search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    பள்ளியறை பூஜை
    X

    பள்ளியறை பூஜை

    • இந்த பூஜையில் பங்கேற்பது மிகுந்த பலன்களைத் தரக் கூடியதாகும்.
    • ஆனால் உண்ணாமுலை அம்மனுக்கு அபிஷேகங்கள் செய்வது இல்லை.

    சிவாலயங்களில் தினமும் இரவு அர்த்தஜாம பூஜை முடிந்ததும் ஈசனையும் அம்பாளையும் பள்ளியறைக்கு அழைத்துச் செல்வார்கள்.

    அங்கு இருவருக்கும் சேர்த்து பள்ளியறை பூஜை நடத்தப்படும்.

    இந்த பூஜையில் பங்கேற்பது மிகுந்த பலன்களைத் தரக் கூடியதாகும்.

    பொதுவாக சிவாலயங்களில் பள்ளியறைக்கு முதலில் சிவபெருமான்தான் வருவார்.

    அவர் அம்பாள் வருகைக்காக காத்திருப்பார்.

    தமிழகம் முழுவதும் சிவாலயங்களில் இதுதான் நடைமுறையில் உள்ளது.

    ஆனால் திருவண்ணாமலை தலத்தில் இது மாறுபட்ட வகையில் உள்ளது.

    இங்கு பள்ளியறைக்கு முதலில் அம்பாள் வந்து விடுவாள்.

    அவள்தான் காத்துக் கொண்டிருப்பாள். அதன் பிறகே ஈசன் வருவார்.

    அம்பாளுக்கு அபிஷேகம் இல்லை

    திருவண்ணாமலை தலத்தில் தினமும் அர்த்தஜாம பூஜைக்கு முன்பு அண்ணாமலையாருக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்வார்கள்.

    ஆனால் உண்ணாமுலை அம்மனுக்கு அபிஷேகங்கள் செய்வது இல்லை.

    தலைமுடி காய நேரமாகும் என்பதால் அம்பாளுக்கு இரவில் அபிஷேகம் நடத்தப்படுவதில்லை.

    அதற்கு பதில் அம்பாளுக்கு தீபாராதனைக் காட்டுவது நடைமுறையில் இருக்கிறது.

    Next Story
    ×