சினிமா

பயங்கரமான நாளில் தமிழ்ப்படம் 2 ரிலீஸ் - படக்குழு ஆலோசனை

Published On 2018-06-30 06:31 GMT   |   Update On 2018-06-30 06:54 GMT
சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் சிவா - ஐஸ்வர்யா மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் `தமிழ்படம் 2' படத்தை ரிலீஸ் செய்ய பயங்கரமான நாளை தேர்ந்தெடுத்திருப்பதாக படத்தின் இயக்குநர் தெரிவித்துள்ளார். #TamizhPadam2 #TP2
சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் சிவா நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புகளுடன் ரிலீசுக்கு தயாராகி இருக்கும் படம் `தமிழ்படம் 2'. படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்தை ரிலீஸ் குறித்து படக்குழு ஆலோசனை நடத்தி வருவதாக தெரிகிறது. 

இந்த நிலையில், படத்தின் இயக்குநர் சி.எஸ்.அமுதன் அவரது டுவிட்டர் பக்கத்தில் `ஜூலை 13-ஆம் தேதி எனக்கு மிகவும் பயங்கரமானது, அந்த தேதியில் என்ன மறைந்திருக்கிறது என்று தெரியவில்லை, காத்திருங்கள்'. என்று குறிப்பிட்டிருக்கிறார். 



இதில் இருந்து படத்தை ஜுலை 13-ஆம் தேதி ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்தில் வெளியான படத்தில் டீசர், நேற்று வெளியான பாடல்கள் என அனைத்தும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. படத்தில் சிவா ஜோடியாக ஐஸ்வர்யா மேனன் நடித்திருக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் திஷா பாண்டே, சதீஷ், சந்தான பாரதி, மனோபாலா, ஆர்.சுந்தர்ராஜன், நிழல்கள் ரவி, சேத்தன், உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். #TamizhPadam2 #TP2

Tags:    

Similar News