search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வைகை எக்ஸ்பிரஸ் ரெயில்"

    • வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் கடந்த 1977 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-ந்தேதி அறிமுகப்படுத்தப்பட்டது.
    • இந்தியாவிலேயே முதன் முறையாக மீட்டர்கேஜில் குளிர்சாதன வசதி அறிமுகப்படுத்தப்பட்டது வைகை எக்ஸ்பிரஸ் ரெயிலில்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

    மதுரை:

    இந்தியா முழுவதும் இன்று 77-வது ஆண்டு சுதந்திர தினத்தை நாட்டு மக்கள் தங்களது வீடுகளில் மூவர்ண தேசியக்கொடி ஏற்றி வைத்து வெகு விமரிசையாக கொண்டாடி வருகிறார்கள். இந்தநிலையில், தமிழகத்தின் தென் மாவட்டங்களின் வளர்ச்சிக்கு ஆதரமாக திகழும் வைகை எக்ஸ்பிரஸ் ரெயிலின் 46-வது பிறந்த நாளும் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

    இதையொட்டி ரெயில் என்ஜினுக்கு தீபாராதனை மற்றும் பூஜைகள் செய்து ரெயில் என்ஜினுக்கு வாழை மரம் தோரணம் கட்டி ரெயில் பெட்டிகளுக்கு வண்ண மலர்களால் அலங்காரம் செய்தும், கேக் வெட்டியும், ரெயில் ஓட்டுனர்களுக்கு மரியாதை செய்தும் உற்சாகமாக கொண்டாடினர்.

    வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் கடந்த 1977 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-ந்தேதி அறிமுகப்படுத்தப்பட்டது. சென்னை-மதுரைக்கு இடையே பகல் நேர விரைவு ரெயிலாக உள்ள இந்த ரெயில் தென்மாவட்ட வணிகர்கள் மற்றும் பொதுமக்களுக்கு பெரிதும் பயனுள்ளதாக உள்ளது.

    இந்த ரெயில் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டிலேயே மீட்டர் கேஜ் ரெயில் பாதையில் மணிக்கு 105 கி.மீ. வேகத்தில் சென்ற இந்தியாவின் அதிவிரைவு ரெயில் என்ற பெருமையைப் பெற்றது. ஆசியாவிலேயே மீட்டர் கேஜில் அதிவேகமாக இயக்கப்பட்ட ரெயில் என்ற பெருமையும் வைகை எக்ஸ்பிரசுக்கு உண்டு. வைகை எக்ஸ்பிரஸ், பகல் நேரத்தில் சென்னைக்குப் பயணம் செய்யும் பயணிகளின் வசதிக்காக தொடங்கி வைக்கப்பட்டது.

    நாள்தோறும் மதுரையிலிருந்து காலை 7.10 மணிக்குப் புறப்பட்டு பிற்பகல் 2.35 மணிக்கு சென்னையை சென்றடையும். மொத்த பயண நேரம் 7 மணி 25 நிமிடங்கள். அதேபோன்று மறுமார்க்கமாக சென்னையிலிருந்து பிற்பகல் 1.40 மணிக்குப் புறப்பட்டு இரவு 9.15 மணியளவில் மதுரை வந்தடையும்.

    இதில் மொத்த பயண நேரம் 7 மணி 35 நிமிடங்கள் ஆகும். மதுரை கோட்டத்தில் முதல் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயிலாக வைகை எக்ஸ்பிரஸ் அறிமுகப்படுத்தப்பட்டு பயணிகளின் ஏகோபித்த ஆதரவை பெற்றுள்ளது. நாள்தோறும் இந்த ரெயிலில் சென்னை-மதுரை, மதுரை-சென்னை மார்க்கமாக 5 ஆயிரம் பேர் பயணம் செய்கின்றனர்.

    ஒரு வழிப்பயண தூரம் என்று பார்த்தால் 497 கி.மீ. ஆகும். ஆண்டிற்கு 3 லட்சத்து 65 ஆயிரம் கி.மீ. தூரம் பயணம் செய்கிறது. இந்த 46 ஆண்டுகளில் தோராயமாக 1 கோடியே 77 லட்சத்து 30 ஆயிரம் கி.மீ. தூரம் பயணம் செய்து சாதனை படைத்துள்ளது.

    இந்தியாவிலேயே முதன் முறையாக மீட்டர்கேஜில் குளிர்சாதன வசதி அறிமுகப்படுத்தப்பட்டது வைகை எக்ஸ்பிரஸ் ரெயிலில்தான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை தொடங்கி 46 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் வகையில் மதுரை சந்திப்பு ரெயில் நிலையத்தில் வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் பயணிகள் அதனை இயக்கும் பைலட்டுகளுக்கு மாலை அணிவித்தும், கேக் வெட்டியும் சக பயணிகளுக்கும் வழங்கினர்.

    • இந்தியாவின் அதிவிரைவு ரெயில் என்ற பெருமையை பெற்றது.
    • மதுரை கோட்டத்தில் முதல் சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் என்று வர்ணிக்கப்படும் இந்த ரெயில்.

    மதுரை:

    சென்னை-மதுரை இடையே வைகை எக்ஸ்பிரஸ் ரெயில், 1977-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ந் தேதி அறிமுகம் ஆனது. அப்போது மீட்டர் கேஜ் பாதையில் மணிக்கு 105 கி.மீ. வேகத்தில் சென்று, 'இந்தியாவின் அதிவிரைவு ரெயில்' என்ற பெருமையை பெற்றது.

    'மதுரை கோட்டத்தில் முதல் சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ்' என்று வர்ணிக்கப்படும் இந்த ரெயில், ஆசியாவிலேயே மீட்டர் கேஜ் பாதையில், அதிவேகமாக இயக்கப்பட்ட ரெயிலும் ஆகும். மதுரையில் இருந்து தினமும் காலை 7.10 மணிக்கு புறப்பட்டு, சென்னைக்கு மதியம் 2.35 மணிக்கு சென்று வருகிறது. மறு மார்க்கத்தில் சென்னையில் இருந்து மதியம் 1.40 மணிக்கு புறப்படும் ரெயில், இரவு 9.15 மணிக்கு மதுரை வரும்.

    இந்தியாவிலேயே முதன் முறையாக மீட்டர்கேஜில் குளிர்சாதன வசதி அறிமுகப்படுத்தப்பட்டது, வைகை எக்ஸ்பிரஸ் ரெயிலில் தான். இதில் நாள்தோறும் சென்னை-மதுரை, மதுரை-சென்னை இரு மார்க்கங்களிலும் சுமார் 5 ஆயிரம் பேர் பயணம் செல்கின்றனர்.

    ஒருவழிப் பயண தூரம் 497 கி.மீ. ஆகும். ஆண்டுக்கு 3 லட்சத்து 65 ஆயிரம் கி.மீ. தூரம் வைகை எக்ஸ்பிரஸ் பயணம் செய்கிறது. இதுவரை 1 கோடியே 73 லட்சத்து 65 ஆயிரம் கி.மீ. தூரத்துக்கு பயணம் செய்துள்ளது. தென் மாவட்டங்களின் வளர்ச்சிக்கு ஆதாரமாக திகழும் வைகை எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு இன்று 45-வது பிறந்தநாள். இதையொட்டி மதுைர ரெயில் நிலையத்தில் பயணிகள் கேக் வெட்டி கொண்டாடினர்.

    வைகை எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு சிறப்பு பூஜை நடத்தது. ரெயில் என்ஜின் பைலட்டுக்கு சந்தன மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

    வைகை எக்ஸ்பிரஸ் ரெயிலில் வேலை பார்த்து ஓய்வு பெற்ற என்ஜின் டிரைவர் அய்யலு கூறுகையில், "இன்றைக்கு நவீன வசதிகளோடு, வைகை மதுரை-சென்னை இடையே வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் பயணம் செய்கிறது. இதில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. வைகை எக்ஸ்பிரஸில் பணியாற்றியது எங்களைப்போன்ற என்ஜின் டிரைவர்களுக்கு பெருமை தரக் கூடியதாக இருந்தது என்றார்.

    ×