search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிசிசிஐ"

    • இந்திய அணி வெற்றி பெற அதிக வாய்ப்பு.
    • இந்தியா டி20 அணியை போன்று விளையாட வேண்டும்.

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி இந்திய அணிக்கு சிறப்பான பயிற்சியாளராக கவுதம் காம்பீர் இருப்பார் என்று தெரிவித்துள்ளார். தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட கங்குலி, நடைபெற இருக்கும் டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி வெற்றி பெற அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் தெரிவித்தார்.

    இது குறித்து பேசிய அவர், "நான் இந்திய பயிற்சியாளருக்கு ஆதரவாக இருக்கிறேன். அவர் விண்ணப்பித்து இருந்தால், காம்பீர் சிறப்பான பயிற்சியாளராக இருப்பார். உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு நல் வாய்புகள் உண்டு. இந்தியா டி20 அணியை போன்று விளையாட வேண்டும். அபாரமான திறமை நம்மிடம் உள்ளது," என்று தெரிவித்தார்.

     


    முன்னாள் இந்திய அணி வீரர் கவுதம் காம்பீர் ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பயிற்சியாளராக செயல்பட்டார். அந்த வகையில், பத்து ஆண்டுகள் கழித்து கொல்கத்தா அணி இந்த முறை ஐ.பி.எல். கோப்பையை வென்று அசத்தியது.

    இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளர் பற்றிய கேள்விக்கு விளக்கம் அளித்த பி.சி.சி.ஐ. செயலாளர் ஜெய் ஷா, "நமது அணிக்கு சரியான பயிற்சியாளரை கண்டுபிடிப்பது முழுமையான செயல்முறை. இந்திய கிரிக்கெட் கட்டமைப்பு பற்றிய புரிதல், தரவரிசையில் வளர்ச்சி பெற்றுள்ள வீரர்களை அடையாளம் காண்பதில் சிறப்பான ஒருத்தரை நியமிப்பதில் கவனம் செலுத்தி வருகிறோம்," என்று தெரிவித்தார். 

    • ஐ.பி.எல். 2024 தொடரில் கொல்கத்தா அணி கோப்பையை வென்றது.
    • மைதான பொறுப்பாளர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் உண்மையான ஹீரோக்கள் மைதான பராமரிப்பாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் தான் என பி.சி.சி.ஐ. செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.

    மேலும், ஐ.பி.எல். போட்டிகளை நடத்திய மைதானத்தின் பணியாளர்கள், பொறுப்பாளர்களுக்கு அதிகபட்சம் ரூ. 25 லட்சம் வரை வழங்கப்படும் என்று அவர் அறிவித்துள்ளார்.

    "சமீபத்திய டி20 சீசனின் உண்மையான கதாநாயகர்கள் அயராது உழைத்த மைதான பராமரிப்பாளர்கள் தான். அவர்கள் தான் கடினமான வானிலையின் போதும், தலைசிறந்த பிட்ச்களை உருவாக்குவதில் சிறப்பாக ஈடுபட்டனர்."

    "அவர்களை ஊக்குவிக்கும் வகையில் பத்து ஐ.பி.எல். மைதானங்களின் பராமரிப்பாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களுக்கு ரூ. 25 லட்சமும், கூடுதலாக மூன்று மைதானங்களின் ஊழியர்களுக்கு ரூ. 10 லட்சமும் வழங்கப்படும்," என்று ஜெய் ஷா தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

    ஐ.பி.எல். 2024 பத்து மைதானங்கள் பட்டியலில் - மும்பை, டெல்லி, சென்னை, கொல்கத்தா, சண்டிகர், ஐதராபாத், பெங்களூரு, லக்னோ, ஆமதாபாத் மற்றும் ஜெய்ப்பூர் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.

    • ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் அடுத்த மாதம் நடைபெறும் டி20 உலகக்கோப்பையுடன் முடிவடைகிறது.
    • இதனால் வேறு தலைமை பயிற்சியாளரை நியமிக்க பிசிசிஐ விண்ணப்பம் வெளியிட்டுள்ளது.

    இந்திய சீனியர் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருக்கும் ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் அடுத்த மாதம் நடைபெறும் டி20 உலகக்கோப்பையுடன் முடிவடைகிறது. இதனால் ஜூலை மாதத்தில் இருந்து வேறு தலைமை பயிற்சியாளர் நியமிக்கப்பட வேண்டும். இதற்கான விண்ணப்பத்தை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

    இந்த பதவிக்கு முன்னாள் வீரர்கள் பலர் விண்ணப்பிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் பிசிசிஐ வெளிநாட்டு பயிற்சியாளரை விரும்புவதாக தகவல் வெளியானது. அதன் அடிப்படையில் ரிக்கி பாண்டிங் அல்லது ஸ்டீபன் பிளமிங் ஆகியோரில் ஒருவர் கேப்டனாக நியமிக்கப்படலாம் எனத் தகவல் வெளியானது.

    இந்த நிலையில் பிரதமர் மோடி உள்பட பல பிரபலங்கள் பெயரில் போலி விண்ணப்பங்கள் குவிந்துள்ளதால் தேர்வுக்குழு குழப்பம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    குறிப்பாக இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு நரேந்திர மோடி, அமித்ஷா, சச்சின் டெண்டுல்கர், விரேந்தர சேவாக் என்ற பெயர்களில் போலி விண்ணப்பங்கள் குவிந்துள்ளதால் தேர்வுக்குழு குழப்பம் அடைந்துள்ளது.

    மொத்தம் 3000 விண்ணப்பங்கள் குவிந்துள்ள நிலையில், இதில் எது உண்மையான விண்ணப்பம் என கண்டறிவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கூகுள் ஃபார்ம் மூலமாக விண்ணப்பங்கள் பெறப்பட்டதால் அதிகளவில் போலி விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

    • இந்தியா முதல் சுற்றில் நான்கு போட்டிகளில் விளையாடுகிறது.
    • மூன்று போட்டிகள் நியூயார்க் நகரில் நடைபெறுகிறது.

    20 அணிகள் பங்கேற்கும் டி20 உலகக் கோப்பை அணி வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்கா ஆகிய இரண்டு நாடுகளில் நடத்தப்படுகிறது. உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற 1-ந்தேதி தொடங்குகிறது. இந்தியா வங்காளதேச அணிக்கெதிராக பயற்சி ஆட்டத்தில் விளையாடுகிறது.

    இந்தியா தனது முதல் போட்டியில் அயர்லாந்து அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டி இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு நடக்கிறது.

    ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வந்ததால் இந்திய அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் முன்னதாகவே அமெரிக்க செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

    இதனால் பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறாத ஐபிஎல் அணிகளில் இடம் பிடித்த வீரர்கள் உள்ளிட்டோர் முதற்கட்டமாக அமெரிக்கா செல்ல பிசிசிஐ ஏற்பாடு செய்தது.

    அதன்படி நேற்று முன்தினம் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா உள்ளிட்டோர் அமெரிக்கா புறப்பட்டனர். இந்த நிலையில் இந்திய நேரப்படி இன்று காலை அமெரிக்காவின் நியூயார்க் நகர் சென்றடைந்தனர். இது தொடர்பான வீடியோவை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

    பயிற்சியாளர்கள் டிராவிட், விக்ரம் ரதோர், வீரர்கள் அக்சார் பட்டேல், முகமது சிராஜ், ஆர்ஷ்தீப் சிங், ரோகித் சர்மா, பும்ரா, ஜடேஜா, குல்தீப் யாதவ் ஆகியோர் நியூயார்க் சென்றடைந்துள்ளனர்.

    இந்திய அணி விளையாடும் முதல் சுற்று போட்டிகள் அனைத்தும் அமெரிக்காவில்தான் நடைபெறுகிறது. மூன்று போட்டிகள் நியூயார்க்கிலும், ஒரு போட்டி லாடர்ஹில்லிலும் நடைபெறுகிறது.

    • கவுதம் கம்பீரை பயிற்சியாள்ராக தேர்ந்தெடுக்க பிசிசிஐ மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறது.
    • இந்திய பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க கவுதம் கம்பிர் ஒரு கண்டிஷன் போட்டுள்ளார்.

    இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதிவிக்கு ராகுல் டிராவிட்டிற்கு பிறகு அவருக்கு பொருத்தமான மாற்றாக யாரை தேர்ந்தெடுக்கலாம் என்று இந்திய கிரிக்கெட் கவுன்சிலான பிசிசிஐ தீவிரமாக ஆலோசித்து வருகிறது.

    விவிஎஸ் லக்ஷ்மண், கௌதம் கம்பீர், ரிக்கி பாண்டிங், ஜஸ்டின் லாங்கர், ஸ்டீபன் பிளெமிங் உள்ளிட்டோரின் பெயர்கள் பிசிசிஐ வட்டாரங்களில் முதலில் அடிபடத் தொடங்கின. இவர்களுள் கவுதம் கம்பீரை பயிற்சியாள்ராக தேர்ந்தெடுக்க பிசிசிஐ  மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறது.

     

    இதுதொடர்பாக அவரிடம் பேச்சுவார்த்தை நடநதபட்டு வருவதாக கூறப்படுகிறது. ஆனால் தற்போது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பயிற்சியாளராக ஐபி எல் போட்டிகளில் பிசியாக உள்ள கவுதம் கம்பிர் இந்திய பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க ஒரு கண்டிஷன் போட்டுள்ளார்.

     

    அதாவது இந்திய கிரிக்கெட் அணி பயிற்சியாளர் பதவிக்கு தான் நிச்சயம் தேர்ந்தெடுக்கப்படுவேன் என்ற உத்தரவாதத்தை பிசிசிஐ அளித்தால் மட்டுமே அதற்கு விண்ணப்பிப்பேன் என்று கவுதம் நிபந்தனை விதித்துள்ளார். இந்த கண்டிஷனை பிசிசிஐ ஏற்றுக்கொள்ள அதிகம் வாய்ப்புள்ளது என்று தெரிகிறது. இதற்கிடையில் பயிற்சியாளர் பதவிக்கான விண்ணப்பிக்கும் தேதி நாளையுடன் (மே 27) முடிவடைய உள்ளது குறிப்பிடத்தக்கது. 

    • 10 முதல் 11 மாதம் அணியுடன் இருக்க வேண்டும் என்பதால் தனக்கு ஒத்து வராது- ரிக்கி பாண்டிங்.
    • பயிற்சியாளர் பணி அனைத்தையும் உள்ளடக்கிய பாத்திரம் என்பதை நான் அறிவேன்- ஜஸ்டின் லாங்கர்.

    இந்திய அணிக்கு தலைமை பயிற்சியாளரை தேடும் பணியில் பிசிசிஐ ஈடுபட்டுள்ளது. இதற்கான விண்ணப்பத்தை கோரியுள்ளது. விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். வருகிற 28-ந்தேதி கடைசி நாளாகும்.

    வெளிநாட்டு பயிற்சியாளரை பிசிசிஐ விரும்புவதாகவும் ஸ்டீபன் பிளமிங் அல்லது ரிக்கி பாண்டிங் ஆகியோரில் ஒருவர் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் வெளியானது. அதேவேளையில் கவுதம் கம்பீர் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்தனர்.

    இந்த நிலையில்தான் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் "தலைமை பயிற்சியாளர் பதவிக்கான பிசிசிஐ தன்னை அணுகியது. தன்னுடைய வாழ்க்கை முறைக்கு தற்போது அந்த பதவி பொருந்தாது" எனத் தெரிவித்திருந்தார்.

    மற்றொரு ஆஸ்திரேலிய வீரரான ஜஸ்டின் லாங்கர் தலைமை பயிற்சியாளர் பதவி வேண்டவே வேண்டாம் எனக் கூறியுள்ளார்.

    இதற்கிடையே இந்தியாவில் தலைசிறந்த முன்னாள் வீரர்கள் உள்ளபோது, ஏன் வெளிநாட்டு பயிற்சியாளரை நியமிக்க வேண்டும் எனவும் விமர்சனம் எழுந்தது.

    இந்த நிலையில், தலைமை பயிற்சியாளர் பதவிக்காக ஆஸ்திரேலியா வீரர்கள் யாரிடமும் பிசிசிஐ கோரிக்கை வைக்கவில்லை என பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.

    • இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு ராகுல் டிராவிட்டுக்குப் பிறகு பொருத்தமான நபரை தேர்ந்தெடுக்கும் பணியில் பிசிசிஐ தீவிரம் காட்டி வருகிறது.
    • ஆஸ்திரேலிய அணிக்கு 4 ஆண்டுகளாக பயிற்சியாளராக இருந்த அனுபவத்தில் இதைச் சொல்கிறேன்

    இந்திய அணியின் பயிற்சியாளர் பதவி வேண்டவே வேண்டாம்! போட்டுடைத்த ஜஸ்டின் லாங்கர்.. கே.எல் ராகுல் கொடுத்த அட்வைஸ் இதுதான்

    டி20 உலகக் கோப்பை 2024க்கு பிறகு இந்திய அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் முடிவடைய உள்ளது. இதற்கிடையில் இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு ராகுல் டிராவிட்டுக்குப் பிறகு பொருத்தமான நபரை தேர்ந்தெடுக்கும் பணியில் பிசிசிஐ தீவிரம் காட்டி வருகிறது.

    இந்த பதவிக்கான விண்ணப்பம் வரும் மே 28 ஆம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில் கே.எல். ராகுல், விவிஎஸ். லக்ஷ்மன், ஜஸ்டின் லாங்கர் உள்ளிட்டோரின் பெயர்கள் பிசிசிஐ வட்டாரங்களில் அடிபடுகிறது. இந்நிலையில் இந்திய அணியின் பயிற்சியாளராக, தான் விரும்பவில்லை என்று நடப்பு ஐபிஎல் தொடரில் லக்னோ அணியின் பயிற்சியாளராக உள்ள ஜஸ்டின் லாங்கர் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து நேர்காணல் ஒன்றில் மனம் திறந்த லாங்கர், ஐபிஎல் போட்டிகளின் போது சமீபத்தில் லக்னோ அணி கேப்டன் கேஎல் ராகுலுடன் உரையாடினேன். அப்போது பயிற்சியாளர் பதவி குறித்து கே.எல்.ராகுல் கூறுகையில், இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருப்பவர் எதிர்கொள்ளும் அரசியலும் அழுத்தமும் எந்த ஒரு ஐபிஎல் அணி பயிற்சியாளரையும் விட கிட்டத்தட்ட ஆயிரம் மடங்கு அதிகமாக இருக்கும் என்று தெரிவித்திருந்தார். அதை மிகச் சரியான கருத்து என்று தான் கருதுவதாக லாங்கர் குறிப்பிட்டுள்ளார்.

     

    நேர்காணலில் தொடர்ந்து பேசிய லாங்கர், பயிற்சியாளர் பணி அனைத்தையும் உள்ளடக்கிய பாத்திரம் என்பதை நான் அறிவேன். ஆஸ்திரேலிய அணிக்கு 4 ஆண்டுகளாக பயிற்சியாளராக இருந்த அனுபவத்தில் இதைச் சொல்கிறேன், அது மிகவும் சோர்வூட்டக் கூடியதாக இருக்கும் என்று தெரிவித்தார். 

     

    • ஜூலை மாதம் முதல் 2027 டிசம்பர் மாதம் வரை தலைமை பயிற்சியாளராக செயல்பட வேண்டும்.
    • வருடத்திற்கு 10 மாதங்களுக்கு மேல் இந்தியாவில் இருக்க வேண்டும் என்பதால் தனக்கு சரிபட்டு வராது.

    இந்திய சீனியர் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருக்கும் ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் அடுத்த மாதம் நடைபெறும் டி20 உலகக்கோப்பையுடன் முடிவடைகிறது. இதனால் ஜூலை மாதத்தில் இருந்து வேறு தலைமை பயிற்சியாளர் நியமிக்கப்பட வேண்டும்.

    இதற்கான விண்ணப்பத்தை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. முன்னாள் வீரர்கள் பலர் விண்ணப்பிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    அத்துடன் பிசிசிஐ வெளிநாட்டு பயிற்சியாளராக விரும்புவதாக தகவல் வெளியானது. அதன் அடிப்படையில் ரிக்கி பாண்டிங் அல்லது ஸ்டீபன் பிளமிங் ஆகியோரில் ஒருவர் கேப்டனாக நியமிக்கப்படலாம் எனத் தகவல் வெளியானது.

    தலைமை பயிற்சியாளர் பதவிக்காலம் 2025 ஜூலை முதல் 2027 டிசம்பர் மாதம் வரையாகும். ஏறக்குறைய இரண்டரை ஆண்டுகள் ஆகும். இதனால் ஸ்டீபன் பிளமிங் யோசிப்பதாக தகவல் வெளியானது. எம்.எஸ்.டோனி மூலம் பிளமிங்கை சம்மதிக்க வைக்க முயற்சி நடப்பதாகவும் செய்திகள் வெளியானது.

    இந்த நிலையில் தலைமை பயிற்சியாளர் பதவிக்காக பிசிசிஐ தன்னை அணுகியது என்று ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். மேலும், அந்த வாய்ப்பை நிராகரித்தாகவும் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக ரிக்கி பாண்டிங் கூறியதாவது:-

    இது தொடர்பாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவின. இந்திய தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விருப்பம் இருந்தால் இதை ஏற்பேனா என்பதை அறிந்து கொள்வதற்காக, ஐபிஎல் போட்டியின்போது இது தொடர்பான பேச்சுவார்த்தை மெல்ல மெல்ல நடைபெற்றது. நான் தேசிய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியை விரும்புகிறேன். ஆனால் எனது வாழ்க்கையில் கூடுதலான நேரத்தை ஆஸ்திரேலியாவில் செலவழிக்க விரும்புகிறேன்.

    இந்திய அணியின் பயிற்சியாளராக நீங்கள் பதவி ஏற்றுக் கொண்டால் ஐபிஎல் தொடரில் விளையாட முடியாது என்பது எல்லோருக்கும் தெரியும். ஆகவே, தலைமை பயிற்சியாளராக விரும்பினால், ஐபிஎல் பயிற்சியாளர் பதவியில் இருந்து விலக வேண்டும்.

    மேலும், தலைமைப் பயிற்சியாளர் என்பது வருடத்தில் 10 அல்லது 11 மாத வேலையாகும். இப்போது எனது வாழ்க்கை முறைக்கும் நான் மிகவும் ரசிக்கும் விஷயங்களுக்கும் தலைமை பயிற்சியாளர் பதவி பொருந்தாது.

    இவ்வாறு ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.

    • இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளரைக் தேர்ந்தெடுப்பது சவாலானதாக மாறியுள்ளது.
    • பிசிசிஐயின் விருப்பப்பட்டியலில் கம்பீர் தற்போது முதலிடத்தில் இருப்பதாக கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளரைக் தேர்ந்தெடுப்பது இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு (பிசிசிஐ) சவாலானதாக மாறியுள்ளது. விண்ணப்பங்களுக்கான காலக்கெடு வரும் மே 27 ஆம் தேதியுடன் முடிவடைகிறது.

    இந்த பதவிக்கு கௌதம் கம்பீர் (கேகேஆர் அணியின் பயிற்சியாளர்), ஸ்டீபன் ஃப்ளெமிங் (சென்னை சூப்பர் கிங்ஸின் பயிற்சியாளர்), ஜஸ்டின் லாங்கர் (லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் பயிற்சியாளர்) மற்றும் ஸ்ரீலங்கா அணியின் முன்னாள் கேப்டன் மஹேலா ஜெயவர்த்தனே ( மும்பை இந்தியன்ஸின் செயல்திறன் தலைவர்) ஆகியோர் முக்கிய போட்டியாளர்களாகப் பார்க்கப்படுகின்றனர்.

    அனைவரும் அதிக லாபம் அளிக்கும் ஐபிஎல் தொடர் சம்பந்தமான வேலைகளில் பிசியாக உள்ளதால் அடுத்த 2027 ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பை வரை ஆண்டுக்கு 10 மாதங்கள் அணியுடன் பயணிக்கக்கூடிய வலுவான ஒரு பயிற்சியாளரை பிசிசிஐ தேடி வருகிறது.

    ஐபிஎல் வேலையில் ஈடுபடாதவர் தற்போதைய என்சிஏ தலைவர் விவிஎஸ் லட்சுமண் மட்டுமே. லக்ஷ்மண் பயிற்சியாளர் பணியை ஏற்க தயக்கம் காட்டிவருவதாக தெரிகிறது. மேலும் தற்போது பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்தவர்களுடன் பேசவும், அவர்கள் வேலையில் ஆர்வமாக உள்ளனரா எனச் சரிபார்க்கும் பணி தொடங்கியுள்ளது.

     

    பிசிசிஐயின் விருப்பப்பட்டியலில் கம்பீர் தற்போது முதலிடத்தில் இருப்பதாக கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்திய அணியின் மூத்த வீரர்களும் கம்பீரும் சமீப காலமாக நன்றாகப் பழகி வருவதாகத் தெரிகிறது. கேகேஆர் அணியுடன் அகமதாபாத்தில் உள்ள கம்பீருடன் வாரிய அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர் என்று கூறப்படுகிறது. கடைசியாக ராகுல் டிராவிட் இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்தது குறிப்பிடத்தக்கது. 

     

    • ஸ்டீபன் பிளமிங், ரிக்கி பாண்டிங், கவதம் கம்பீர் ஆகியோரில் ஒருவர் நியமிக்கப்பட வாய்ப்பு.
    • பதவிக்காலம் சுமார் இரண்டரை ஆண்டுகள் என்பதால் பிளமிங் யோசனை செய்வதாக தகவல்.

    இந்திய சீனியர் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் இருந்து வருகிறார். ஜூன் மாதத்துடன் அவரது பயிற்சி காலம் முடிவுடைகிறது. இதனால் விருப்பம் உள்ளோர் விண்ணப்பிக்கலாம் என பிசிசிஐ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. விண்ணப்பிக்க வருகிற 27-ந்தேதி கடைசி நாளாகும்.

    ராகுல் டிராவிட் மீண்டும் விண்ணப்பம் செய்ய விரும்பவில்லை. ரிக்கி பாண்டிங், ஸ்டீபன் பிளமிங், கவுதம் கம்பீர் ஆகியோரில் ஒருவர் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஸ்டீபன் பிளமிங் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணம் செய்ய மாட்டேன் என இதுவரை தெரிவிக்கவில்லை. ஆனால் டிசம்பர் 2027 வரை பதவிக்காலம் என்பது நீண்டு காலம் என அவர் யோசிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இதற்கு முன்னதாக ராகுல் டிராவிட்டும் இதுபோன்றுதான் யோசித்தார். பின்னர் சம்மதம் தெரிவித்தார். அதேபோல் பிளமிங்கும் சம்மதம் தெரிவிக்க வாய்ப்புள்ளதாக பிசிசிஐ அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

    பிளமிங் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்து வருகிறார். அவருடன் எம்.எஸ். டோனி நெருக்கமாக உள்ளார். இதனால் டோனி மூலம் பிளமிங்கை சம்மதிக்க வைக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    ராகுல் டிராவிட் முதலில் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு சம்மதம் தெரிவிக்கவில்லை. பின்னர் வற்புறுத்தப்பட்டார். அதேபோல் ஸ்டீபன் பிளமிங் வற்புறத்தப்படலாம். இதற்கு டோனியை விட சிறந்த நபர் யாராக இருக்க முடியும்? என பிசிசிஐ அதிகாரி ஒருவர் தெரிவித்தாக செய்திகள் வெளியாகி உள்ளது.

    • இந்திய அணியின் பயிற்சியாளராக ஸ்டீபன் பிளெமிங், ரிக்கி பாண்டிங் ஆகியோர் நியமனம் செய்யப்படுவதற்கு வாய்ப்பு இருந்தது.
    • பிசிசிஐ உயர்கட்ட நிர்வாகிகளின் பட்டியலில் அவரின் பெயர் முதலிடத்தில் இருப்பது தெரிய வந்துள்ளது.

    மும்பை:

    இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டின் பதவிக் காலம் டி20 உலகக்கோப்பை தொடருடன் முடிவடைய உள்ளது. அதன்பின் ராகுல் டிராவிட் பயிற்சியாளர் பொறுப்பில் தொடர விரும்பாததால், அடுத்த பயிற்சியாளருக்கான தேடுதலில் பிசிசிஐ ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக பிசிசிஐ தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் விவிஎஸ் லக்ஷ்மண் விருப்பம் காட்டவில்லை. இதனால் வெளிநாட்டு பயிற்சியாளரை நியமிப்பதாக தகவலகள் வெளியானது. குறிப்பாக ஸ்டீபன் பிளெமிங், ரிக்கி பாண்டிங், உள்ளிட்டோர் நியமனம் செய்யப்படுவதற்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது.

    இந்த நிலையில் கேகேஆர் அணியின் ஆலோசகராக செயல்பட்டு வரும் கவுதம் கம்பீர் இந்திய அணியின் பயிற்சியாளராக வர அதிக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    பிசிசிஐ உயர்கட்ட நிர்வாகிகளின் பட்டியலில் கவுதம் கம்பீரின் பெயர் முதலிடத்தில் இருப்பது தெரிய வந்துள்ளது. கவுதம் கம்பீர் உடனான இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டிக்கு பின் நடக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

    ஐபிஎல் தொடரில் லக்னோ அணியின் ஆலோசகராக கவுதம் கம்பீர் செயல்பட்ட 2 ஆண்டுகளும் அந்த அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது. அதேபோல் கேகேஆர் அணியின் ஆலோசகராக கவுதம் கம்பீர் அந்த அணியை மீண்டும் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


    • ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் ஜூன் மாதத்துடன் முடிவடைகிறது.
    • ரிக்கி பாண்டிங் அல்லது பிளமிங் பயிற்சியாளராக நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்திய தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படும் என பிசிசிஐ தெரிவித்திருந்தது. இதனால் ராகுல் டிராவிட்டின் தலைமை பயிற்சியாளர் பதவி ஜூன் மாதத்திற்குப் பிறகு நீட்டிக்கப்படாது என்பது உறுதியாகியுள்ளது.

    ராகுல் டிராவிட் மீண்டும் விண்ணப்பம் செய்ய விரும்பவில்லை. சில முன்னாள் வீரர்கள் அவரை வலியுறுத்திய போதிலும் மறுத்து விட்டார்.

    விவிஎஸ் லட்சுமண் இந்திய அணியில் ராகுல் டிராவிட் பயிற்சியாளராக இல்லாதபோது பயிற்சியாளராக செயல்பட்டார். மேலும், தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக உள்ளார். இதனால் விவிஎஸ் லட்சுமண் விண்ணப்பம் செய்யலாம் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் விவிஎஸ் லட்சுமணும் விண்ணப்பிக்க விரும்பவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது.

    ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங், நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீபன் பிளமிங் ஆகியோரில் ஒருவர் தலைமை பயிற்சியாளராக தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    பிளமிங் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராகவும், ரிக்கி பாண்டிங் டெல்லி அணியின் தலைமை பயிற்சியாளராகவும் உள்ளார்.

    ×