ஆன்மிக களஞ்சியம்

மரண கண்டம் நீக்கும் திருநீலக்குடி!

Published On 2023-08-26 12:19 IST   |   Update On 2023-08-26 12:19:00 IST
  • எவ்வளவு எண்ணெய் அபிஷேகம் செய்தாலும், அவ்வளவும் பாணத்திற்குள் சென்றுவிடும்.
  • மூலவருக்கு செய்யப்படும் தைலாபிஷேகம் சிறப்பு வாய்ந்தது.

மரண கண்டம் நீக்கும் திருநீலக்குடி

ஜாதகத்தில் மரண கண்டம் உள்ளவர்கள் தமது எம பயம், மரண பயம் நீங்க வணங்க வேண்டிய கோயில், எது தெரியுமா?

கும்பகோணத்திலிருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ள, திருநீலகண்டராய் சிவ பெருமான் அருளும் "திருநீலக்குடியாகும்".

மூலவருக்கு செய்யப்படும் தைலாபிஷேகம் சிறப்பு வாய்ந்தது.

எவ்வளவு எண்ணெய் அபிஷேகம் செய்தாலும், அவ்வளவும் பாணத்திற்குள் சென்றுவிடும்.

ராகு தோஷம் நீங்க உளுந்து, நீல வஸ்திரம், வெள்ளி நாகர், வெள்ளி பாத்திரம் போன்றவற்றை இத்தலத்தில் தானம் செய்ய வேண்டும்.

எம, மரண பயங்கள் நீங்க இத்தல இறைவனை வழிபட்டு, பின்னர் எருமை, நீல துணிகள், எள் போன்றவற்றை தானம் செய்யவேண்டும்.

திருநாவுக்கரசர் இத்தலப்பெருமானைப் பின்வருமாறு போற்றிப் பாடுகிறார்.

"வைத்த மாடும் மனைவியும் மக்கள்நீர்

செத்த போது செறியார் பிரிவதே

நித்த நீலக் குடியர னைந்நினை

சித்த மாகிற் சிவகதி சேர்திரே"

Tags:    

Similar News