கிரிக்கெட்

சதம் அடித்த விராட் கோலிக்கு பிளையிங் கிஸ் கொடுத்த அனுஷ்கா சர்மா- வீடியோ

Published On 2023-05-22 12:22 GMT   |   Update On 2023-05-22 12:22 GMT
  • ஐபிஎல் தொடரில் இருந்து ஆர்சிபி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறாமல் வெளியேறியது.
  • ஐபிஎல் வரலாற்றில் அதிக சதம் அடித்த வீரராக விராட் கோலி திகழ்கிறார்.

ஐபிஎல் தொடரின் கடைசி லீக் போட்டியில் ஆர்சிபி மற்றும் குஜராத் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணி 20 ஓவர் முடிவில் 197 ரன்கள் எடுத்தது. அதிக பட்சமாக விராட் கோலி சதம் அடித்து அசத்தினார்.

அடுத்தடுத்து சதம் அடித்தது ஆர்சிபி ரசிகர்களுக்கு விருந்தளித்தார் என்றே சொல்லலாம். இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் அதிக சதம் அடித்த கிறிஸ் கெயில் சாதனையை இதன் மூலம் விராட் கோலி முறியடித்தார்.

இந்நிலையில் இந்த போட்டியை விராட் கோலியின் மனைவியான அனுஷ்கா சர்மா நேரில் கண்டு களித்தார். அப்போது சதம் அடித்த விராட் கோலிக்கு, அனுஷ்கா சர்மா பிளைங் கிஸ் கொடுத்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஐபிஎல் தொடரில் இருந்து ஆர்சிபி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறாமல் வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News