சினிமா

எதிர்பார்த்து ஏமாந்த நடிகர்

Published On 2018-08-05 12:08 GMT   |   Update On 2018-08-05 12:08 GMT
வாரிசு நடிகராக திரையுலகுக்கு வந்த கடல் நடிகருக்கு, முதல் படம் எதிர்பார்த்த அளவிற்கு ஓடவில்லையாம்.
வாரிசு நடிகராக திரையுலகுக்கு வந்த கடல் நடிகருக்கு, முதல் படம் எதிர்பார்த்த அளவிற்கு ஓடவில்லையாம். அதன்பின் சில சுமாரான படங்களில் நடித்து வந்த நடிகருக்கு சமீபத்திய படங்கள் வெற்றி பெற்றதாம். குறிப்பாக அடல்ட் படம் ஒன்று இளைஞர்களை கவர்ந்ததாம்.

இளம் இயக்குனர்கள் சிலர் இவரை நடிக்க வைக்க முயற்சிகள் செய்தார்களாம். இதனால், தன்னுடைய சம்பளத்தை 1 கோடியில் இருந்து 2 கோடியாக உயர்த்தினாராம். சம்பளத்தை உயர்த்தினாலும் தன்னை தேடி, நிறைய பட வாய்ப்புகள் வரும் என்று அந்த நடிகர் எதிர்பார்த்தாராம். அவருடைய எதிர்பார்ப்பு, ஏமாற்றமாகி விட்டதாம்

கைவசம் புதிய பட வாய்ப்புகள் இல்லாததால், கடல் நடிகர் சோர்ந்து போய் காணப்படுகிறாராம்.
Tags:    

Similar News