என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தொழில்நுட்பச் செய்திகள்
X
அசத்தல் அம்சங்களுடன் உருவாகும் ஏர்பாட்ஸ் ப்ரோ 2
Byமாலை மலர்9 Dec 2021 11:29 AM GMT (Updated: 9 Dec 2021 11:29 AM GMT)
ஆப்பிள் நிறுவனம் சத்தமின்றி உருவாக்கி வரும் புதிய ஏர்பாட்ஸ் ப்ரோ 2 வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
ஆப்பிள் நிறுவனம் இரண்டாம் தலைமுறை ஏர்பாட்ஸ் ப்ரோ, புதிய ஆப்பிள் வாட்ச் மாடல்கள் மற்றும் புதிய ஐபோன் எஸ்.இ. உள்ளிட்ட சாதனங்களை அடுத்த ஆண்டு அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது.
தற்போது ஆப்பிள் வல்லுனரான மிங் சி கியோ அடுத்த ஆண்டு இலையுதிர்காலத்தில் ஆப்பிள் நிறுவனம் மூன்று ஆப்பிள் வாட்ச் மாடல்களை அறிமுகம் செய்யலாம் என தெரிவித்து இருக்கிறார். இவை வாட்ச் சீரிஸ் 8, வாட்ச் எஸ்.இ. மற்றும் ரக்கட் அல்லது ஸ்போர்ட்ஸ் வெர்ஷன் என அழைக்கப்படலாம். ஆப்பிள் வாட்ச் மட்டுமின்றி ஏர்பாட்ஸ் ப்ரோ 2 மாடலையும் ஆப்பிள் வெளியிட இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.
முந்தைய தகவல்களில் ஆப்பிள் ஏ.ஆர்./வி.ஆர். ஹெட்செட் மாடல்கள் அடுத்த ஆண்டு அறிமுகமாகும் என மிங் சி கியோ ஏற்கனவே தெரிவித்து இருந்தார். அணியக்கூடிய சாதனங்கள் மட்டுமின்றி புதிய ஐபோன் எஸ்.இ. 2023 ஆண்டு துவக்கத்தில் அறிமுகமாகும் என அவர் தெரிவித்து இருந்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X