search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வேகமாக வந்த"

    • அதிக பாரம் ஏற்றிக்கொண்டு டிப்பர் லாரியை வேகமாக ஓட்டி வந்ததும் தெரிய வந்தது.
    • இதையடுத்து அவர்கள் லாரியை பறிமுதல் செய்தனர்.

    நம்பியூர்:

    ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே உள்ள பனங்காட்டு பாளையம் பகுதியில் அதிக பாரம் ஏற்றி கொண்டு ஒரு டிப்பர் லாரி வந்து கொண்டு இருந்தது.

    அந்த டிப்பர் லாரி வேகமாக வந்ததாக கூறப்படுகிறது. இதை கண்ட பொதுமக்கள் அந்த பகுதி யில் உள்ள ஒரு பள்ளியின் அருகே வந்த போது டிப்பர் லாரியை மடக்கி பிடித்து சிறை பிடித்தனர்.

    இது குறித்து நம்பியூர் தாலுகா அஞ்சனூர் கிராம நிர்வாக அலுவலர் ஈஸ்வரமூர்த்தி மற்றும் நில வருவாய் அலுவலர் ராஜாமணி ஆகியோருக்கு தகவல் தெரிந்தது.

    இதை யடுத்து நிலவருவாய் ஆய்வாளர் ராஜாமணி மற்றும் கிராம நிர்வாக அலுவலர் ஈஸ்வரமூர்த்தி ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்தனர். தொடர்ந்து டிப்பர் லாரி டிரைவரிடம் விசாரணை நடத்தினர்.

    இதில் டிப்பர் லாரியின் டிரைவர் அதிக பாரம் ஏற்றிக்கொண்டு லாரியை வேகமாக ஓட்டி வந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் லாரியை பறிமுதல் செய்தனர்.

    அதனை தொடர்ந்து வேமண்டம்பாளையம் நில வருவாய் ஆய்வாளர் ராஜா மணி நம்பியூர் தாசில்தாரி டம் பறிமுதல் செய்யப்பட்ட டிப்பர் லாரியை ஒப்படைத்தனர்.

    அதிக பாரம் ஏற்றி கொண்டு வேகமாக வந்த டிப்பர் லாரி மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தாசில்தார் பெரியசாமி உறுதி அளித்தார். இதை யடுத்து பொதுமக்கள் அங்கு இருந்து கலைந்து சென்றனர்.

    • போலீசார் ஸ்பீடு சென்சார் கருவி கொண்டு வாகன சோதனை நடத்தினர்.
    • அதிவேகமாக வந்த அரசு பஸ்களின் டிரை வர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.

    பெருந்துறை:

    ஈரோடு மாவட்டத்தில் சில வாகனங்கள் அதிவேக மாக வருவதாகவும் இதனால் விபத்துகள் ஏற்படுவதாகவும் போலீ சுக்கு புகார் வந்தது. இதை யடுத்து போலீசார் பல்வேறு பகுதிகளில் வாகன சோதனை செய்து வாகனங்களை பறிமுதல் செய்து வருகிறார்கள்.

    இதையொட்டி பெரு ந்துறை பகுதியில் வேகமாக வரும் வாகனங்களை கண்காணிக்கும் வகையில் பெருந்துறை ஆர்.டி.ஓ. சக்திவேல், இன்ஸ்பெக்டர் பாஸ்கர், போக்குவரத்து இன்ஸ்பெக்டர் பெரியசாமி, சப்-இன்ஸ்பெக்டர்கள் மோகன்ராஜ், சுகுமார் மற்றும் போலீசார் பெருந்துறை- கோவை மெயின் ரோடு பைபாஸ் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

    தொடர்ந்து போலீசார் ஸ்பீடு சென்சார் கருவி கொண்டு வாகன சோதனை நடத்தினர்.

    அப்போது அந்த வழியாக அதிவேகமாக வந்த அரசு பஸ்கள், தனியார் பஸ்கள், லாரி, வேன், கார், மற்றும் மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட சுமார் 40-க்கு மேற்பட்ட வாகனங்களுக்கு அபராதம் விதித்து நோட்டீஸ் வழங்க ப்பட்டது.

    இதைத் ெதாடர்ந்து அதிவேகமாக வந்த அரசு பஸ்களின் டிரை வர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது. அபராதம் விதிக்கப்பட்ட வாகன ஓட்டிகளுக்கு அவர்களின் வாகன வேகம் குறித்து விவரம் அவர்களுக்கு வழங்கப்பட்டது.

    ×