search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேகமாக வந்த வாகனங்கள் சென்சார் கருவி மூலம் கண்டறிந்து அபராதம் விதிப்பு
    X

    வேகமாக வந்த வாகனங்கள் சென்சார் கருவி மூலம் கண்டறிந்து அபராதம் விதிப்பு

    • போலீசார் ஸ்பீடு சென்சார் கருவி கொண்டு வாகன சோதனை நடத்தினர்.
    • அதிவேகமாக வந்த அரசு பஸ்களின் டிரை வர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.

    பெருந்துறை:

    ஈரோடு மாவட்டத்தில் சில வாகனங்கள் அதிவேக மாக வருவதாகவும் இதனால் விபத்துகள் ஏற்படுவதாகவும் போலீ சுக்கு புகார் வந்தது. இதை யடுத்து போலீசார் பல்வேறு பகுதிகளில் வாகன சோதனை செய்து வாகனங்களை பறிமுதல் செய்து வருகிறார்கள்.

    இதையொட்டி பெரு ந்துறை பகுதியில் வேகமாக வரும் வாகனங்களை கண்காணிக்கும் வகையில் பெருந்துறை ஆர்.டி.ஓ. சக்திவேல், இன்ஸ்பெக்டர் பாஸ்கர், போக்குவரத்து இன்ஸ்பெக்டர் பெரியசாமி, சப்-இன்ஸ்பெக்டர்கள் மோகன்ராஜ், சுகுமார் மற்றும் போலீசார் பெருந்துறை- கோவை மெயின் ரோடு பைபாஸ் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

    தொடர்ந்து போலீசார் ஸ்பீடு சென்சார் கருவி கொண்டு வாகன சோதனை நடத்தினர்.

    அப்போது அந்த வழியாக அதிவேகமாக வந்த அரசு பஸ்கள், தனியார் பஸ்கள், லாரி, வேன், கார், மற்றும் மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட சுமார் 40-க்கு மேற்பட்ட வாகனங்களுக்கு அபராதம் விதித்து நோட்டீஸ் வழங்க ப்பட்டது.

    இதைத் ெதாடர்ந்து அதிவேகமாக வந்த அரசு பஸ்களின் டிரை வர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது. அபராதம் விதிக்கப்பட்ட வாகன ஓட்டிகளுக்கு அவர்களின் வாகன வேகம் குறித்து விவரம் அவர்களுக்கு வழங்கப்பட்டது.

    Next Story
    ×