சினிமா

ரஜினியுடன் நடிப்பது மகிழ்ச்சி - மாளவிகா மோகனன்

Published On 2018-10-19 10:48 GMT   |   Update On 2018-10-19 10:48 GMT
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினியுடன் நடிப்பது மிகவும் மகிழ்ச்சி என்று மாளவிகா மோகனன் கூறியிருக்கிறார். #Petta #Rajini #MalavikaMohanan
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் ‘பேட்ட’ படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டி இருக்கிறது. ரஜினியுடன் விஜய் சேதுபதி, பாபிசிம்ஹா, சசிகுமார், குரு சோமசுந்தரம், நவாசுதின் சித்திக், மகேந்திரன் ஆகியோர் நடித்து வருகின்றனர்.

கதாநாயகிகளாக திரிஷா, சிம்ரன், மேகா ஆகாஷ் ஆகியோரோடு மாளவிகா மோகனனும் ஒப்பந்தமானார். மலையாள நடிகையான இவர் ஆஸ்கர் விருது பெற்ற இயக்குநர் மஜித் மஜிதியின் ‘பியாண்ட் த கிளவுட்ஸ்’படம் மூலம் இந்தியில் அறிமுகமானார்.

கன்னடம், மலையாளம், இந்தியை தொடர்ந்து தமிழில் அறிமுகமாகும் இவர் முதல் படத்திலேயே ரஜினியுடன் களம் இறங்குகிறார். பேட்ட படத்தின் படப்பிடிப்பு மேற்கு வங்கம், சென்னை ஆகிய இடங்களைத் தொடர்ந்து தற்போது உத்தரபிரதேசத்தில் நடைபெற்று வருகிறது. ரஜினியுடன் படப்பிடிப்பில் இணைந்த மாளவிகா மோகனன் அதுபற்றி தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.



“சிறு குழந்தை போன்ற மகிழ்ச்சியில் உள்ளேன். இந்திய சினிமாவின் முக்கியமான நடிகரான ரஜினிகாந்துடன் இணைந்து நடிக்கிறேன். எனக்குப் பிடித்த இயக்குனர்களில் ஒருவரான கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார்” என்று பதிவிட்டுள்ளதுடன் பேட்ட படத்தின் இரண்டாவது போஸ்டரை பதிவேற்றியுள்ளார்.
Tags:    

Similar News