என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நெல்லை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உண்ணாவிரதம் இருக்க முயன்ற சட்டக்கல்லூரி மாணவி கைது
Byமாலை மலர்25 Oct 2017 5:50 AM GMT (Updated: 25 Oct 2017 5:50 AM GMT)
கந்துவட்டிக்கு எதிராக நெல்லை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்ற சட்டக்கல்லூரி மாணவி நந்தினி தந்தையுடன் கைதாகியுள்ளார்.
நெல்லை:
நெல்லை கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்றுமுன்தினம் இசக்கிமுத்து என்பவர் தனது மனைவி, 2 குழந்தைகளுடன் கந்து வட்டி கொடுமை காரணமாக தீக்குளித்தார். இதில் அவரது மனைவி சுப்புலட்சுமியும், 2 குழந்தைகளும் பலியானார்கள்.
இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து நெல்லை கலெக்டர் அலுவலக நுழைவு வாயில்கள் மற்றும் வளாகம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மதுரையை சேர்ந்த சட்டக் கல்லூரி மாணவி நந்தினி, தனது தந்தையுடன் நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று வந்தார். அவர் கந்து வட்டிக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உண்ணாவிரதம் இருக்கப்போவதாக கூறினார்.
அவர் திடீரென கலெக்டர் அலுவலகத்தின் பிரதான நுழைவுவாயில் முன்பு கோரிக்கை அட்டையுடன் தரையில் அமர்ந்தார். மாணவி நந்தியினியுடன் அவரது தந்தையும் போராட்டத்தில் ஈடுபட்டார். உடனடியாக அங்கு போலீசார் விரைந்து வந்து, உண்ணாவிரதம் இருக்க அனுமதி இல்லை, தேவைப்பட்டால் புகார் கொடுத்து விட்டு செல்லுங்கள் என்றனர்.
ஆனால் மாணவி நந்தினி தொடர்ந்து அந்த இடத்தில் அமர்ந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றார். இதனால் போலீசார் மாணவி நந்தினியையும், அவரது தந்தையையும் கைது செய்தனர்.
ஏற்கனவே மாணவி நந்தினி தமிழகம் முழுவதும் டாஸ்மாக் மதுபான கடைக்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் நடத்தி கைதாகி பரபரப்பை ஏற்படுத்தியவர். தற்போது கந்துவட்டிக்கு எதிராக நெல்லை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்று தனது தந்தையுடன் கைதாகியுள்ளார்.
நெல்லை கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்றுமுன்தினம் இசக்கிமுத்து என்பவர் தனது மனைவி, 2 குழந்தைகளுடன் கந்து வட்டி கொடுமை காரணமாக தீக்குளித்தார். இதில் அவரது மனைவி சுப்புலட்சுமியும், 2 குழந்தைகளும் பலியானார்கள்.
இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து நெல்லை கலெக்டர் அலுவலக நுழைவு வாயில்கள் மற்றும் வளாகம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மதுரையை சேர்ந்த சட்டக் கல்லூரி மாணவி நந்தினி, தனது தந்தையுடன் நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று வந்தார். அவர் கந்து வட்டிக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உண்ணாவிரதம் இருக்கப்போவதாக கூறினார்.
அவர் திடீரென கலெக்டர் அலுவலகத்தின் பிரதான நுழைவுவாயில் முன்பு கோரிக்கை அட்டையுடன் தரையில் அமர்ந்தார். மாணவி நந்தியினியுடன் அவரது தந்தையும் போராட்டத்தில் ஈடுபட்டார். உடனடியாக அங்கு போலீசார் விரைந்து வந்து, உண்ணாவிரதம் இருக்க அனுமதி இல்லை, தேவைப்பட்டால் புகார் கொடுத்து விட்டு செல்லுங்கள் என்றனர்.
ஆனால் மாணவி நந்தினி தொடர்ந்து அந்த இடத்தில் அமர்ந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றார். இதனால் போலீசார் மாணவி நந்தினியையும், அவரது தந்தையையும் கைது செய்தனர்.
ஏற்கனவே மாணவி நந்தினி தமிழகம் முழுவதும் டாஸ்மாக் மதுபான கடைக்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் நடத்தி கைதாகி பரபரப்பை ஏற்படுத்தியவர். தற்போது கந்துவட்டிக்கு எதிராக நெல்லை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்று தனது தந்தையுடன் கைதாகியுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X