search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரி"

    வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள திருமுருகன் காந்திக்கு 3-வது நாளாக இன்றும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. #ThirumuruganGandhi
    வேலூர்:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தை கண்டித்து மே-17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி ஐ.நா. சபையில் பேசினார்.

    பின்னர், நாடு திரும்பிய அவர் கைது செய்யப்பட்டு கடந்த ஆகஸ்ட் 11-ந் தேதி வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் திருமுருகன் காந்திக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

    வயிற்றுப்போக்கு, மயக்கம், மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்டார். மருத்துவ பரிசோதனையில் அவரது உணவு குழாயில் பிரச்சனை இருப்பது தெரிந்தது.

    இதையடுத்து, உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்ட திருமுருகன் காந்தி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    ஐ.எம்.சி.யு. பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள திருமுருகன் காந்திக்கு 3-வது நாளாக இன்றும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    நேற்று திருமுருகன் காந்தியின் தந்தை, சகோதரி உள்ளிட்ட குடும்பத்தினர் சந்தித்து பார்த்தனர். மேலும் தமிழ்புலிகள் கட்சி தலைவர் நாகை திருவள்ளுவன் சந்தித்து நலம் விசாரித்தார்.

    தொடர்ந்து டாக்டர்கள் திருமுருகன் காந்தி உடல் நிலையை கண்காணித்து வருகின்றனர். #ThirumuruganGandhi
    வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்திக்கு உணவு குழாயில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். #ThirumuruganGandhi
    வேலூர்:

    மே-17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, ஐ.நா. சபை கூட்டத்தில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து பேசிவிட்டு நாடு திரும்பிய போது கைது செய்யப்பட்டார்.

    கடந்த ஆகஸ்டு மாதம் 11-ந் தேதி வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டார். கடந்த சில நாட்களாக திருமுருகன் காந்திக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. கடந்த 24-ந்தேதி வயிற்று போக்கு, மயக்கம், மூச்சு திணறல் ஏற்பட்டது.

    இதையடுத்து அவரை வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் பலத்த பாதுகாப்புடன் அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டது.

    இதில் திருமுருகன் காந்திக்கு உணவு குழாயில் பிரச்சனை இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. அவருக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்க வேண்டுமென டாக்டர்கள் பரிந்துரை செய்தனர்.

    இதற்காக வேலூர் ஜெயிலில் இருந்து இன்று காலை திருமுருகன் காந்தியை அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. தொடர்ந்து அவரை சிகிச்சைக்காக வார்டில் அனுமதித்தனர். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் திருமுருகன் காந்திக்கு பலத்த பாதுகாப்பு அளிக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.  #ThirumuruganGandhi

    வேலூர் மாவட்டம் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் இருதய அறுவை சிகிச்சை வசதி, நவீன உபகரணங்கள் இல்லாததால் சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
    வேலூர்:

    வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கடந்த 2004ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இங்கு வேலூர், திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுக்கள் தினமும் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். மேலும் 500க்கும் மேற்பட்ட நோயாளிகள் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    ஆஸ்பத்திரி தொடங்கப்பட்டு 14 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் இருதய சிகிச்சை பிரிவு நவீன மருத்துவ உபகரணங்கள் இல்லாததால் செயல்படாத நிலைக்கு தள்ளபட்டுள்ளது.

    திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு ஆஸ்பத்திரிக்கு வரும் நோயாளிகளை சென்னைக்கு செல்லுமாறு கூறி அனுப்பி விடுகின்றனர்.

    இன்று காலை ஆம்பூரை சேர்ந்த சரஸ்வதி என்பவருக்கு திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டது. அவரை உடனே அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்தனர். ஆஸ்பத்திரியில் இருதய சிகிச்சைக்கான நவீன எந்திரங்கள் மற்றும் அறுவை சிகிச்சை செய்வதற்கான கேத் லேப் வசதி இல்லை எனக் கூறிய டாக்டர்கள் சரஸ்வதியை சென்னைக்க செல்லுமாறு அறிவுறத்தினர். அவரது குடும்பத்தினர் பயத்துடன் ஆம்புலன்சில் சென்னைக்கு அழைத்து சென்றனர்.

    இது போல பல சம்பவங்கள் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் அரங்கேறி வருகின்றன. அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் ரூ.3½ கோடி செலவில் இருதய அறுவை சிகிச்சைக்கான அரங்கு கட்டப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனை விரைந்து முடிக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

    மேலும் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அதற்கேற்ப நோயாளிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் தேவைகளையும் மருத்துவமனை நிர்வாகம் உடனுக்குடன் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மருத்துவமனையில் உள்ள அனைத்து பிரிவுகளுக்கும் அதிநவீன வசதி கொண்டு வர வேண்டும். மருத்துவக்கல்லூரியில் 4 துறைகளில் மட்டுமே பட்ட மேற்படிப்பு உள்ளது. அதேபோல் அனைத்து துறைகளிலும் பட்ட மேற்படிப்பு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
    ×