ஆன்மிக களஞ்சியம்
ஆடிப்பிறப்பு-ஆடிப் பால் சாப்பிடாத மாப்பிள்ளையைத் தேடிப் பிடி!
- ஆடி சீர் செய்து மாப்பிள்ளை-பெண்ணை தாய் வீட்டிற்கு அழைத்து வருவார்கள்.
- ஆடியில் கருத்தரித்தால் சித்திரையில் குழந்தை பிறக்கும்.,
ஆடி மாதத்தில் என்னதான் சிறப்புகள் என்று நாம் கூறினாலும், புதுமணத் தம்பதிகளுக்கு ஆடி மாதம் ஒரு கஷ்ட காலமாகவே இருக்கும்.
ஆடி மாத முதல் நாள் புதுமணத் தம்பதிகளுக்கு ஆடி சீர் செய்து மாப்பிள்ளை-பெண்ணை தாய் வீட்டிற்கு அழைத்து வருவார்கள்.
அங்கு விருந்து வைத்து, மாப்பிள்ளைக்கு ஆடிப் பால் என்ற தேங்காய்ப் பாலை வெள்ளி டம்ளரில் கொடுத்து அவரை மட்டும் அனுப்பி விட்டு,
பெண்ணைத் தாய் வீட்டிலேயே ஆடி முழுதும் தங்க வைத்துக் கொள்வார்கள்.
ஆடியில் கருத்தரித்தால் சித்திரையில் குழந்தை பிறக்கும்;
தாய்க்கும் குழந்தைக்கும் வெயில் காலம் கஷ்டத்தைத் தரும் என்பதால் இவ்வழக்கத்தைக் கடைப்பிடிக்கின்றனர்.
(ஆடி வரை கருத்தரிக்காத புதுமணப் பெண்ணுக்குத்தான் இவை).
இதை இன்னமும் பின்பற்றுகின்றனர்.
இதனால் "ஆடிப் பால் சாப்பிடாத மாப்பிள்ளையைத் தேடிப் பிடி' என்பார்கள்.