search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    ஆடி மாத அங்காளம்மன் வழிபாடு பயன்கள்!
    X

    ஆடி மாத அங்காளம்மன் வழிபாடு பயன்கள்!

    • ஆற்றல் மிகு சக்திகள் மூன்று, அவை இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞானசக்தி.
    • அங்காளம்மன் கோயில் கொண்ட தலைமையிடமே, மேல்மலையனூர்.

    ஆடி மாத அங்காளம்மன் வழிபாடு பயன்கள்

    ஆற்றல் மிகு சக்திகள் மூன்று, அவை இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞானசக்தி.

    இதையே ஆற்றலாக கருதும்போது, விழைவாற்றல், செயல் ஆற்றல், அறிவாற்றல் என்கிறார்கள்.

    இதையே தெய்வமாக லட்சுமி, சரஸ்வதி, பார்வதி, இதையே வாழ்க்கையின் நிலைகளாக, கல்வி, செல்வம், வீரம் என்று ஏற்கொள்கிறோம்.

    லட்சுமி, சரஸ்வதி, பார்வதி இவை இணைந்த ஒரே உருவான சிற்சக்தியே, அங்காளி என்ற உருவ மற்ற சக்தி ஆகும்.

    உருவ சக்தி அங்காளம்மன் என்றழைக்கப்படுகிறாள்.

    அங்காளம்மன் கோயில் கொண்ட தலைமையிடமே, மேல்மலையனூர்.

    இந்த கோயிலில் உள்ள தேவதையே தலைமைத்தாய், மூலதாய், முதன்மைத்தாய், குலதெய்வம் என்றும் வழிபாடு செய்கிறார்கள்.

    இதுவே வம்சாவழியாக செய்து கொண்டு இருக்கும் வழிபாட்டு முறையாகும்.

    அங்காளம்மனை குலதெய்வமாக ஏற்றுக் கொண்டவர்கள் தங்களின் வம்சா வழியினரான தங்களின் பிள்ளைகள் உற்றார் உறவினர்கள், நண்பர்கள் போன்றறோருடன் ஆடி மாதம் ஒன்று சேர்ந்து வந்து ஆயலத்துக்கு வருவதை வழக்கத்தில் வைத்துள்ளனர்.

    சித்த பிரம்மை பிடித்த சிவபெருமானின் பிரம்மஹத்தியை விலக்கியதைப் போன்றே மானிடராகிய மக்களின் துன்பம், துயரம், பிணிகள்,பீடைகள், தோசம், பில்லி வைப்பு, சூன்யம், ஏவல், காட்டேரி சேட்டைகள் போன்றவற்றை ஆடி மாத வழிபாடு மூலம் அங்காளம்மன் விலக்கி நல்வாழ்வு தருகிறாள் என்று கருதியே

    மேல்மலையனூரை தலைமையிடமாக ஏற்றுக் கொண்டு மேல்மலையனூருக்கு ஆடி மாதத்தில் வந்து காணிக்கை பிரார்த்தனைகளை செய்து நல்லருள் பெற்று செல்கின்றனர்.

    Next Story
    ×