search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    3 நாடுகள் போட்டியில் கோலி விரும்பினால் ஓய்வு கொடுக்கப்படும் - கிரிக். வாரியம் அறிவிப்பு
    X

    3 நாடுகள் போட்டியில் கோலி விரும்பினால் ஓய்வு கொடுக்கப்படும் - கிரிக். வாரியம் அறிவிப்பு

    இலங்கையில் நடைபெறும் 3 நாடுகள் போட்டியில் விராட் கோலி விருப்பப்பட்டால் அவருக்கு ஓய்வு கொடுக்கப்படும் என்று கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. #Nidahastrophy #ViratKohli
    மும்பை:

    விராட் கோலி தலைமையிவான இந்திய கிரிக்கெட் அணி தற்பேது தென்ஆப்பிரிக்காவில் விளையாடி வருகிறது. வருகிற 24-ந்தேதியுடன் இந்த தொடர் முடிகிறது.

    அடுத்து இந்திய அணி இலங்கையில் நடைபெறும் 3 நாடுகள் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் விளையாடுகிறது. 3-வது நாடாக வங்காளதேசம் கலந்து கொள்கிறது.

    இந்தப்போட்டி மார்ச் 6-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை கொழும்பு பிரேம தாச மைதானத்தில் நடக்கிறது. தொடக்க ஆட்டத்தில் இந்தியா- இலங்கை அணிகள் மோதுகின்றன.

    3 நாடுகள் 20 ஓவர் போட்டியில் இருந்து கேப்டன் விராட் கோலி விலகலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது. தொடர்ந்து போட்டிகளில் விளையாடி வருவதால் அவர் ஓய்வு கேட்க இருக்கிறார்.

    இந்த நிலையில் இலங்கையில் நடைபெறும் 3 நாடுகள் போட்டியில் விராட் கோலி விருப்பப்பட்டால் அவருக்கு ஓய்வு கொடுக்கப்படும் என்று கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இதுகுறித்து கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர் கூறியதாவது:-

    இலங்கையில் நடைபெறும் போட்டியில் இருந்து விராட் கோலி ஓய்வு பெற விரும்பினால் அவருக்கு ஓய்வு அளிக்கப்படும். விளையாடுவதா? வேண்டாமா? என்பது பற்றி அவர் தான் முடிவு செய்ய வேண்டும்.

    இந்த சீசனில் கடைசி தொடர் என்பதால் அவர் விளையாடவே விரும்பலாம். இதன்பிறகு ஐ.பி.எல். போட்டி தான் இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    3 நாடுகள் 20 ஓவர் போட்டிக்கான இந்திய அணி வீரர்கள் விவரம் இந்த வாரம் இறுதியில் அறிவிக்கப்படும்.

    விராட் கோலியின் ஆட்டம் தென்ஆப்பிரிக்கா பயணத்தில் மிகவும் அபாரமாக இருந்தது. அவர் 14 இன்னிங்சில் 871 ரன் குவித்துள்ளார். #Nidahastrophy #ViratKohli #Kohli #BCCI
    Next Story
    ×