சினிமா

விஜய் சேதுபதி, ஜெயம் ரவி படங்களை தள்ளி வைக்க வேண்டும் - உதயா

Published On 2018-11-05 14:41 GMT   |   Update On 2018-11-05 14:41 GMT
உத்தரவு மகாராஜா படத்தை தயாரித்து நடித்திருக்கும் உதயா, விஜய் சேதுபதி, ஜெயம் ரவி படங்களை தள்ளி வைக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். #Udhaya
உதயா நடித்து தயாரித்து இருக்கும் ’உத்தரவு மகாராஜா’ படம் நவம்பர் 16-ம் தேதி வெளியாகிறது. இதில் பிரபு, உதயா, ஸ்ரீமன், மனோபாலா, பிரியங்கா, ஆடம்ஸ் மற்றும் பலர் நடித்துள்ளனர். படத்தின் நாயகன் உதயா, விஜய்சேதுபதி, ஜெயம் ரவிக்கு ஒரு கோரிக்கை வைத்துள்ளார். 

அதில் ‘இந்த காலகட்டத்தில் எங்களைப் போன்றவர்கள் படம் எடுப்பது மிகவும் கஷ்டம். எடுத்த படத்தை விநியோகஸ்தர்களைப் பார்க்கவைப்பது அதைவிடக் கஷ்டம். நவம்பர் 16-ம் தேதி சிறிய பட்ஜெட்டில் தயாரான படங்களை மட்டும் வெளியிட தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் ஒப்பதல் அளித்தது. 

இதன் படி நான் நடித்த 'உத்தரவு மகாராஜா' உள்பட சில படங்களுக்கு மட்டுமே அனுமதியளித்தனர். இதைத் தொடர்ந்து படத்தை விளம்பரப்படுத்தும் பணியைத் தொடங்கியிருக்கிறேன். தற்போது விஜய் சேதுபதி நடித்த சீதக்காதி மற்றும் ஜெயம் ரவி நடித்த அடங்க மறு ஆகிய படங்களும் அந்த தேதியில் வெளியாக இருப்பதாக கேள்விப்படுகிறேன். 



இந்த இரண்டு பெரிய நடிகர்களின் படங்கள் வந்தால் மற்ற சிறிய பட்ஜட் படங்கள் பாதிக்கப்படாதா? நான் தயாரிப்பாளர் சங்கத்திலும் இருக்கிறேன். நடிகர் சங்கத்திலும் இருக்கிறேன். ரசிகர்கள் என்னைப் பார்க்க வருவார்களா? அல்லது அண்ணன் விஜய் சேதுபதி, ஜெயம் ரவி ஆகியோர்களை பார்க்க வருவார்களா... அதனால் விஜய் சேதுபதி மற்றும் ஜெயம் ரவி ஆகியோர் மனம் வைத்தால் நானும் ஏனைய சிறிய பட்ஜட் படங்களும் வாழ முடியும்.

இருவரும் எங்களுக்காக அவர்கள் படங்களை தள்ளி வைக்க வேண்டும். இதை ஒரு கோரிக்கையாக வைக்கிறேன்.’ என்று கூறியுள்ளார்.
Tags:    

Similar News