ஆன்மிக களஞ்சியம்

முருகன் பாதத்திற்கே இங்கே முதல் மரியாதை!

Published On 2023-10-25 12:22 GMT   |   Update On 2023-10-25 12:22 GMT
  • பெருமை பெற்று விளங்கும் வேலாயுத சுவாமி கோவில் உள்ளது.
  • பாறையில் உள்ள முருகப்பெருமானின் திருப்பாதத்துக்கே முதல் பூஜை செய்யப்படுகிறது.

கோவை-பொள்ளாச்சி நெடுஞ்சாலையில் கோவை மாநகரில் இருந்து தெற்கே

சுமார் 20 கிலோ மீட்டர் தூரத்தில் இயற்கை எழிலுடன் அமைந்துள்ளது கிணத்துக்கடவு.

இந்த ஊரின் நடுவே உள்ள பொன்மலையில் மூர்த்தி, தலம் தீர்த்தம் ஆகிய மூன்றிலும்

பெருமை பெற்று விளங்கும் வேலாயுத சுவாமி கோவில் உள்ளது.

ஞானப்பழத்திற்காக பெற்றோரான சிவ பெருமான் உமையாளுடன் கோபித்துக் கொண்டு

பழனியில் குடிகொண்ட முத்துக்குமார சுவாமி இந்தபொன்மலையில் பாதம் பதித்ததாக இக்கோவில் தலபுராணம் கூறுகிறது.

எனவே இங்கு மூலவரான வேலாயுத சுவாமிக்கு பூஜை நடத்துவதற்கு முன்பாக,

பாறையில் உள்ள முருகப்பெருமானின் திருப்பாதத்துக்கே முதல் பூஜை செய்யப்படுகிறது.

திருமணத்தடை, குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இக்கோவிலின் வெளிப்பிரகாரத்தில்

தனி மண்டபத்தில் உள்ள முருகப் பெருமானின் திருப்பாதங்களை தரிசித்தால்,

விரைவில் விருப்பங்கள் நிறைவேறும் என்கிறார்கள்.

மேலும் கல்வியில் சிறந்து விளங்கலாம் என்பது ஐதீகம்.

Tags:    

Similar News