி அயர்லாந்தில் பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. கேப்டன் ஹர்திக் பாண்ட்யா, சுப்மன் கில், சூர்யகுமார் யாதவ், குல்தீப் யாதவ், சஹல் உள்ளிட்ட முன்னணி வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

    ஜஸ்பிரித் பும்ரா தலைமையிலான இந்திய அணியில் ருதுராஜ் கெய்க்வாட், ஜெய்ஸ்வால், திலக் வர்மா, ரிங்கு சிங், வாஷிங்டன் சுந்தர், ஷிவம் துபே, ஷபாஸ் அகமது, சஞ்சு சாம்சன், ஜிதேஷ் ஷர்மா, ரவி பிஷ்னோய், பிரசித் கிருஷ்ணா, அர்ஷ்தீப்சிங், முகேஷ்குமார், அவேஷ்கான் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். இவர்கள் தவிர ரிங்கு சிங் மற்றும் ப்ரஷித் கிருஷ்ணா அறிமுகமாகி உள்ளனர்.

     

    முதல் டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் ஆடிய அயர்லாந்து அணிக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் துவக்க வீரர்கள் ஆன்டி பால்பிர்னி மற்றும் பால் ஸ்டிர்லிங் முறையே 4 மற்றும் 11 ரன்களில் ஆட்டமிழந்தனர்.

    இவர்களை தொடர்ந்து களமிறங்கிய லோர்கன் டக்கர் ரன் ஏதும் எடுக்காமல் பெவிலியன் திரும்பினார். அடுத்து வந்த ஹாரி டெக்டர் 9 ரன்களில் அவுட் ஆக, கர்டிஸ் கேம்ஃபர் மட்டும் 33 பந்துகளில் 39 ரன்களை விளாசினார். இதன் மூலம் அந்த அணியின் ஸ்கோர் வேகமாக அதிகரித்தது. அடுத்து வந்த வீரர்கள் வந்த வேகத்தில் அவுட் ஆக, பேரி மெக்கார்தி 33 பந்துகளில் 51 ரன்களை விளாசினார். இவரது அதிரடி காரணமாக அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் ஏழு விக்கெட்களை இழந்து 139 ரன்களை சேர்த்தது.

    இந்திய சார்பில் நீண்ட இடைவெளிக்கு பிறகு களமிறங்கிய ஜஸ்பிரித் பும்ரா 4 ஓவர்களில் 24 ரன்களை கொடுத்து 2 விக்கெட்களை கைப்பற்றினார். இதே போன்று ப்ரஷித் கிருஷ்ணா மற்றும் ரவி பிஷ்னோய் தலா இரண்டு விக்கெட்களை வீழ்த்தினர். அர்தீப் சிங் ஒரு விக்கெட் வீழ்த்தினார்.

    ×