கிரிக்கெட்

பாகிஸ்தான் பிரதமரின் கிண்டல் டுவிட்....பாபர் ஆசம் பதில்

Published On 2022-11-12 07:31 GMT   |   Update On 2022-11-12 07:31 GMT
  • கடந்த உலகக் கோப்பையில் பாகிஸ்தான் விக்கெட் இழப்பின்றி இந்தியாவை வீழ்த்தியது
  • உண்மையிலேயே, 1992 உலகக் கோப்பை சூழ்நிலையுடன் தற்போதைய நிலை ஒத்துப்போகிறது.

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இங்கிலாந்து இந்தியாவை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியது. நாளை நடைபெறும் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான்- இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இங்கிலாந்து வெற்றி பெற்றதும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ''இந்த ஞாயிறு 152/0 vs 170/0'' என ட்டுவிட்டரில் பதிவிட்டிருந்தார். கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரின் தொடக்க சுற்றில் பாகிஸ்தானை இந்தியா விக்கெட் இழப்பின்று 152 ரன்கள் எடுத்து வீழ்த்தியது. தற்போது நடைபெற்று வரும் தொடரில் இங்கிலாந்து இந்தியாவை விக்கெட் இழப்பின்றி 170 ரன்கள் எடுத்து வீழ்த்தியது.

இதை கிண்டல் செய்யும் வகையில் பாகிஸ்தான் பிரதமர் ட்வீட் செய்திருந்தார். நாளை நடைபெற இருக்கும் இறுதிப் போட்டி குறித்து இன்று பத்திரிகையாளர்களுக்கு பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசம் பேட்டியளித்தார்.

அப்போது, பாகிஸ்தான் பிரதமர் ட்வீட் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பாபர் ஆசம் அளித்த பதில் பின்வறுமாறு:-

அவரது டுவிட்டால் எங்களுக்கு எந்த நெருக்கடியும் இல்லை. ஆனால் சொல்வதற்கு மன்னிக்கவும், நான் அவரது டுவிட்டை பார்க்கவில்லை. ஆகவே, அது குறித்த அறிவு இல்லை. ஆனால், நாங்கள் எதிரணிக்கு எதிராக எங்களுடைய சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சிப்போம்.

உண்மையிலேயே, 1992 உலகக் கோப்பை சூழ்நிலையுடன் தற்போதைய நிலை ஒத்துப்போகிறது. நாங்கள் கோப்பையை வெல்ல முயற்சி செய்வோம். இது எனக்கு மிகப்பெரிய கவுரவம். அணியை வழி நடத்தும் எனக்கு குறிப்பாக இந்த பெரிய மைதானத்தில் வெல்வது சிறந்த தருணம். எங்களுடைய 100 சதவீத முயற்சி வெளிப்படுத்தி வெற்றி பெறுவோம். நாங்கள் தொடக்கத்தில் சரியாக விளையாடவில்லை. அதன்பின் சிறந்த முறையில் கம்-பேக் ஆனோம். பாகிஸ்தான் வீரர்கள் புலி போன்று போரிட்டனர். அங்கேயிருந்து தொடர்ந்து எங்கயுடைய சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த பார்ப்போம்'' என்றார்.

Tags:    

Similar News