என் மலர்
தொழில்நுட்பம்

ஸ்மார்ட்போன் பயன்பாடு - கோப்புப்படம்
இந்தியாவில் செல்போன் விற்பனை 15 சதவீதம் வீழ்ச்சி
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இந்திய சந்தையில் செல்போன் விற்பனை 15 சதவீதம் சரிந்துள்ளது சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
கொரோனா பாதிப்பு காரணமாக இந்தியாவில் பல்வேறு தொழில்களில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. செல்போன் விற்பனையும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சர்வதேச அளவில் நடத்தப்பட்ட ஆய்வில் இந்தியாவில் 15 சதவீதம் செல்போன் விற்பனை சரிந்திருப்பதாக தெரிந்துள்ளது. மக்களிடம் பணம் புழங்குவது மிகவும் குறைந்துவிட்டதால் புதிய போன்களை வாங்குவதற்கு மக்களிடம் ஆர்வம் இல்லை என்பது தெரியவந்துள்ளது.

முன்னதாக ஜிஎஸ்டி வரி உயர்வு காரணமாக ஸ்மார்ட்போன் மாடல்களின் விலை உயர்த்தப்பட்டது. பல்வேறு நிறுவன மாடல்களின் விலை உயர்த்தப்பட்ட நிலையில், சியோமியின் ரெட்மி பிராண்டு தனது ஸ்மார்ட்போன்கள் விலையை அதிகரித்து இருக்கிறது.
Next Story






