என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தொழில்நுட்பம்
X
அதிகரிக்கும் எண்ணிக்கை - டூடுள் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் கூகுள்
Byமாலை மலர்6 April 2021 11:15 AM GMT (Updated: 6 April 2021 11:15 AM GMT)
கூகுள் தேடுப்பொறி சேவையில் அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் டூடுள் வெளியிடப்பட்டு இருக்கிறது.
கூகுள் நிறுவனம் இன்று வெளியிட்டு இருக்கும் டூடுள் பொது மக்களை முகக்கவசம் அணிய வலியுறுத்துகிறது. பொதுநல நோக்கில் வெளியிடப்பட்டு இருக்கும் டூடுளுடன் `முகக்கவசம் அணியுங்கள். உயிர்களை காப்பாற்றுங்கள்' என கோரும் தகவல் இடம்பெற்று இருக்கிறது.
இந்தியாவில் கொரோனாவைரஸ் பாதிப்பின் இரண்டாவது அலை மிகவும் தீவிரமாகி இருக்கிறது. நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் முகக்கவசம் அணிவது மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றக்கோரி விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான தேவை அதிகரித்து உள்ளது.
விழிப்புணர்வை ஏற்படுத்தும் விசேஷ டூடுளில் கூகுள் எழுத்துக்கள் உருவங்களாக வடிவமைக்கப்பட்டு முகக்கவசம் அணிந்து இருப்பது போன்று உருவாக்கப்பட்டு உள்ளது. மேலும் `முகக்கவசங்கள் மிகவும் முக்கியமானவை. முகக்கவசம் அணிந்து உயிர்களை காப்பாற்றுங்கள்' எனும் வாசகம் இடம்பெற்று இருக்கிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X