ஆன்மிக களஞ்சியம்

கணபதி அர்ச்சனை

Published On 2023-08-16 11:33 GMT   |   Update On 2023-08-16 11:33 GMT
  • மாதுளை இலை - நல்ல புகழை அடையலாம்
  • மாயையை அகற்றினால் நல்ல பண்புகள் வெளியில் வரும் என்பதை உணர்த்தவே கொழுக்கட்டை படைக்கப்படுகிறது.

கணபதி அர்ச்சனை

விநாயக புராணத்தில் கணபதிக்கு என்னென்ன இலைகளை கொண்டு அர்ச்சனை செய்தால் நமக்குக் கிடைக்கும் பலன்கள் என்னவென்பதை விரிவாகவே கூறியுள்ளார்கள்.

மருவு இலை- துன்பங்கள் நீங்கி இன்பம் பெருகும்

எருக்க இலை- குழந்தைப் பேறு

அரச இலை- எதிரிகள் அழிவார்கள்

அகத்தி இலை- துயரங்கள் நீங்கும்

அரளி இலை- அனைவரும் அன்போடு இருப்பார்கள்.

வில்வ இலை- இன்பங்கள் பெருகும்

வெள்ளெருக்கு- சகலமும் கிடைக்கும்

மாதுளை இலை- நல்ல புகழை அடையலாம்

கண்டங்கத்திரி இலை- லட்சுமி கடாட்சம்

கொழுக்கட்டை நைவேத்தியம்

தேங்காய் மற்றும் வெல்லம் சேர்த்து செய்யப்படும் மோதகம் என்றழைக்கப்படும் கொழுக்கட்டை கணபதிக்கு மிகவும் பிடித்தமான நைவேத்தியம் ஆகும்.

கொழுக்கட்டையின் தத்துவம் என்ன வென்று அறிவீர்களா?

மேலே இருக்கும் மாவுப் பொருள் அண்டம், உள்ளே இருக்கும் பூரணம் பிரம்மம், நமக்குள் இருக்கின்ற நல்ல பண்புகளான பூரணத்தை மாவான மாயை மறைத்துக் கொண்டுள்ளது.

மாயையை அகற்றினால் நல்ல பண்புகள் வெளியில் வரும் என்பதை உணர்த்தவே கொழுக்கட்டை படைக்கப்படுகிறது.

முதன் முதலாக விநாயகருக்கு கொழுக்கட்டையைப் படைத்து வழிபட்டவர் யார் என்று தெரியுமா?

வசிஷ்டரின் மனைவியான அருந்ததி.

பிள்ளையார் செய்வோம்

சாணம், புற்றுமண், மஞ்சள், வெல்லம், எருக்கம் வேர், சந்தனம் ஆகியவற்றில் பிள்ளையார் உருவம் செய்து வழிபட்டால் அனைத்துவிதமான நலன்களும் பெற்று மோட்சம் அடைவர் என்று விநாயக புராணம் கூறுகின்றது.

விநாயகருக்கு உகந்தவை

தும்மைப்பூ, செம்பருத்தி மலர், சங்கு புஷ்பம், எருக்கம்பூ, மாவிலை, அருகம்புல், வில்வ இலை ஆகியவை விநாயகரை அர்ச்சனை செய்யவும் மாலையாக அணிவிக்கவும் மிகவும் உகந்தவையாக கருதப்படுகிறது.

விநாயகரின் அஷ்ட அவதாரங்கள்

1.வக்ரதுண்டர்

2. மஹோத்ரதர்

3. கஜானனர்

4.லம்போதரர்

5. விகடர்

6. விக்னராஜர்

7. தூம்ரவர்ணர்

8. சூர்ப்பகர்ணர்

என்று எட்டு விதமான அவதாரங்களை விநாயகப் பெருமான் எடுத்ததாக விநாயக புராணம் கூறுகின்றது. அவர் எதற்காக எட்டுவிதமான அவதாரங்களை எடுத்தார் என்றால், மனிதர்களிடையே காணப்படும் தீய குணங்கள் எட்டு (காமம், குரோதம், லோபம், மதம், மாச்சர்யம், மமதை, மோகம், அகந்தை)

அந்த எட்டு குணங்களையும் நீக்கி நமக்கு ஞானமளிப்பதற்காகவே அவர் எட்டுவிதமான அவதாரங்களை எடுத்தார்.

அந்த எட்டுவிதமான அவதாரங்களையும் நினைவிற்குக் கொண்டு வந்து வணங்க விநாயக மந்திரம் துணைபுரிகிறது.

இந்த மந்திரத்தை தினசரி பாராயணம் செய்பவர்கள் அனைத்து விதமான சந்தோஷங்களையும் அடைவார்கள்.

Tags:    

Similar News