சினிமா

சூர்யா இல்லாமல் துவங்கிய படப்பிடிப்பு

Published On 2018-06-25 13:00 GMT   |   Update On 2018-06-25 13:00 GMT
செல்வராகவன் இயக்கத்தில் `என்ஜிகே' படத்தில் சூர்யா பிசியாக நடித்து வரும் நிலையில், சூர்யாவின் அடுத்த படம் குறித்த முக்கிய தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது. #Suriya37 #KVAnand
சூர்யா தற்போது செல்வராகவன் இயக்கத்தில் `என்ஜிகே' படத்தில் பிசியாக நடித்து வருகிறார். இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும் நிலையில், சூர்யா 37 படத்தின் படப்பிடிப்பு லண்டனில் இன்று துவங்கியுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. 

சூர்யா விரைவில் லண்டனில் படப்பிடிப்பில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கே.வி.ஆனந்த் இயக்கும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் மோகன் லால், அல்லு சிரிஷ், சமுத்திரக்கனி, பொம்மன் இரானி நடிக்கின்றனர். சூர்யா ஜோடியாக சாயிஷா ஒப்பந்தமாகி இருக்கிறார். 



ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கும் இந்த படத்திற்கு கேவ்மிக் யு அரி ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கிறார். ஆண்டனி படத்தொகுப்பை கவனிக்கிறார்.

லைகா புரொடக்‌ஷன்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இந்த படம் பயணம் சம்பந்தப்பட்ட கதையாக உருவாகிறது. நியூயார்க், பிரேசில், மும்பை, சென்னை உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடத்த படக்குழு முடிவு செய்துள்ளது. #Suriya37 #KVAnand

Tags:    

Similar News