என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தொழில்நுட்பம்
X
இந்தியாவில் புதிய பெயரில் டிக்டாக் வெளியானதாக சமூக வலைதளங்களில் வைரலாகும் தகவல்
Byமாலை மலர்9 July 2020 4:14 AM GMT (Updated: 9 July 2020 4:14 AM GMT)
இந்திய சந்தையில் டிக்டாக் செயலி புதிய பெயரில் அறிமுகம் செய்யப்பட்டு இருப்பதாக சமூக வலைதளங்களில் வைரலாகும் தகவல்களில் கூறப்பட்டுள்ளது.
இந்தியாவில் டிக்டாக் உள்பட 59 சீன செயலிகளுக்கு சமீபத்தில் தடை விதிக்கப்பட்டது. சீன செயலிகள் தடை செய்யப்பதைத் தொடர்ந்து பல்வேறு இந்திய செயலிகள் மீதான வரவேற்பு அதிகரித்து வருகிறது. எனினும், சமூக வலைதளங்களில் வைரலாகும் தகவல்களில் இந்தியாவில் டிக்டாக் செயலி புதிய பெயரில் அறிமுகமாகி இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
உண்மையான டிக்டாக் செயலி தான் தற்சமயம் டிக்டாக் ப்ரோ எனும் பெயரில் வெளியாகி இருப்பதாக வைரல் தகவல்களில் கூறப்பட்டு வருகிறது. வைரல் பதிவுகளில் கூறப்பட்டுள்ள தகவல்களை பார்க்கும் போதே அதில் உண்மையில்லை என உறுதியாகிவிட்டது.
ஹேக்கர்கள் டிக்டாக் ப்ரோ எனும் செயலியை பயனர்களுக்கு வாட்ஸ்அப் செயலி மற்றும் எஸ்எம்எஸ் மூலம் அனுப்பி, இதனை டவுன்லோட் செய்ய கோரி வருகின்றனர். டிக்டாக் செயலிக்கு தடை விதிக்கப்பட்டு இருப்பதால், ஹேக்கர்கள் போலி செயலிகளின் டவுன்லோட்களை அதிகரித்துக் கொள்ள இதுபோன்ற முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வாட்ஸ்அப் மற்றும் எஸ்எம்எஸ் தளங்களில் பயனர்களுக்கு வரும் இதுபோன்ற குறுந்தகவல்கள் போலியானவை ஆகும். பயனர்களை டவுன்லோட் செய்யக் கோரும் டிக்டாக் ப்ரோ செயலி ஏபிகே தளத்தில் இருப்பதாக வைரல் தகவல்களில் கூறப்பட்டுள்ளது. ஏபிகே தள செயலிகள் பெரும்பாலும் மால்வேர் நிறைந்தவை ஆகும்.
பயனர்களுக்கு அனுப்பப்படும் குறுந்தகவல்களில், “Enjoy Tiktok Videos and also make Create Videos again. Now TikTok is only Available in (TikTok pro) So Download from below,” போன்ற வாசகம் எழுதப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து டிக்டாக் ப்ரோ ஏபிகே (APK) ஃபைல் இணைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு பரப்பப்படும் இணைய முகவரிகள் தீங்கு விளைவிக்கும் தகவல் நிறைந்தவை ஆகும். இவற்றை டவுன்லோட் செய்தவர்கள் வழங்கிய விவரங்களின் படி இந்த செயலியில் உண்மையான டிக்டாக் லோகோ போன்ற ஐகான் காணப்படுகிறது. செயலி இன்ஸ்டால் ஆகும் போது, போனின் கேமரா, மைக் போன்ற விவரங்களை இயக்க அனுமதி கோருகிறது.
கேட்கப்படும் அனுமதி வழங்கப்பட்டதும், செயலி போனில் அப்படியே இருக்கிறது. பெரும்பாலும் செயலியின் பின்புறம் மால்வேர் இருக்கும் என கூறப்படுகிறது. போலி செயலி கூகுள் பிளே ஸ்டோரில் கிடைக்கவில்லை. இதை கொண்டே இந்த செயலி போலியானது என அறிந்து கொள்ள முடியும்.
போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X