என் மலர்
செய்திகள்
- இந்த மாத இறுதியில் தனிக்கட்சி தொடங்க போவதாகவும் அறிவித்தார்.
- 1992 இல் பாபர் மசூதி இடிக்கப்பட்டு அங்கு தற்போது ரூ.1,800 கோடி செலவில் ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது
மேற்கு வங்காள மாநிலத்தில் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது.
அங்குள்ள பரத்பூர் தொகுதி திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக இருப்பவர் ஹூமாயூன் கபீர். இவர் முர்ஷிதாபாத்தில் பாபர் மசூதி பாணியிலான மசூதி கட்ட அழைப்பு விடுத்தார்.
இதைதொடர்ந்து அவரை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 'சஸ்பெண்டு' செய்தது. இதனால் அவர் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ய போவதாகவும், இந்த மாத இறுதியில் தனிக்கட்சி தொடங்க போவதாகவும் அறிவித்தார்.
இந்த நிலையில் ஏற்கனவே அறிவித்தவாறு ஹூமாயின் கபீர் மேற்குவங்காளத்தில் பாபர் மசூதிக்கான அடிக்கல் நாட்டு விழாவை தொடங்கினார். இதனால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது.
இந்நிலையில் யோகி ஆதித்யநாத் ஆட்சி செய்யும் உத்தரப் பிரதேச துணை முதல்வர் கேசவ் பிரசாத் மௌரியா எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய கேசவ் பிரசாத் மௌரியா, "மசூதி கட்டுவதற்கு எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. இருப்பினும், பாபரின் பெயரில் யாராவது மசூதி கட்டினால், அதை எதிர்ப்பது மட்டுமல்லாமல், அது உடனடியாக இடிக்கப்படுவதை உறுதி செய்வோம்" என்று மிரட்டல் விடுத்தார்.
முன்னதாக உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் இந்து அமைப்பினரால் 1992 இல் பாபர் மசூதி இடிக்கப்பட்டு அங்கு தற்போது ரூ.1,800 கோடி செலவில் ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- அவர் நடித்த முதல் படம் கிச்சா. அதனால் அவரை அவரது ரசிகர்கள் கிச்சா சுதீப் என அழைக்கிறார்கள்.
- இது கிச்சா சுதீப்பின் 47- வது படமாகும்.
கன்னட திரையுலகின் முன்னணி நடிகராக இருப்பவர் கிச்சா சுதீப். அவர் நடித்த முதல் படம் கிச்சா. அதனால் அவரை அவரது ரசிகர்கள் கிச்சா சுதீப் என அழைக்கிறார்கள். இவர் நடிகர் விஜய்யின் புலி, நானியின் 'நான் ஈ' ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
இவரது நடிப்பில் கடைசியாக வெளியான மேக்ஸ் திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இப்படத்தை விஜய் கார்த்திகேயா இயக்கினார்.
இந்நிலையில் கிச்சா மீண்டும் விஜய் கார்த்திகேயா இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். இது கிச்சா சுதீப்பின் 47- வது படமாகும். இந்த படத்திற்கு மார்க் என பெயரிடப்பட்டுள்ளது.
மேலும், இப்படம் வருகிற கிறிஸ்துமஸ் பண்டிகையில் வெளியாக உள்ளது.
இந்நிலையில், மார்க் படத்தின் டிரெய்லர் தற்போது படக்குழுவால் வெளியிடப்பட்டுள்ளது.
- பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் திறந்து வைத்தார்.
- லடாக்கில் உள்ள தர்புக்-ஷியோக்-தௌலத் பேக் ஓல்டி சாலையில் உள்ள KM-120 போஸ்டுக்கு அருகில் இந்த நினைவுச்சின்னம் அமைந்துள்ளது.
ஜூன் 15, 2020இல் எல்லைப்பகுதியான லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் சீன வீரர்கள் தாக்குதல் நடத்தினர். இதில் 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர்.
இந்திய வீரர்களும் பதில் தாக்குதல் நடத்தினர். இதன் பின் இரு நாட்டு உறவுகளிலும் விரிசல், அண்மையில் ஷாங்காய் உச்சிமாநாட்டில் கலந்துகொள்ள பிரதமர் மோடியின் சீன பயணத்தின் மூலம் சரியானது.
இந்நிலையில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்த லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் ஒரு போர் நினைவுச்சின்னத்தை பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தார்.
இது உலகின் மிக உயரமான இடத்தில் அமைந்துள்ள போர் நினைவுச்சின்னம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது.
உலகின் மிகக் கடினமான பூஜ்ஜியத்திற்கும் குறைவான வெப்பநிலை, குறைந்த ஆக்ஸிஜன் அளவு கொண்ட இயற்கை சூழலில் அமைந்துள்ள இராணுவப் மண்டலங்களில் ஒன்றான லடாக்கில் உள்ள தர்புக்-ஷியோக்-தௌலத் பேக் ஓல்டி சாலையில் உள்ள KM-120 போஸ்டுக்கு அருகில் இந்த நினைவுச்சின்னம் அமைந்துள்ளது.
தியாகம் மற்றும் வீரத்தை குறிக்கும் வகையில் சிவப்பு மற்றும் வெள்ளை கிரானைட்டால் கட்டப்பட்ட இந்த நினைவுச்சின்னம் திரிசூலம் வடிவத்தில் உள்ளது.
நினைவுச்சின்னத்தைச் சுற்றி, கால்வான் பள்ளத்தாக்கின் பாதுகாப்பிற்காக தங்கள் உயிரைத் தியாகம் செய்த வீரர்களைக் குறிக்கும் 20 வெண்கல சிலைகள் நிறுவப்பட்டுள்ளன.
இந்த போர் நினைவு வளாகத்தில் கல்வான் மோதல், லடாக்கின் இராணுவ வரலாறு அகியவற்றை காட்சிப்படுத்தும் ஒரு அருங்காட்சியகம் மற்றும் டிஜிட்டல் கேலரி ஆகியவை அமைக்கப்பட்டுள்ளது.
- ரேபிட் சப்போர்ட் ஃபோர்ஸ் (RSF) வருவதால் உள்நாட்டுப் போர் தீவிரமடைந்து வருகிறது.
- அப்பகுதியில் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டதால் செய்திகள் வெளிவருவது கடினமாகி உள்ள சூழலில் இறப்பு எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம்.
ஆப்பிரிக்க நாடான சூடானில் கடந்த 2023 முதல் அரசுப் படைகளுடன் துணை ராணுவமான ரேபிட் சப்போர்ட் ஃபோர்ஸ் (RSF) சண்டையிட்டு வருவதால் உள்நாட்டுப் போர் தீவிரமடைந்து வருகிறது.
இந்நிலையில் அரசாங்கத்தை எதிர்த்துப் போராடும் RSF தெற்கு கோர்டோஃபான் மாநிலத்தின் கலோகி நகரில் உள்ள ஒரு நர்சரி பள்ளி மீது டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் 33 குழந்தைகள் உட்பட 50 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. சூடானிய மருத்துவர்கள் அமைப்பு இதை தெரிவித்துள்ளது.
சிவிலியன் உள்கட்டமைப்பைப் பாதுகாப்பது உட்பட சர்வதேச மனிதாபிமான சட்டத்தை ஆர்.எஸ்.எஃப் வெளிப்படையாக மீறுவதாக அவர்கள் குற்றம் சாட்டினர்.
அப்பகுதியில் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டதால் செய்திகள் வெளிவருவது கடினமாகி உள்ள சூழலில் இறப்பு எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
- இந்திய அணி அரை இறுதியில் 7 தடவை உலக கோப்பையை கைப்பற்றிய ஜெர்மனியை எதிர்கொண்டது.
- இந்திய அணி ஜெர்மனியை தோற்கடித்து 4-வது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறும் என்று எதிர்பார்ப்பு நிலவியது.
14-வது ஜூனியர் உலக கோப்பை ஆக்கி போட்டி சென்னை, மதுரையில் நடைபெற்று வருகிறது. கடந்த 28-ந் தொடங்கிய இந்த போட்டியில் நாக் அவுட்டான கால் இறுதி ஆட்டங்கள் நேற்று நடைபெற்றது.
2 முறை சாம்பியனான இந்திய அணி பெல்ஜியத்தை வீழ்த்தி 7-வது முறையாக அரை இறுதிக்கு தகுதி பெற்றது.
போட்டியின் முடிவில் 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலை ஏற்பட்டது. இதனால் வெற்றி- தோல்வியை நிர்ணயிக்க பெனால்டி ஷூட்- அவுட் கடைபிடிக்கப்பட்டது. இதில் இந்தியா 4- 3 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
இந்திய அணி அரை இறுதியில் 7 தடவை உலக கோப்பையை கைப்பற்றிய ஜெர்மனியை எதிர்கொண்டது. சென்னை எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நேற்று இரவு 8 மணிக்கு தொடமாகியது.
ரோகித் தலைமையிலான இந்திய அணி ஜெர்மனியை தோற்கடித்து 4-வது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறும் என்று எதிர்பார்ப்பு நிலவியது.
ஆனால் 4 சுற்றுகள் முடிவில் 5-1 என்ற கணக்கில் இந்திய அணியை வீழ்த்தி ஜெர்மனி வீழ்த்தியது. இதன் மூலம் ஜெர்மனி அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
இறுதிப்போட்டியில் ஸ்பெயின் அணியை ஜெர்மனி எதிர்கொள்ள உள்ளது. வரும் 10 ஆம் தேதி சென்னை எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் இறுதிப் போட்டி நடைபெற உள்ளது.
- இசை நடனத்துடன் கொண்டாட்டங்கள் நடந்து கொண்டிருந்தது.
- முன்னா கானின் மகன் ஷஹாத் (17) படுகாயமடைந்தார்.
உத்தர பிரதேசத்தின் எட்டா மாவட்டத்தில் உள்ள உமை ஆசாத்நகர் கிராமத்தில் சனிக்கிழமை இரவு திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டத்தின் போது துப்பாக்கி தவறுதலாக சுட்டதில் இரண்டு சிறுவர்கள் கொல்லப்பட்டனர்.
இசை நடனத்துடன் கொண்டாட்டங்கள் நடந்து கொண்டிருந்தபோது துப்பாக்கி வெடித்தது.இதில் அசாதுதீனின் மகன் சுஹைல் (12) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். முன்னா கானின் மகன் ஷஹாத் (17) படுகாயமடைந்தார். அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவரும் உயிரிழந்ததாக மருத்துவர்கள் அறிவித்தனர்.
துப்பாக்கியால் சுட்டுக் கொண்டாடும் போது இந்த சம்பவம் நடந்ததாக சம்பவ இடத்திற்குச் சென்று ஆய்வு செய்த கூடுதல் எஸ்பி ஸ்வேதாம்ப பாண்டே தெரிவித்தார். ஆனால் சரியான காரணம் மற்றும் யார் துப்பாக்கிச் சூடு நடத்தினர் என்பது விசாரணைக்குப் பிறகுதான் உறுதிப்படுத்தப்பட முடியும் என்றார்.
- அனில் ரவிபுடி அடுத்ததாக சிரஞ்சீவி நடிக்கும் 157 திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
- கேத்ரீன் தெரேசா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.
கடந்த ஜனவரி மாதம் வெங்கடேஷ், மீனாட்சி சவுத்ரி மற்றும் ஐஷ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியானது சங்கராந்திகி வஸ்துனம் திரைப்படம். இப்படத்தை அனில் ரவிபுடி இயக்கினார்.
இப்படம் வெளியாகி பிளாக்பஸ்டர் திரைப்படமாக அமைந்தது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அனில் ரவிபுடி அடுத்ததாக சிரஞ்சீவி நடிக்கும் 157 திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
படத்திற்கு மன ஷங்கர வரபிரசாத் என தலைப்பு வைத்துள்ளனர். படத்தின் நாயகியாக நயன்தாரா நடிக்கிறார். கேத்ரீன் தெரேசா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். படத்தை சாகு கரபதி மற்றும் சுஷ்மிதா கொனிடேலா தயாரிக்கின்றனர்.
இந்த படத்தின் முதல் பாடல் "மீசால பில்லா" அண்மையில் வெளியாகி வைரலானது. இந்நிலையில் 2வது பாடலான
"சசிரேகா" தற்போது வெளியாகி உள்ளது.
இப்பாடலை பீம்ஸ் செசிரோலியொ மற்றும் மது பிரியா ஆகியோர் பாடியுள்ளனர். இப்படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என்று கூறப்படுகிறது.
- நடந்து முடிந்த பீகார் சட்டமன்றத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைத்த ஐக்கிய ஜனதா தளம் வெற்றி பெற்றது.
- லண்டனில் உள்ள உலக சாதனை புத்தகத்தில் நிதிஷ் குமார் இடம்பிடித்து உள்ளார்.
நடந்து முடிந்த பீகார் சட்டமன்றத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைத்த ஐக்கிய ஜனதா தளம் வெற்றி பெற்றது.
இதைத்தொடர்ந்து ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ் குமார் 10வது முறையாக பீகார் முதல்வராக பதவியேற்றார். கடந்த 2005 இல் 20 வருடங்களாக அவர் அந்த பதவியில் நீடித்து வருகிறார்.
இந்நிலையில் லண்டனில் உள்ள உலக சாதனை புத்தகத்தில் நிதிஷ் குமார் இடம்பிடித்து உள்ளார்.
சுதந்திர இந்தியாவின் ஒரு மாநில முதல்வராக 10வது முறையாக பதவியேற்ற ஒரே நபர் என்ற பெருமையை பெற்றுள்ளதாக அங்கீகரித்து, நிதிஷ் குமார பெயர் உலக சாதனை புத்தகத்தில் சேர்க்கப்பட்டு உள்ளார் என ஐக்கிய ஜனதா தளம் தேசிய செயல் தலைவர் சஞ்சய்குமார் ஜா இந்த தகவலை பகிர்ந்துள்ளார்.
நிதிஷ் குமார் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏவாக அல்லாமல் எம்எல்சியாக நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
- இதனால் பக்தர்கள் பீதியில் அங்கிருந்து ஓடத் தொடங்கியதால் குழப்பம் ஏற்பட்டது.
- தகவலறிந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்தனர்.
பக்தர்கள் வருகையை ஒட்டி சபரிமலை அய்யப்பன் கோவில் சன்னிதானத்தில் உள்ள மரங்களில் மின்விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று காலை 8.20 மணிக்கு அவ்வாறு அலங்காரம் செய்யப்பட்ட ஆலமரத்தில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. இதனால் பக்தர்கள் பீதியில் அங்கிருந்து சிதறி ஓடத் தொடங்கியதால் குழப்பம் ஏற்பட்டது.
தகவலறிந்து தீயணைப்பு வீரர்கள் மற்றும் சன்னிதான தீயணைப்பு படை கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து தீயை பரவ விடாமல் துரிதமாக செயல்பட்டு அணைத்தனர். இந்த சம்பவத்தால் சற்று நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
- நியூயார்க்கின் முதல் முஸ்லீம் மேயர் மற்றும் முதல் இந்திய வம்சாவளி மேயர்.
- மக்களை எளிதில் அணுகக்கூடிய உத்திகளை கையாண்டவர்.
"இந்தப் பக்கம் பாத்தா சோனு மழ... இந்தப் பக்கம் பாத்தா சோனு மழ... சரி பின்னாடி திரும்பி பாப்போமேனு பாத்தா அந்த பக்கமு மழ" என்பது வடிவேலு காமெடி. அந்த மழைபோல 2025ல் எல்லா பக்கமும் பேசப்பட்டவர்தான் நியூயார்க் மேயர் ஜோரான் மம்தானி. "மழ பெஞ்சா சுத்தியுதாண்டா பெய்யும்" என்ற பிரபுவின் பதில்போல, ஒரு நாட்டில் நடக்கும் முக்கிய செய்தி உலக நாடுகளுக்கு பரவும் அல்லவா. அப்படி பரவினார் மம்தானி.
நியூயார்க்கின் முதல் முஸ்லீம் மேயர் மற்றும் முதல் இந்திய வம்சாவளி மேயர். ஆளும்கட்சியை வீழ்த்தி ஜனநாயக கட்சியின் உறுப்பினரான இவர் நியூயார்க் மேயர் ஆகிறார். உலகில் உள்ள பல்வேறு நாடுகளிலும் மேயர் தேர்தல் நடக்கும். எந்தக் கட்சியின் உறுப்பினராவது வெற்றிப் பெற்றுதான் ஆகவேண்டும். அவர்கள் பதவி ஏற்பார்கள். ஆனால் மம்தானிக்கு மட்டும் எப்படி இவ்வளவு பிரபலம் கிடைத்தது? நம்பர் 1 டிரெண்டிங் ஆனது எப்படி?

"பில்டப் பண்ட்ரனோ, பீலா விட்ரனோ அது முக்கியமில்ல. நம்ம எது பண்ணாலும் இந்த உலகம் நம்மல உடனே திரும்பி பாக்கணு" எனும் வடிவேலு வசனத்திற்கு ஏற்ப தனது நடவடிக்கைகள் மூலம் பெரும் கவனம் ஈர்த்தவர் மம்தானி. குஜராத் கலவர வழக்கில் மோடியை பகிரங்கமாக விமர்சித்தவர். இஸ்ரேல் - காசாப் போரில் காசாவுக்கு ஆதரவாக பேசினார். மற்றொரு முக்கிய விஷயம் மக்களை எளிதில் அணுகக்கூடிய உத்திகளை கையாண்டவர். அதாவது உடை, உணவு, இருப்பிடம், இலவசப் பேருந்து சேவை என மக்களின் அடிப்படை தேவைகளை முன்னிறுத்தி தனது பிரச்சாரத்தை மேற்கொண்டார்.
இந்தியாவில் மும்மொழிக் கொள்கையால், பல்வேறு பிரச்சனைகள் எழுத்தொடங்கின. தமிழ்நாட்டின் பட்ஜெட் தாக்கலில் ரூபாய் குறியீடு எல்லாம் மாற்றப்பட்டு ரூ என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டது. மகாராஷ்டிராவில் பெரும் பூகம்பம் வெடித்தது. இதற்கு காரணம் ஹிந்தி திணிப்பு எனவும் வாதங்கள் வைக்கப்பட்டன.
இந்த புயல் ஓயத்தொடங்கிய சில மாதங்களில் அமெரிக்காவில் ஹிந்தியில் ஓட்டு கேட்டவர் மம்தானி. இவற்றையெல்லாம் தாண்டி மிக முக்கியமாக தமிழ்நாட்டு அரசியலை, இந்திய அரசியலை கையிலெடுத்தார். அதாவது புதிதாக வரும் கட்சிகள், எப்படி ஆளும் கட்சியை விமர்சித்து கவனம் பெறுகிறதோ, அதுபோல அமெரிக்காவின் முக்கிய தலை, அதாவது அதிபர் டிரம்புக்கும் நேரடி தாக்குதான்.

இன்னும் சொல்ல வேண்டுமானால் தனது பதவி ஏற்பு விழாவில் நேருவின் வரிகளை மேற்கோள் காட்டிப் பேசினார். இது இன்னும் கூடுதல் கவனத்தை பெற்றுத் தந்தது. இதுபோன்ற செயல்களால் இளம் வயதினர் மத்தியிலும் மிகவும் பிரபலமடைந்தார். சமூக வலைதளங்கள், குறிப்பாக இன்ஸ்டாகிராம் போன்ற பக்கங்களில் மம்தானி தனது பெயரை உச்சரித்த விதம் "The Name Is M-A-M-D-A-N-I" என்ற சொற்கள் பாடலாகவே வைரலானது. தற்போதுவரை வைரலாகிக்கொண்டுதான் இருக்கிறது.
இப்படி, யாரு சாமி நீ? என அனைவரும் ஆச்சயர்ப்பட்டு கூகுளில் தேட, 2025-ல் அதிகம் தேடப்பட்டவர்கள் பட்டியலில் இடம்பிடித்தார் நியூயார்க் மேயர் மம்தானி.
ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையாகிறார் கதையின் நாயகன் நிவாஸ் ஆதித்தன். ஒரு கட்டத்தில் ஆன்லைன் ஆப் மூலம் கடன் வாங்குகிறார். இதனால், எதிர்பாராத விபரீதத்தை சந்திக்கிறார்.
இந்த கடனில் சூழல் என்ன ?, அதில் இருந்து அவர் தப்பித்தாரா? இல்லையா? என்பது படத்தின் மீதிக்கதை..
நடிகர்கள்
கதையின் நாயகன் நிவாஸ் ஆதித்தன், உணர்வுப்பூர்வமாக நடித்துள்ளார். அளவாக நடித்து தனது கதாபாத்திரத்திற்கும், திரைக்கதைக்கும் பலம் சேர்த்திருக்கிறார். மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அபிநய், நாயகனுக்கு இணையாக கவனம் ஈர்க்கிறார்.
ஆத்விக், எஸ்தர் ஆகியோரின் நடிப்பு படத்திற்கு கூடுதல் பலம்.
இயக்கம்
ஒரு சம்பவத்தின் மூலம் பல உண்மைகளை சொல்ல முயற்சித்திருக்கிறார் இயக்குநர் அபிஷேக் லெஸ்லி. உண்மை சம்பவத்தின் பின்னணியில், அதிர்ச்சிகரமான கற்பனை மூலம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்த முயற்சிக்கிறார். ஆங்காங்கே படத்தின் ஓட்டத்தில் வரும் தொய்வு படத்திற்கு பலவீனம். கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.
இசை
படத்தின் பின்னணி இசை பாராட்டக்கூடியது.
ஒளிப்பதிவு
ஒளிப்பதிவாளர் சபரி நேர்த்தியாக காட்சிப்படுத்தியிருக்கிறார்.
ரேட்டிங்- 1.5/5
- மருத்துவமனையின் வளாகத்தில் ஒரு பெண் மருத்துவருக்கு நடந்த இந்த கொடூர சம்பவம் நாட்டையே உலுக்கியது.
- நாடு முழுவதும் உள்ள மருத்துவர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
நிர்பயா சம்பவத்தை எப்படி யாராலும் அவ்வளவு எளிதில் மறக்க முடியாதோ.. அதேபோல், கொல்கத்தாவில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தையும் யாராலும் மறக்க முடியாது...!
கடந்த 2024ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 9ம் தேதி அன்று மேற்கு வங்காள மாநிலம், கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் வளாகத்தில் ஒரு பெண் மருத்துவருக்கு நடந்த இந்த கொடூர சம்பவம் நாட்டையே உலுக்கியது.

ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் முதுநிலை பயிற்சி மருத்துவராக பயின்று வந்த 31 வயதான பெண் மருத்துவர், கடந்த ஆண்டு ஆகஸ்டு 8ம் தேதி இரவு பணியில் முடித்துவிட்டு மருத்துவமனையின் வளாகத்தில் உள்ள கருத்தரங்கக் கூட்டத்தில் அதிகாலை 3 மணியளவில் உறங்கச் சென்றார்.
மறுநாள் காலையில், அவர் தலை, முகம் சிதைக்கப்பட்ட நிலையில், சடலமாக மீட்கப்பட்டார். இதுதொடர்பாக நடந்த முதற்கட்ட விசாரணையில், பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து கொல்கத்தாவில் போராட்டங்கள் வெடித்தன. மாநிலத்தை தாண்டி நாடு முழுவதும் உள்ள மருத்துவர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அதுமட்டுமல்லாமல்.. மருத்துவர்கள் போராட்டத்தில் இறங்கினர்.

மருத்துவர்களுக்கும், குறிப்பாக பெண் மருத்துவர்களுக்கும் பாதுகாப்பு துளியும் இல்லை என அரசாங்கத்தை கண்டித்து பல்வேறு மாநிலங்களிலும் மருத்துவர்களும், மருத்துவ மாணவர்களும் போராட்டக் களத்தில் குதித்தனர். இதனால், மத்திய அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் அடுத்த கட்டத்தை எட்டியது. காவல்துறையினர் விசாரணைக் குழுவை அமைத்தனர். தீவிர விசாரணை மற்றும் சிசிடிவி ஆய்வை தொடர்ந்து, அதே மருத்துவமனையில் தன்னவார்வலராக பணியாற்றி வந்த சஞ்சய் ராய் என்ற நபரை அதிரடியாக கைது செய்தனர்.இதைதொடர்ந்து மருத்துவக் கல்லூரி முதல்வர் சந்தீப் கோஷ் ராஜினாமா செய்தார்.
உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து கொல்கத்தா பாலியல் வன்கொடுமை-கொலை வழக்கை விசாரித்தது. நாடு முழுவதும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாதது குறித்து உச்சநீதிமன்றம் கவலை தெரிவித்தது. அதோடு, ஒரு தேசிய விசாரணைக் குழுவை அமைத்தது.

போராட்டங்களின் எதிரொலியாகவும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் கோரிக்கையைத் தொடர்ந்தும், கொல்கத்தா உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் வழக்கு மத்திய புலனாய்வுப் பிரிவுக்கு (CBI) மாற்றப்பட்டது.
சிபிஐ தனது விசாரணையில், சஞ்சய் ராயை மட்டுமே பிரதான குற்றவாளியாக உறுதி செய்தது. இதற்கிடையே, சிபிஐ வழக்குப் பதிவு செய்து மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷை கைது செய்தது. முக்கிய குற்றவாளியான சஞ்சய் ராய் மீது சிபிஐ கடந்த அக்டோபர் 7ஆம் தேதி குற்றப் பத்திரிகையைத் தாக்கல் செய்தது.
இந்த வழக்கின் மீதான விசாரணை விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், 2025ம் ஆண்டு ஜனவரி மாதம் 18ம் தேதி அன்று இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சஞ்சய் ராய் குற்றவாளதி என சியால்டா மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. பின்னர் ஜனவரி 20ம் தேதி அன்று குற்றவாளி சஞ்சய் ராய்க்கு ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்தது.

குற்றவாளி சஞ்சய் ராய்க்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி அனிர்பன் தாஸ் தீர்ப்பளித்தார். ரூ.50,000 அபராதம் விதிக்கப்பட்டது. பாதிக்கப்பட்டவரின் குடும்பத்துக்கு மேற்கு வங்க அரசு ₹17 லட்சம் இழப்பீடு வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார். ஆனால், பாதிக்கப்பட்டவரின் குடும்பம் இந்த நிவாரணத் தொகையை வாங்க மறுத்துவிட்டனர்.
இருப்பினும், குற்றவாளி சஞ்சய் ராய்க்கு வழங்கப்பட்ட ஆயுள் தண்டனையை எதிர்த்து சிபிஐ தரப்பு கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பமும், சிபிஐயும் அவருக்கு மரண தண்டனை கோரி வருகின்றனர்.

மேற்கு வங்க அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட இதே கோரிக்கையை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது, ஆனால் சிபிஐயின் மனுவை ஏற்று விசாரணைக்கு எடுத்துள்ளது. அதன் மீதான பிரதான விசாரணை மற்றும் இறுதித் தீர்ப்பு இன்னும் நிலுவையில் உள்ளது.
கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணையில் உள்ளது. உயர் நீதிமன்றம், ஆயுள் தண்டனையை உறுதி செய்யலாமா அல்லது சிபிஐ கோரியபடி மரண தண்டனையாக மாற்றலாமா என்று முடிவு செய்யும்.






