search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தற்கொலை"

    • கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்த ஆசிரியர் தம்பதியின் குடும்பத்தில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டு விரக்தி மனநிலையில் இருந்து வந்தனர்.
    • திருத்தங்கல்லில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிவகாசி:

    விருதுநகர் மாவட்டம் சிவகாசியை அடுத்த திருத்தங்கல் பாலாஜி நகர் பகுதியை சேர்ந்தவர் லிங்கம்(வயது50). இவரது மனைவி பழனியம்மாள்(48).

    இதில் லிங்கம் தேவதானம் அரசு பள்ளியிலும், பழனியம்மாள் சுக்கிரவார்பட்டி அரசு பள்ளியிலும் ஆசிரியர்களாக வேலை பார்த்து வந்தனர். இந்த தம்பதிக்கு ஆதித்யா என்ற மகனும், ஆனந்தவல்லி என்ற மகளும் இருந்தனர். ஆனந்தவல்லிக்கு திருமணமாகி சசிகா என்ற 2 வயது குழந்தை இருந்தது.

    கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்த ஆசிரியர் தம்பதியின் குடும்பத்தில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டு விரக்தி மனநிலையில் இருந்து வந்தனர். இந்த நிலையில் இன்று லிங்கம், தனது மகன் ஆதித்யா, மகள் ஆனந்தவல்லி, அவரது குழந்தை சசிகா ஆகியோருக்கு விஷம் கொடுத்து கொலை செய்தார். பின்னர் லிங்கம், பழனியம்மாள் இருவரும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

    திருத்தங்கல்லில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • உயர் அதிகாரிகள் ஏ.கே.47 ரக துப்பாக்கியை ஆய்வு செய்தனர்.
    • கண்காணிப்பு காமிரா காட்சிகளையும் ஆய்வு செய்து வருகிறார்கள்.

    மாமல்லபுரம்:

    கல்பாக்கத்தில் அணுமின் நிலையம் உள்ளது. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த அணுமின் நிலையத்தில் மத்திய தொழல் பாதுகாப்பு படையினர் ஷிப்டு முறையில் ஏ.கே.47 ரக துப்பாக்கியுடன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இங்கு கர்நாடக மாநிலத்தை சேர்ந்த பாதுகாப்பு படைவீரர் ரவி கிரண் (வயது37) பணியாற்றி வந்தார். நேற்று இரவு வழக்கம் போல் ரவிகிரண் அணுமின்நிலையத்திற்கு பாதுகாப்பு பணிக்கு வந்தார்.

    இந்த நிலையில் இன்று அதிகாலை பணி முடிந்து அணுமின் நிலைய ஊழியர்கள் குடியிருக்கும் நகரியத்திற்கு செல்ல உடன் பணியாற்றும் மற்ற வீரர்களுடன் பஸ்சில் பயணம் செய்தார். அப்போது அனைவரும் தங்களது துப்பாக்கியை வைத்து இருந்தனர்.

    சதுரங்கபட்டினம் "டச்சு கோட்டை" அருகில் உள்ள வேகத்தடையில் ஏறி இறங்கிய போது பஸ் குலுங்கியது.

    அந்த நேரத்தில் ரவிகிரண் கையில் இருந்த ஏ.கே.47 துப்பாக்கி திடீரென வெடித்தது. இதில் துப்பாக்கி குண்டுகள் ரவிகிரணின் கழுத்தில் பாய்ந்து தலைவழியாக வெளியே வந்தது. இதில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் ரவி கிரண் உயிரிழந்தார். இதனை கண்டு உடன் பயணம் செய்த மற்ற பாதுகாப்பு படை வீரர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து கல்பாக்கம் போலீசுக்கு தகவல் தெரி விக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து ரவிகிரணின் உடலை கைப்பற்றி கல்பாக்கம் அணுசக்தி துறை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    இதுபற்றி அறிந்ததும் அணுமின் நிலைய மத்திய தொழில் பாதுகாப்பு படை உயர் அதிகாரிகள் ரவிகிரண் வைத்து இருந்த ஏ.கே.47 ரக துப்பாக்கியை ஆய்வு செய்தனர். அப்போது அதில் இருந்த குண்டுகள் அகற்றப்படாமல் இருந்தது தெரிந்தது.

    வழக்கமாக பாதுகாப்பு பணியின் போது மட்டுமே துப்பாக்கியில் குண்டுகள் லோடு செய்து தயார் நிலையில் வைக்கப்படும். பணி முடிந்ததும் பாதுகாப்பு வீரர்கள் துப்பாக்கியில் இருந்த குண்டுகளை அகற்றி அதனை தங்களது பாதுகாப்பு இடுப்பு பெல்ட்டில் உள்ள சிறிய பையில் வைத்து விடுவார்கள்.

    ஆனால் ரவி கிரணிடம் இருந்த துப்பாக்கியில் குண்டுகள் அகற்றப்படாமல் அப்படியே இருந்து உள்ளது அதிகாரிகளுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. அவர் துப்பாக்கியில் இருந்த குண்டுகளை எதற்காக எடுக்காமல் இருந்தார்? மறந்து விட்டாரா? என்று தெரியவில்லை.

    எனவே வேகத்தடையில் பஸ் ஏறி இறங்கிய போது ரவிகிரணிடம் இருந்து துப்பாக்கி தவறுதலாக வெடித்து குண்டு பாய்ந்து இறந்தாரா? அல்லது தற்கொலை செய்வதற்கு திட்டமிட்டு துப்பாக்கியில் இருந்த குண்டை அகற்றாமல் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டாரா? என்று பல்வேறு கோணங்களில் பாதுகாப்பு படை உயர் அதிகாரிகள் மற்றும் சதுரங்கபட்டினம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

     இது தொடர்பாக அவருடன் பணியில் இருந்த மற்றும் பஸ்சில் பயணம் செய்த வீரர்களிடமும் விசாரணை நடந்து வருகிறது. மேலும் ரவிகிரணின் நடவடிக்கைகள் எப்படி இருந்தது என்பது தொடர்பாக அங்குள்ள கண்காணிப்பு காமிரா காட்சிகளையும் ஆய்வு செய்து வருகிறார்கள்.

    இறந்து போன ரவிகிரண் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்புதான் கர்நாடகாவில் இருந்து கல்பாக்கத்திற்கு பணிமாறுதல் ஆகி வந்து உள்ளார். அவருக்கு அனுசா என்ற மனைவியும், ஷாஸ்வினி, ரித்திகா என்ற 2 மகள்களும் உள்ளனர்.

    அணுமின் நிலைய மத்திய பாதுகாப்பு படை வீரர் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • மனைவி உடலை இடுப்பில் தூக்கி வைத்துக் கொண்டு பல்வேறு கோணங்களில் செல்பி எடுத்து அதை தனது செல்போனில் பதிவு செய்து கொண்டார்.
    • கதவை உடைத்து உள்ளே சென்றபோது பெண் படுக்கை அறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தது தெரிந்தது.

    காசியாபாத்:

    உத்தரபிரதேச மாநிலம் இடாக் பகுதியைச் சேர்ந்த தம்பதி காசியாபாத் பகுதியில் வசித்து வந்தனர். அங்குள்ள லோனி என்ற இடத்தில் கணவர் பணிபுரிந்து வந்தார்.

    அவரது மனைவி டெல்லி புறநகர் பகுதியான நொய்டாவில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.

    கடந்த சில மாதங்களாக கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. மனைவி வேலைக்கு செல்வது கணவருக்கு பிடிக்கவில்லை. இது தொடர்பாக இருவரும் கடும் வாக்குவாதத்தில் அடிக்கடி ஈடுபடுவது உண்டு.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் அவர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த கணவர் தாவணியால் மனைவியின் கழுத்தை சுற்றி சுருக்கு போட்டு இழுத்தார். இதில் அந்த பெண்ணின் கழுத்து எலும்புகள் நொறுங்கி அங்கேயே பிணமானார்.

    மனைவி உயிரிழந்ததை உறுதி செய்த கணவர் பிணத்துடன் செல்பி எடுத்தார். மனைவி உடலை இடுப்பில் தூக்கி வைத்துக் கொண்டு பல்வேறு கோணங்களில் செல்பி எடுத்து அதை தனது செல்போனில் பதிவு செய்து கொண்டார்.

    பிறகு செல்பி காட்சிகளை அவர் தனது தம்பி மற்றும் உறவினர்களுக்கு அனுப்பி வைத்தார். அதை கண்டதும் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அந்த நபரை தொடர்பு கொள்ள செல்போனில் முயற்சிகள் மேற்கொண்டனர். அதற்கு பதில் கிடைக்கவில்லை.

    இதையடுத்து அந்த நபரின் தம்பி காசியாபாத்தில் உள்ள வீட்டுக்கு வந்து பார்த்தார். கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. கதவை உடைத்து உள்ளே சென்றபோது அந்த பெண் படுக்கை அறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தது தெரிந்தது.

    அதே அறையில் கணவர் கொலை செய்ய பயன்படுத்திய அதே தாவணியை பயன்படுத்தி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரிந்தது. இருவரின் உடல்களை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • பீகாரில் போலீஸ் கஸ்டடியில் இருந்த கணவன் மனைவி மர்மமான முறையில் உயிரிழந்ததால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் காவல் நிலையத்தை தீவைத்து எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்ப்டுத்தியுள்ளது.
    • மைனர் பெண்ணை திருமணம் செய்ததற்காக கணவனை கைது செய்து பெண்ணையும் கணவனையும் போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்துள்ளனர்.

    பீகாரில் போலீஸ் கஸ்டடியில் இருந்த கணவன் மனைவி மர்மமான முறையில் உயிரிழந்ததால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் காவல் நிலையத்தை தீவைத்து எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்ப்டுத்தியுள்ளது. பீகார் மாநிலம் அராரியா மாவட்டத்தில் உள்ள தார்பாரி கிராமத்தில் தனது மனைவி இறப்பதற்கு 2 நாட்கள் முன்பு அவரது 14 வயதுடைய தங்கையை கணவனர் திருமணம் செய்துகொண்டுள்ளார்.

    மைனர் பெண்ணை திருமணம் செய்ததற்காக கணவனை கைது செய்து பெண்ணையும் கணவனையும் போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று (மே 17) மதியம் கைது செய்யப்பட்ட அவர்கள் இருவரும் காவல் நிலையத்தில் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.

    இதுதொடர்பாக கிடைத்துள்ள சிசிடிவி பதிவில் ஒரு நபர் தூக்கில் தொங்குவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளது. இதற்கிடையே அவர்கள் போலீசாரால் தாக்கப்பட்டதாலேயே உயிரிழந்துள்ளதாக கிராம மக்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

    காவலர்களை கல்லால் தாக்கிய பொதுமக்கள் அங்குள்ள பொருட்களையும் ஜன்னல்களையும் அடித்து நொறுக்கி காவல் நிலையத்தை மொத்தமாக தீவைத்து எரித்தனர். இந்த சம்பவத்தில் 5 போலீசார் படுகாயமடைந்துள்ளனர். மேலும் அந்த பகுதியில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பதற்றமான சூழல் நிலவுகிறது. 

    • போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது அறையில் உள்ள மின்விசிறியில் மாணவர் தனுஷ்குமார் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கிடந்தார்.
    • தற்கொலை குறித்து ஆர்.கே.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பெரம்பூர்:

    கொருக்குப்பேட்டை ஜே.ஜே.நகரை சேர்ந்தவர் முனுசாமி. லாரி டிங்கரிங் வேலை செய்து வருகிறார். இவரது மகன் தனுஷ்குமார் (வயது23). தனியார் மருத்துவக் கல்லூரியில் பிசியோதெரபி 3-ம் ஆண்டு படித்து வந்தார். இவருக்கு ஆன்லைனில் ரம்மி விளையாடும் பழக்கம் இருந்தது. இதில் அவர் பெரிய அளவில் பணத்தை இழந்ததாக கூறப்படுகிறது.

    தொடர்ந்து ரம்மி விளையாடுவதற்கு பணம் இல்லாததால் தனுஷ்குமார், தனது தந்தையிடம் ரூ.24 ஆயிரம் கேட்டார். ஆனால் அவர் ரூ.4 ஆயிரம் மட்டும் உள்ளது என்று கூறி ஆன்லைன் மூலம் பணம் பரிமாற்றம் செய்தார்.

    இந்த நிலையில் வீட்டில் உள்ள அறைக்கு சென்ற தனுஷ்குமார் பின்னர் நீண்டநேரம் ஆகியும் வெளியே வரவில்லை. கதவும் உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த பெற்றோர் ஆர்.கே.நகர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது அறையில் உள்ள மின்விசிறியில் மாணவர் தனுஷ்குமார் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கிடந்தார். அவரது உடலை போலீசார் மீட்டு பிரேத பரசோதனைக்காக ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மாணவர் தனுஷ்குமார் ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்ததால் தற்கொலை செய்து இருப்பது தெரிந்தது. இதுகுறித்து ஆர்.கே.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கள்ளக்காதல் விவகாரத்தில் 3 உயிர்கள் பறிபோன சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    • அடையாறு துணை கமிஷனர் பொன் கார்த்திக்குமார், சைதாப்பேட்டை உதவி கமிஷனர் சீனிவாசன் ஆகியோரும் நேரில் சென்று விசாரணை நடத்தினார்கள்.

    சென்னை:

    சென்னை மேற்கு மாம்பலம் கிருஷ்ணப்ப நாயக்கர் தெருவில் வசித்து வந்தவர் மோகன். 55 வயதான இவர் பழைய இரும்பு வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தார்.

    இவரது மனைவி யமுனா. 13 வயதில் சாய் சுவாதி என்ற மகளும், 5 வயதில் தேஜஸ் என்ற மகனும் இருந்தனர். சாய் சுவாதி 9-ம் வகுப்பு படித்து வந்தார். தேஜஸ் யு.கே.ஜி. படித்து வந்தான்.

    மனைவி யமுனா அதே பகுதியில் உள்ள அச்சகத்தில் வேலை செய்து வருகிறார். நேற்று காலையில் அவர் வேலைக்கு சென்று விட்டார். இதனால் மோகன் குழந்தைகளோடு வீட்டில் இருந்தார். மனைவி யமுனாவுக்கு வேறு ஒருவருடன் கள்ளக்காதல் ஏற்பட்டு

    உள்ளது. இதனை கண்டித்தும் அவர் கள்ளக்காதலை கைவிடாமல் தொடர்ந்துள்ளார்.

    இந்த விவகாரம் நேற்று மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதன் பின்னர் யமுனா வேலைக்கு சென்று விட்டார். வீட்டில் குழந்தைகளோடு இருந்த மோகன், வேறு ஒருவருடனான தொடர்பை மனைவி கைவிட மறுக்கிறாளே என்கிற வேதனையில் இருந்தார்.

    இதை தொடர்ந்து தனது குழந்தைகளை கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். இதையடுத்து கதவை உள் பக்கமாக பூட்டிக் கொண்டு மனதை கல்லாக்கிய மோகன் மகள் சாய் சுவாதியின் கழுத்தை அறுத்தார். இதில் அவள் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பலியானாள்.

    இதைத் தொடர்ந்து தனது 5 வயது மகன் தேஜசையும், மோகன் ஈவு இரக்கமின்றி கயிற்றால் கழுத்தை நெரித்து கொன்றார். பின்னர் தானும் தூக்கு போட்டு உயிரை மாய்த்துக் கொண்டார்.

    வேலை முடிந்து யமுனா மாலை 6.30 மணி அளவில் வீடு திரும்பினார். அப்போது கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. இதையடுத்து வெளியில் இருந்து கணவர் மற்றும் குழந்தைகளை யமுனா கூப்பிட்டு பார்த்தார். ஆனால் யாரும் பதில் அளிக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவர் அக்கம் பக்கத்தினரின் உதவியோடு கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்தார்.

    அங்கே அவர் கண்ட காட்சி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கணவர் தூக்கில் தொடங்கியதையும், குழந்தைகள் இறந்து கிடப்பதையும் பார்த்து யமுனா கதறி அழுதார். இதுபற்றி குமரன் நகர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இன்ஸ்பெக்டர் அமுதா விரைந்து சென்று விசாரணை நடத்தினார். அடையாறு துணை கமிஷனர் பொன் கார்த்திக்குமார், சைதாப்பேட்டை உதவி கமிஷனர் சீனிவாசன் ஆகியோரும் நேரில் சென்று விசாரணை நடத்தினார்கள். 3 பேரின் உடலையும் மீட்டு ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அவர்களது உடலை பார்த்து உறவினர்களும் கதறி அழுது கண்ணீர் வடித்தனர்.

    கள்ளக்காதல் விவகாரத்தில் 3 உயிர்கள் பறிபோன சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் யமுனாவின் கள்ளக்காதல் விவகாரத்தால் குடும்பத்தில் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்ததும் தெரிய வந்துள்ளது.

    மோகனுக்கும் யமுனாவுக்கும் திருமணமாகி 15 ஆண்டுகள் ஆகிறது. ஆரம்பத்தில் அவர்களது வாழ்க்கை சந்தோஷமாகவே சென்றுள்ளது. முதலில் பெண் குழந்தை பிறந்த பின்னர் 2-வதாக 8 ஆண்டுகள் கழித்து ஆண் குழந்தை பிறந்துள்ளது. 2 குழந்தைகள் மீதும் மோகன் அளவு கடந்த பாசம் வைத்திருந்துள்ளார். மனைவி யமுனாவின் தவறான தொடர்பால் மனமுடைந்த அவர் பின்னர் குழந்தைகளுக்காகவே வாழ தொடங்கியுள்ளார். கள்ளத் தொடர்பால் ஏற்பட்ட பிரச்சினை பூதாகரமாக வெடித்து இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். இவர்களது விவகாரம் தொடர்பாக கடந்த ஜனவரி மாதம் சைதாப்பேட்டை போலீசாரும் விசாரணை நடத்தியுள்ளனர்.

    பின்னர் மோகன், மனைவியோடு வாழ்வதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார். இதன்படி கடந்த 2 மாதங்களாக மேற்கு மாம்பலத்தில் வசித்து வந்துள்ளனர். இதன் பிறகும் யமுனா கள்ளக் காதலை கைவிடாததால் வாழப்பிடிக்காமல் தற்கொலை செய்து கொள்ள மோகன் முடிவு செய்தார். மனைவி தவறான பழக்கத்தில் இருப்பதால் குழந்தைகள் அனாதையாகி விடுமோ என அஞ்சியே அவர்களை கொன்றுள்ளார்.

    ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் இன்று பிரேத பரிசோதனை நடைபெறும் நிலையில் அங்கு யமுனாவின் வீட்டாரும், மோகனின் வீட்டாரும் குவிந்துள்ளனர். அவர்கள் கண்ணீர் மல்க காணப்பட்டனர். இரு வீட்டாருக்கும் பிரச்சினை ஏற்பட்டு விடக்கூடாது என்பதால் அங்கு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு உள்ளது.

    • பிரகாசை தொடர்பு கொண்ட பெண் ஒருவர் வங்கியில் இருந்து பேசுவதாக தெரிவித்துள்ளார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் நல்லூர் பிள்ளையார் கோவில் 2-வது வீதியை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 36). பனியன் நிறுவனத்தில் தையல் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவர் ஒரு வங்கியின் கிரெடிட் கார்டு பெற்றிருந்தார்.

    இந்நிலையில் பிரகாசை தொடர்பு கொண்ட பெண் ஒருவர் வங்கியில் இருந்து பேசுவதாக தெரிவித்துள்ளார். இதனை நம்பிய பிரகாஷ் அந்த பெண் கேட்ட கேள்விகளுக்கு செல்போன் மூலம் பதில் அளித்துள்ளார். அப்போது கிரெடிட் கார்டு சேவையை நிறுத்த வேண்டும் என்று பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

    இதையடுத்து அந்த பெண், செல்போனுக்கு ஒருமுறை பயன்படுத்தப்படும் கடவுச்சொல்(ஓ.டி.பி.) வரும் என்றும், அதனை தெரிவிக்குமாறும் கூறியுள்ளார். இதனை நம்பிய பிரகாஷ் கடவுச்சொல்லை பெண்ணிடம் தெரிவிக்கவே, சிறிது நேரத்தில் ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களை வாங்கியதாக பிரகாஷின் செல்போனுக்கு குறுந்தகவல் கிடைத்துள்ளது.

    இதனால் அதிர்ச்சியடைந்த அவர் உடனே வங்கிக்கு சென்று முறையிட்டார். அப்போது வங்கியில் இருந்து யாரும் பேசவில்லை என்று தெரிவித்துள்ளனர். இதன் மூலம் தான் ஏமாற்றப்பட்டதை பிரகாஷ் உணர்ந்தார்.

    உடனே இது குறித்து சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் தெரிவித்தார். இருப்பினும் ரூ.1லட்சம் பறிபோனதால் விரக்தி அடைந்த பிரகாஷ், விஷம் குடித்து விட்டார். உடனடியாக உறவினர்கள் அவரை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பிரகாசை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து நல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • யோகீஸ்வர்நாத் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
    • போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கோழிக்கோட்டில் தேசிய தொழில் நுட்ப கல்வி மையம் (என்.ஐ.டி) செயல்பட்டு வருகிறது. இங்கு தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மாணவர்கள் படித்து வருகின்றனர். மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை சேர்ந்த யோகீஸ்வர்நாத் என்பவர் மூன்றாம் ஆண்டு மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்து வந்தார்.

    அவர் அங்குள்ள விடுதியில் தங்கியிருந்தார். இந்நிலையில் மாணவர் யோகீஸ்வர்நாத் விடுதியின் சி-பிளாக்கின் 7-வது மாடியில் இருந்து கீழே குதித்தார். இதில் அவர் படுகாயமடைந்து உயிருக்கு போராடியபடி கிடந்தார். இதையடுத்து அவர் அங்கிருந்து மீட்கப்பட்டு கோழிக்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.

    ஆனால் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியிலேயே மாணவர் யோகீஸ்வர்நாத் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். மாணவர் யோகீஸ்வர்நாத் மாடியில் இருந்து குதித்து எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்பது உடனடியாக தெரியவில்லை. பாடங்கள் தொடர்பாக மன அழுத்தம் ஏறபட்டதன் காரணமாக அவர் இந்த விபரீத முடிவை எடுத்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

    இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தேசிய தொழில் நுட்ப கல்வி மையத்தின் விடுதியில் 7-வது மாடியில் இருந்து குதித்து மாணவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கோழிக்கோட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே விஜயபிரிய குமார் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புதுச்சேரி:

    விழுப்புரம் ரங்கசாமி லே அவுட்டை சேர்ந்தவர் ஜெயராமன்.

    இவரது இளைய மகன் விஜயபிரியகுமார் (வயது 47) இவர் பல் மருத்துவ படிப்பு 3ம் ஆண்டு படித்துக் கொண்டிருந்த போது மன நோயால் பாதிக்கப்பட்டார். இதனையடுத்து அவர் கடந்த 9 ஆண்டுகளாக அரியாங்குப்பம் மணவெளியில் உள்ள மனநல மையத்தில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார்.

    அவரை அவரது உறவினர்கள் அவ்வப்போது சென்று பார்த்துவிட்டு வருவது வழக்கம். இந்த நிலையில் நேற்று மதியம் விஜயபிரிய குமாரின் சித்தப்பா ராமகிருஷ்ணன் மனநல மையம் சென்று அவரை பார்த்து பேசிவிட்டு வந்தார்.

    அவர் வந்து சென்ற சிறிது நேரத்தில் விஜயபிரிய குமார் தற்கொலை செய்து கொள்ளும் முடிவில் 2-வது மாடிக்கு சென்று அங்கிருந்து கீழே குதித்தார்.

    அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு உடனே கிருமாம்பாக்கம் தனியார் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கிருந்து அவர் மேல் சிகிச்சைக்காக ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே விஜயபிரிய குமார் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து அரியாங்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு விசாரணை நடத்தினர்.
    • மும்பை சிறப்பு பிரிவு போலீசாரின் காவலில் இருந்த அனுஜ்தாபன் தற்கொலை.

    பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகரான சல்மான் கான் வீடு மும்பை பாந்த்ராவில் அமைந்துள்ளது.

    கடந்த ஏப்ரல் மாதம் 14ம் தேதி அன்று அதிகாலை ஐந்து மணியளவில் இவரது வீட்டு முன் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கியால் வானத்தை நோக்கி 4 முறை சுட்டுள்ளனர்.

    சத்தம் கேட்டு உடனடியாக வீட்டில் இருந்த காவலாளிகள் வெளியே வந்து பார்த்தபோது அந்த நபர்கள் அங்கிருந்து தப்பியோடினர்.

    இதுதொடர்பாக உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு விசாரணை நடத்தினர்.

    இந்த விவகாரத்தில் விக்கி குப்தா மற்றும் சாகர் பால் ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். இவர்களை மும்பை குற்றப்பிரிவு போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விசாரணையில் கிடைத்த தகவலின் அடிப்படையில், துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் பிரபல ரவுடி லாரன்ஸ் பிஷ்னோய் மற்றும் அவரது சகோதரர் அனுஜ் தாபன் ஆகிய இருவருக்கும் தொடர்பு இருப்பதாக மும்பை போலீசார் கைது செய்தனர்.

    இந்நிலையில், விசாரணைக்காக மும்பை சிறப்பு பிரிவு போலீசாரின் காவலில் இருந்த அனுஜ்தாபன் தற்கொலைக்கு முயன்றார்.

    அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்து, தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    அவர், கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியான நிலையில், அனுஜ் தாபன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

    • புகாரின் பேரில் பணிப்பெண் லட்சுமியிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
    • பணிப்பெண் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்

    திரைப்பட தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா வீட்டில் கடந்த மாதம் தங்க நகைகள் திருடுபோனது.

    இதையடுத்து, மனைவிக்கு தந்த தங்க பரிசு பொருட்கள் காணாமல் போனதாக மாம்பலம் காவல் நிலையத்தில் ஞானவேல் ராஜா புகார் அளித்திருந்தார்.

    புகாரின் பேரில் பணிப்பெண் லட்சுமியிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

    அப்போது, நகைகளை திருடவில்லை என பணிப்பெண் சொன்னதாகவும், விசாரணைக்கு இன்று வருமாறு போலீசார் எழுதி வாங்கிக் கொண்டு அனுப்பியதாகவும் கூறப்படுகிறது.

    இந்நிலையில், மன உளைச்சலில் இருந்து பணிப்பெண் அரளி விதையை அரைத்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

    இதைகண்ட அவரது குடும்பத்தினர், பணிப்பெண்ணை உடனடியாக மீட்கப்பட்ட நிலையில், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கிராம நிர்வாக அதிகாரி தற்கொலை செய்த சம்பவம் உடுமலை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை கணக்கம்பாளையம் கிராம நிர்வாக அலுவலராக கருப்புச்சாமி என்பவர் பணியாற்றி வந்தார். இவரது சொந்த ஊர் கோமங்கலம் அடுத்துள்ள கூலநாய்க்கன்பட்டி.

    இந்தநிலையில் இன்று காலை கருப்புச்சாமி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த தகவல் அறிந்ததும் உடுமலை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

    மன உளைச்சல் காரணமாக கருப்புச்சாமி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கிராம நிர்வாக அதிகாரி தற்கொலை செய்த சம்பவம் உடுமலை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ×