search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வேலை வாய்ப்பு மையம்"

    • பட்டதாரி ஆசிரியர், கல்வியாளர் 2222 பணி காலியிடங்கள்
    • கலெக்டர் ஸ்ரீதர் அறிவிப்பு

    நாகர்கோவில் :

    குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியி ருப்பதாவது:-

    தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையத்தால் பட்டதாரி ஆசிரியர், கல்வியாளர்கள் பணிக்கு 2222 பணி காலியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்வுக் கான கல்வித்தகுதி ஏதாவது ஒரு பட்டப்படிப்புடன் தொடக்க கல்வியில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும் அல்லது இளங்கலை 4 வருட பி.ஏ., பி.எஸ்.சி.,பி.எட். அல்லது பி.ஏ., பி.எட்., பி.எஸ்.சி. பி.எட். முடித்திருக்க வேண்டும்.

    இதனுடன் கட்டாயம் டெட் பேப்பர்-2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

    இப்போட்டி தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் வருகிற 30-ந்தேதி ஆகும். இத்தேர்வு நடை பெறும் நாள் 07-01-2024. இப்போட்டி தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வைத்து நடத்தப்படவுள்ளது. இப்போட்டி தேர்வுக்கான அறிமுக வகுப்பு 17-11-2023 காலை 11 மணியளவில் நாகர்கோவில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வைத்து நடைபெறவுள்ளது. இத்தேர்வுகள் பற்றிய மேலும் விவரங்களுக்கு trb.nic.in என்ற இணையதளத்திற்கு சென்று தெரிந்து கொள்ளலாம்.

    இந்த இலவச பயிற்சி வகுப்பில் சேர விரும்பும் மாணவர்கள் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் மற்றும் ஆதார் அட்டை நகல் ஆகிய ஆவணங்களுடன் நாகர்கோவில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரடியாக வருகை புரிந்து 30-11-2023-ம் தேதிக்குள் தங்களது பெயரை பதிவு செய்து கொள்ளுமாறும், முதலில் வரும் 80 மாணவர்கள் மட்டுமே இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ள முடியும் என்ற விவரம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

    இந்த பயிற்சி வகுப்புகள் அனுபவம் வாய்ந்த பயிற்றுனர்களை கொண்டும், ஸ்மார்ட் போர்டு வகுப்புகள் மூலமும் பாடம் நடத்தப்பட்டு வருகிறது. இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொள்பவர்களுக்கு பாடக்குறிப்புகள் இலவசமாக வழங்கப்படும்.

    மேலும் வாரந்திர மாதிரித் தேர்வுகள் தொடர்ச்சியாக நடைபெறவுள்ளது. மேலும் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் இணையதளமான https://tamilnaducareerservices.tn.gov.in என்ற இணைய தளத்தில் அனைத்து விதமான போட்டித் தேர்வுகளுக்கு பாடக்குறிப்புகள் மற்றும் இணையதள மாதிரி தேர்வுகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மதுரை வேலைவாய்ப்பு மையத்தில் நாளை ஆட்கள் தேர்வு நடக்கிறது.
    • நாளை (12-ந் தேதி) காலை 10 மணிக்கு மதுரை புதூரில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மையத்திற்கு வரவேண்டும்.

    மதுரை

    மதுரை புதூரில் உள்ள மாவட்ட வேலை வாய்ப்பு மையத்தில் நாளை (12-ந்தேதி) தனியார் துறை ஆட்கள் தேர்வு முகாம் நடக்கிறது. 10-ம் வகுப்பு முதல் முதுநிலை பட்டம் வரையிலும், ஐடிஐ சுருக்கெழுத்து தட்டச்சர் மற்றும் டிப்ளமோ நர்சிங், நர்சிங், பிசியோதெரபி படித்தவர்கள் இதில் கலந்து கொண்டு தகுதிக்கேற்ப தனியார் நிறுவனங்களில் பணி நியமனம் பெறலாம். இதற்காக வேலை தேடுவோர் மற்றும் தனியார் நிறுவனங்கள் வேலைநாடுநர்கள் http://www.tnprivatejobs.tn.gov.in இணைய தளத்தில் சுயவிவரங்களைப் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

    முகாமில் கலந்து கொள்ள விரும்புவோர் கல்விச்சான்றிதழ், குடும்ப அடையாள அட்டை, ஆதார் அட்டை மற்றும் புகைப்படத்துடன் நாளை (12-ந் தேதி) காலை 10 மணிக்கு மதுரை புதூரில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மையத்திற்கு வரவேண்டும். தனியார் நிறுவனங்களில் பணி நியமனம் பெறுவதால், வேலைவாய்ப்பு அலுவலகப்பதிவு பாதிக்கப்படாது" என்று மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு மைய துணை இயக்குநர் சண்முகசுந்தர் தெரிவித்தார்.

    ×