என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தொழில்நுட்பம்
X
அரை மணி நேரத்தில் விற்று தீர்ந்த பிக்சல் ஸ்மார்ட்போன்
Byமாலை மலர்17 Oct 2020 7:14 AM GMT (Updated: 17 Oct 2020 7:14 AM GMT)
கூகுள் நிறுவனத்தின் பிக்சல் ஸ்மார்ட்போன் விற்பனை துவங்கிய அரை மணி நேரத்தில் விற்று தீர்ந்ததாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
கூகுள் நிறுவனம் தனது புதிய பிக்சல் 4ஏ ஸ்மார்ட்போனினை ப்ளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் இன் போது பிளாஷ் முறையில் விற்பனை செய்ய திட்டமிட்டது.
அந்த வகையில் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் பிக்சல் 4ஏ விற்பனை துவங்கியது. எனினும், விற்பனை துவங்கிய அரை மணி நேரத்தில் பிக்சல்4ஏ விற்று தீர்ந்ததாக அறிவிக்கப்பட்டு விட்டது. இதனை கூகுள் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் தளத்தில் பதிவிட்டு இருக்கிறது.
மேலும் விரைவில் பிக்சல் 4ஏ விற்பனைக்கு வரும் என்றும் அதுபற்றிய விவரங்களை வெளியிடுவதாகவும் கூகுள் இந்தியா தெரிவித்து இருக்கிறது. முதற்கட்டமாக பிக்சல் 4ஏ 6 ஜிபி + 128 ஜிபி மாடல் ப்ளிப்கார்ட் தளத்தில் ரூ. 29,999 விலையில் விற்பனைக்கு வந்தது.
பண்டிகை கால விற்பனை நிறைவுற்றதும், பிக்சல் 4ஏ மாடல் ரூ. 31,999 விலையில் விற்பனை செய்யப்படும் என கூகுள் ஏற்கனவே அறிவித்து இருந்தது. இதன் காரணமாக குறுகிய கால சலுகை வழங்கப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X