சினிமா
கேரள மழை வெள்ளம் - பிரபு, ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் நிதியுதவி
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மக்களுக்கு நடிகர்கள் பிரபு, ஜெயம் ரவி, நடிகை கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நிதியுதவி வழங்கியுள்ளனர். #KeralaRain #KeralaFlood #KeralaFloodRelief
கேரளாவில் தொடர்ந்து பெய்து வரும் தொடர் கனமழையால் அம்மாநிலம் வெள்ளத்தாலும், நிலச்சரிவாலும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. வரலாறு காணாத இந்த இயற்கை சீற்றத்துக்கு இதுவரை 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
கேரள மக்களுக்கு பல்வேறு அமைப்புகளும், பொதுசேவை நிறுவனங்களும், தமிழ் திரையுலகினரும் நிதியுதவி மற்றும் பொருளுதவி அளித்து வருகின்றனர். தற்போது நடிகர் ஜெயம் ரவி 10 லட்சமும், நடிகர் பிரபு 10 லட்சமும், நடிகை கீர்த்தி சுரேஷ் 10 லட்சமும் வழங்கியுள்ளார்கள்.
முன்னதாக நடிகர்கள் கமல், சூர்யா, கார்த்தி, விஷால், தனுஷ், விஜய்சேதுபதி, உதயநிதி, சிவகார்த்திகேயன், விக்ரம், இயக்குனர்கள் சங்கர், ஏ.ஆர்.முருகதாஸ், நடிகை ரோஹினி, நயன்தாரா உள்ளிட்டோர் கேரளாவுக்கு நிதி உதவி அளித்துள்ளனர். #KeralaRain #KeralaFlood #KeralaFloodRelief