search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Recruitment Centre"

    • வருகிற 1-ந்தேதி மாலை 5.45 மணி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன.
    • முதுநிலை பட்டப்படிப்பு படித்தவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

    கள்ளக்குறிச்சி:

    தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டின்கீழ் இயங்கும் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்கள், கூட்டுறவு நகர வங்கி, பணியாளர் கூட்டுறவு கடன் சங்கங்கள், கூட்டுறவு தொடக்க வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகள், மற்றும் தொடக்க கூட்டுறவு பண்டகசாலையில் காலி யாக உள்ள இளநிலை உதவியாளர், உதவியாளர் காலிப்பணி யிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பிட ஏதுவாக கள்ளக்குறிச்சி மாவட்ட ஆள்சேர்ப்புநிலையத்தால் அறிவிப்புவெளியிடப் பட்டுள்ளது. இந்த தேர்வுக்கு தகுதியானவிண்ணப்ப தாரர்களிடமிருந்துஎன்ற இணையதளம் வழியாக மட்டுமே வருகிற 1-ந்தேதி மாலை 5.45 மணி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன.

    இதற்கான எழுத்துத் தேர்வு வருகின்ற 24-ந் தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரைகள்ளக்குறிச்சி மாவட்ட ஆள்சேர்ப்பு நிலை யத்தால் நடைபெற உள்ளது. விண்ணப்பதாரர்களின் கல்வித் தகுதி ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு12, 10 மற்றும் கூட்டுறவுபயிற்சி ஆகும். புனே வைகுந்த் மேத்தா தேசிய கூட்டுறவு நிறுவனம், வழங்கும் முதுநிலை வாணிப மேலாண்மை (கூட்டுறவு) பட்டம் மற்றும் பல்கலைக்கழக மானியக் குழுவால் அங்கீகரிக் கப்பட்ட ஏதேனும் ஒரு பல்கலைக் கழகத்தால் வழங்கப்படும் கூட்டுறவில் முதுநிலை பட்டப்படிப்பு படித்தவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

    மேலும், கூட்டுறவு மேலாண்மை பயிற்சி முடித்து தேர்வு முடிவு கள் நிலுவையில் இருப்ப வர்களும், தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தால் நடத்தப்படும் கூட்டுறவு மேலாண்மை நிலையங்க ளில் 2023-2024-ம் ஆண்டு நேரடி பயிற்சி, அஞ்சல்வழி, பகுதிநேர கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சிக்கு சேர்ந்துள்ள வர்களும் இப்பணிக்கு உரிய சான்று, கட்டணம் செலுத்தி யதற்கான ரசீதினை கள்ளக் குறிச்சி மாவட்ட ஆள்சேர்ப்பு இணைய தளத்தில் பதிவேற்றம் செய்து விண்ணப்பிக்க லாம். இத் தகவலை கள்ளக் குறிச்சி மாவட்ட கலெக்டர்ஷ்ரவன் குமார் தகவல் தெரிவித்துள்ளார்.

    • மதுரை வேலைவாய்ப்பு மையத்தில் நாளை ஆட்கள் தேர்வு நடக்கிறது.
    • நாளை (12-ந் தேதி) காலை 10 மணிக்கு மதுரை புதூரில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மையத்திற்கு வரவேண்டும்.

    மதுரை

    மதுரை புதூரில் உள்ள மாவட்ட வேலை வாய்ப்பு மையத்தில் நாளை (12-ந்தேதி) தனியார் துறை ஆட்கள் தேர்வு முகாம் நடக்கிறது. 10-ம் வகுப்பு முதல் முதுநிலை பட்டம் வரையிலும், ஐடிஐ சுருக்கெழுத்து தட்டச்சர் மற்றும் டிப்ளமோ நர்சிங், நர்சிங், பிசியோதெரபி படித்தவர்கள் இதில் கலந்து கொண்டு தகுதிக்கேற்ப தனியார் நிறுவனங்களில் பணி நியமனம் பெறலாம். இதற்காக வேலை தேடுவோர் மற்றும் தனியார் நிறுவனங்கள் வேலைநாடுநர்கள் http://www.tnprivatejobs.tn.gov.in இணைய தளத்தில் சுயவிவரங்களைப் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

    முகாமில் கலந்து கொள்ள விரும்புவோர் கல்விச்சான்றிதழ், குடும்ப அடையாள அட்டை, ஆதார் அட்டை மற்றும் புகைப்படத்துடன் நாளை (12-ந் தேதி) காலை 10 மணிக்கு மதுரை புதூரில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மையத்திற்கு வரவேண்டும். தனியார் நிறுவனங்களில் பணி நியமனம் பெறுவதால், வேலைவாய்ப்பு அலுவலகப்பதிவு பாதிக்கப்படாது" என்று மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு மைய துணை இயக்குநர் சண்முகசுந்தர் தெரிவித்தார்.

    ×