என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தொழில்நுட்பம்
X
அக்டோபரில் அறிமுகமாகும் ஆப்பிள் சாதனம்
Byமாலை மலர்24 July 2019 11:44 AM GMT (Updated: 24 July 2019 11:44 AM GMT)
ஆப்பிள் நிறுவனத்தின் 16 இன்ச் மேக்புக் ப்ரோ மாடல் அக்டோபர் மாதம் அறிமுகமாகும் என தகவல் வெளியாகியுள்ளது.
ஆப்பிள் நிறுவனம் 16 இன்ச் அளவில் புதிய மேக்புக் ப்ரோ லேப்டாப்பை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. லேப்டாப் தவிர புதிய ஐபேட் மாடல்களும் அறிமுகமாகும் என கூறப்படுகிறது. இத்துடன் 13 இன்ச் மேக்புக் ப்ரோ மற்றும் ரெட்டினா மேக்புக் ஏர் மாடல்களின் மேம்பட்ட வெர்ஷன் அறிமுகம் செய்யப்படும் என தெரிகிறது.
சர்வதேச சந்தையில் 16 இன்ச் மேக்புக் ப்ரோ துவக்க விலை 3000 டாலர்கள் முதல் துவங்கும் என தகவல் வெளியாகியுள்ளது. 16 இன்ச் மாடலில் 3072x1920 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட எல்.சி.டி. டிஸ்ப்ளே வழங்கப்படும் என கூறப்படுகிறது. சமீபத்தில் ஆப்பிள் நிறுவனம் தனது மேக்புக் ஏர் மாடல்களை அப்டேட் செய்து ட்ரூ டோன் டிஸ்ப்ளே வழங்கியது.
இதைத் தொடர்ந்து அக்டோபரில் அறிமுகமாக இருக்கும் மேக்புக் ஏர் மாடலில் புதிய பிராசஸர்கள், மேம்பட்ட செயல்திறன் வழங்கும் என தெரிகிறது.
16 இன்ச் மாடலுடன் அறிமுகமாக இருக்கும் 13 இன்ச் மேக்புக் ப்ரோ மாடலில் ஏற்கனவே இரண்டு தண்டர்போல்ட் 3 போர்ட்கள் வழங்கப்பட்டுள்ளன. புதிய அப்டேட்களில் 32 ஜி.பி. ரேம் ஆப்ஷன் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X