ஆன்மிக களஞ்சியம்

அங்காளம்மன்-வேண்டுதல்கள்!

Published On 2023-08-27 09:02 GMT   |   Update On 2023-08-27 09:02 GMT
  • பக்தர்கள் மஞ்சள் ஆடை, வேப்பஞ்சேலை அணிந்து வருகின்றனர்.
  • மொட்டை அடிப்பது, காது குத்துவது, போன்ற வேண்டுதல்கள் செய்யப்படுகின்றன.

அங்காளம்மன்-வேண்டுதல்கள்

மேலும் இந்த விசேஷ திருவிழா நாட்களில் அங்காளம்மன் தான் எடுத்த அலங்கோல உருவத்தை நிறைவு கூறவே,

ஒவ்வொரு நாளும் பக்தர்கள் வேண்டுதல் பெயரில், மொட்டை அடிப்பது, காது குத்துவது, ஆடு, கோழி, அறுத்து, பொங்கல் வைத்து, அபிஷேகம், ஆராதனை, அர்ச்சனை செய்வது சித்தாங்கு, கஞ்சுலி, கபால வேஷம் அணிந்து வருவது,

மஞ்சள் ஆடை, வேப்பஞ்சேலை அணிந்து வருவது போன்ற வேஷத்துடன் மேல்மலையனூருக்கு திருவிழா காலங்களில் வந்து வேண்டுதல் காணிக்கை பிரார்த்தனைகளான,

பொன், வெள்ளி பணம் போன்ற காணிக்கை உருபடிகளை உண்டியலில் செலுத்தி பக்தர்கள் தங்களின் வேண்டுதல் பிரார்த்தனையை செய்து கொள்வார்கள்.

அம்மனின் வரலாற்றை தொடர்புபடுத்தி செய்யும் திருவிழா தமிழ் நாட்டில் வேறு எங்கும் கொண்டாடுவதில்லை.

இந்த மேல்மலையனூரில் மட்டுமே அது திருவிழாவாக கொண்டாடப்படுவது தமிழகத்தின் தனி சிறப்பு.

Tags:    

Similar News