ஆட்டோமொபைல்

வெளியீட்டுக்கு முன் 4000 பேர் முன்பதிவு செய்த மஹிந்திரா கார்

Published On 2019-02-09 11:59 GMT   |   Update On 2019-02-09 11:59 GMT
மஹிந்திரா நிறுவனத்தின் எக்ஸ்.யு.வி.300 விரைவில் இந்தியாவில் அறிமுகமாக இருக்கும் நிலையில், இதுவரை இந்த காரை வாங்க சுமார் 4000 பேர் முன்பதிவு செய்துள்ளனர். #MahindraXUV300



மஹிந்திரா நிறுவனம் இந்தியாவில் எக்ஸ்.யு.வி.300 காரை விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய காம்பேக்ட் எஸ்.யு.வி. கார் இந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்படும் நிலையில் இதற்கான முன்பதிவு கடந்த மாதம் துவங்கியது. இந்நிலையில் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்படுவதற்குள் மஹிந்திரா எக்ஸ்.யு.வி.300 காரை வாங்க சுமார் 4000 பேர் முன்பதிவு செய்துள்ளனர். 

புதிய எக்ஸ்.யு.வி.300 கார் சங்யாங் டிவோலி எக்ஸ்100 பிளாட்ஃபார்மை தழுவி உருவாகியிருக்கிறது. எனினும், இந்த கார் நான்கு மீட்டர் பிரிவுக்கு பொருந்தும் படி மறு உருவாக்கம் செய்யப்பட்டுள்ளது. வடிவமைப்பை பொருத்த வரை முந்தைய எக்ஸ்.யு.வி.500 மாடலை தழுவி உருவாகி இருக்கும் எக்ஸ்.யு.வி. 300 டிவோலி மாடலை விட முற்றிலும் வித்தியாசமாக காட்சியளிக்கிறது.

புதிய எக்ஸ்.யு.வி.300 கார் ஐந்து பேர் அமரக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டிருக்கிறது. மஹிந்திரா எக்ஸ்.யு.வி. 300 மாடல் டபுள்யூ4, டபுள்யூ6, டபுள்யூ8 மற்றும் டபுள்யூ8 (O) என நான்கு வித வேரியன்ட்களில் கிடைக்கும். அனைத்து வேரியன்டக்ளிலும் அதிகளவு அம்சங்கள் வழங்கப்படுகிறது.



புதிய மஹிந்திரா எஸ்.யு.வி. மாடலில் 1.5 லிட்டர், 4 சிலிண்டர் டீசல் என்ஜின் வழங்கப்படலாம். இதே என்ஜின் மஹிந்திரா மராசோ மாடலிலும் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 123 பி.எஸ். பவர் @3500 ஆர்.பி.எம். 300 என்.எம். டார்க் @1,750-2500 ஆர்.பி.எம். செயல்திறன் மற்றும் 6-ஸ்பீடு மேனுவல் அல்லது ஆட்டோமேடிக் (AMT) டிரான்ஸ்மிஷன் கொண்டிருக்கும்.

இதனுடன் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் புதிய எஸ்.யு.வி. மாடலுடன் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. இந்தியாவில் மஹிந்திராவின் புதிய எஸ்.யு.வி. விலை ரூ.7.00 முதல் ரூ.10.00 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படலாம். 

புதிய எக்ஸ்.யு.வி. 300 இந்தியாவில் வெளியானதும் மாருதி சுசுகி விடாரா பிரெஸ்ஸா, ஃபோர்டு இகோஸ்போர்ட் உள்ளிட்ட மாடல்களுக்கு போட்டியாக அமையும்.
Tags:    

Similar News