search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    தீப்பிடித்து எரியும் ஆபத்து இருப்பதால் மேக்புக் மாடல்களை திரும்பப் பெறும் ஆப்பிள்
    X

    தீப்பிடித்து எரியும் ஆபத்து இருப்பதால் மேக்புக் மாடல்களை திரும்பப் பெறும் ஆப்பிள்

    ஆப்பிள் நிறுவனம் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான 15-இன்ச் மேக்புக் ப்ரோ யூனிட்களை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது.



    ஆப்பிள் உற்பத்தி செய்த சில 15 இன்ச் மேக்புக் ப்ரோ மாடல்களின் பேட்டரி அதிக சூடாகி தீப்பிடித்து எரியும் அபாயம் இருப்பதால் அவற்றை திரும்பப் பெறுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

    இந்த மாடல்கள் செப்டம்பர் 2015 முதல் பிப்ரவரி 2017 வரையிலான காலக்கட்டத்தில் விற்பனை செய்யப்பட்டவை ஆகும். அபாயம் உள்ள லேப்டாப்கள் சீரியல் நம்பர் மூலம் கண்டறிந்து கொள்ளலாம் என ஆப்பிள் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஆப்பிள் மேக்புக் ப்ரோ வைத்திருப்போர் தங்களது சாதனம் பாதிக்கப்பட்டிருக்கிறதா என்பதை கண்டறிய, திரையின் இடதுபுறம் மேல்பக்கமாக இருக்கும் ஆப்பிள் மெனுவை க்ளிக் செய்ய வேண்டும். மேக்புக் ப்ரோ (ரெட்டினா, 15 இன்ச் ) மாடல்களை வைத்திருப்பவர்கள் தங்களது சீரியல் நம்பரை அதற்கென வழங்கப்பட்டு இருக்கும் பகுதியில் பதிவிட வேண்டும்.



    இவ்வாறு செய்வதன் மூலம் நீங்கள் பேட்டரியை மாற்றிக் கொள்ள முடியுமா என தெரிந்து கொள்ளலாம். பாதிக்கப்பட்ட மேக்புக் ப்ரோ யூனிட்களை பயன்படுத்த வேண்டாம் என ஆப்பிள் தனது வாடிக்கையாளர்களிடம் கேட்டுக் கொண்டிருக்கிறது. மேலே குறிப்பிடப்பட்ட மாடல்களை தவிர திரும்பப் பெறும் வகையில் எந்த யூனிட்களும் பாதிக்கப்படவில்லை.

    முன்னதாக சாம்சங் தனது கேலக்ஸி நோட் 7 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை திரும்பப் பெற்றது. இவற்றின் பேட்டரியில் ஏற்பட்ட பிழை காரணமாக ஸ்மார்ட்போன்கள் வெடித்துச் சிதறியதால் அவை முழுமையாக திரும்பப் பெறப்பட்டன.
    Next Story
    ×