சினிமா
மீண்டும் ரவிக்குமார், ரகுலுடன் இணைந்த சிவகார்த்திகேயன்
ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் - ரகுல் ப்ரீத் சிங் நடிப்பில் உருவாகும் அறிவியல் சார்ந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு துவங்கியதாக சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார். #SK14 #Sivakarthikeyan #Ravikumar
`மிஸ்டர்.லோக்கல்' படத்தில் பிசியாக நடித்து வந்த நடிகர் சிவகார்த்திகேயன், தற்போது எஸ்.கே.14 படக்குழுவில் மீண்டும் இணைந்திருக்கிறார்.
ரவிக்குமார் இயக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே 60 சதவீதம் முடிவடைந்த நிலையில், அடுத்தகட்ட படப்பிடிப்பு நேற்று துவங்கியது. படப்பிடிப்பு தளத்தில் இயக்குநர் ரவிக்குமார், ரகுலுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
சிவகார்த்திகேயன் இதில் விவசாயியாக நடிக்கிறார். கருணாகரன், யோகி பாபு நகைச்சுவை வேடங்களில் நடிக்கிறார்கள். அறிவியல் சார்ந்த படமாக உருவாகும் இதில் கிராபிக்ஸ் காட்சிகள் அதிகமாக உள்ளன. இதற்காக 100-க்கும் மேற்பட்ட ஹாலிவுட் தொழில்நுட்ப கலைஞர்கள் வரவழைக்கப்பட்டு, இரவு பகலாக பணிபுரிந்து வருகிறார்கள்.
Back to the sets of #SK14 👍😊@Ravikumar_Dir@Rakulpreet@24AMSTUDIOSpic.twitter.com/w6YEN2thXH
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) February 18, 2019
ஹாலிவுட் படங்களில் மட்டுமே பயன்படுத்தப்பட்ட `அலெக்சா எல்.எப்.' என்ற கேமரா, இந்த படத்தில் பயன்படுத்தப்படுகிறது. இந்த அதி நவீன கேமரா பயன்படுத்தப்படும் முதல் தமிழ் படம், இதுதான். படப்பிடிப்பு சென்னை, ஐதராபாத், அரக்குவேலி ஆகிய இடங்களில் நடக்கிறது.
ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க, நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். 24 ஏ.எம்.ஸ்டூடியோ சார்பில் ஆர்.டி.ராஜா தயாரிக்கிறார். #SK14 #Sivakarthikeyan #Ravikumar #RakulPreetSingh