search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தோல்வியை ஜீரணிக்க முடியவில்லை- தினேஷ் கார்த்திக் வருத்தம்
    X

    தோல்வியை ஜீரணிக்க முடியவில்லை- தினேஷ் கார்த்திக் வருத்தம்

    ஐதராபாத் அணியுடனான நேற்றைய ஆட்டத்தில் போராடி தோல்வி அடைந்ததை ஜீரணிக்க முடியவில்லை என கொல்கத்தா அணி கேப்டன் தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.#IPL2018 #KKR #DineshKarthik
    கொல்கத்தா:

    ஐ.பி.எல். போட்டியில் கொல்கத்தா அணி 14 ரன்னில் ஐதராபாத்திடம் தோற்று இறுதி ஆட்டத்துக்கான வாய்ப்பை இழந்தது.

    இந்த தோல்வி குறித்து கொல்கத்தா அணியின் கேப்டனும், சென்னையை சேர்ந்தவருமான தினேஷ் கார்த்திக் கூறியதாவது:-

    இந்த தோல்வியை ஜீரணிக்க கடினமாக இருக்கிறது. இந்த தொடர் முழுவதும் நாங்கள் சிறப்பாக ஆடினோம். இந்தப் போட்டியில் தோற்றது சிறப்பானதாக இல்லை. ரன் இலக்கை தொடங்கும் போது எங்கள் பக்கமே ஆட்டம் இருந்தது. ஆனால் சில மோசமான ஷாட்களும் ஒரு ரன் அவுட்டும் எங்களிடம் இருந்து போட்டியை மாற்றி விட்டது.

    நான், ராபின் உத்தப்பா ஆகியோர் நன்றாக ஆடி ஆட்டத்தை முடித்து இருக்க வேண்டும். ஆனால் எனது தவறின் மூலம் வெற்றியை நோக்கி செல்ல முடியவில்லை. கிறிஸ் லின் சிறப்பாக ஆடினார்.



    இந்த தொடரில் இளம் வீரர்கள் தங்களுக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொண்டனர். இது அணிக்கு சிறப்பாக அமையும்.

    இவ்வாறு தினேஷ் கார்த்திக் கூறினார்.#IPL2018 #KKR #DineshKarthik
    Next Story
    ×